Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை....

இளங்கவியின் - கவிதை.....

முற்றத்தில்

வேப்பம் பூ கோலமிட...

வாசலுக்கு

வெற்றிலைகள் மாலையிட...

செம்பருத்தி பூ

வருவொரை வரவேற்க

ஆச்சியின்

எடுப்பான வெளிப்பல்லு

சொந்தங்களை

அன்பாக வரவேற்ற....

எங்கள்

அன்பான தமிழீழம்

அழிந்து

அடிமண்ணில் புதைந்ததுவே.....

இடப்பெயர்வில் தொடங்கி

பட்டினியில் தொடர்ந்து

பயத்திலே வாழ்ந்து

பாதியாய் செத்து; பின்னர்

மீதியும் செத்த; மானமுள்ள

தமிழினமாம்..! ;இன்று

மண்ணோடு மண்ணாக

மரணப் புதைகுழியில்....

கடைசிக் கதறலும்

கயவனுக்கு கேட்கவில்லை

கண்ணீரில் பல குழந்தை

அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை

ஆனாலும் தன் மரணம்

ஏனென்றுதான் புரியவில்லை

உயிருடன் உள் புதைந்த

அவர் ஓலம் தான் கேட்கிறதா..?

பதவிக்காய் சண்டையிடும்

ஓ நாய்கள் ஒரு திசையில்....

பாதியாய் கொன்றுவிட்ட

பட்டினியோ மறு திசையில்....

எம் கதறல் கேட்காத

மேற்குலகோ ஒரு திசையில்....

என் நேரமும் வாவென்று அழைத்த

மரணமோ மறு திசையில்...

இப்படி புயல்காற்றில் சிக்கி

பூச்சியாய் சிதைந்துவிட்டோம்

இவரின் புகைப்படங்களுக்காய் நாங்கள்

புதைகுழியில் புதைந்துவிட்டோம்......

மக்களின் உயிருக்காய்

நம் ஆயுதங்கள் மெளனிக்க

அதன் பின்னும் உன் அழிப்பில்

எம் மக்கள் மரணிக்க

புலிகள் ஒழிந்துவிட்டார்; என்று

புதிதாக அறிவித்தாய்

புலம்பிய நம் உறவை

உன் ஆயுதத்தால் மெளனித்தாய்

மேற்குலகு கேட்கவில்லை;இருந்தும்

எம் உணர்வு சாகவில்லை

நம் இறப்பிலும் ஈழந்தான்

எம் நினைவு மாறவில்லை.....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: வணக்கம் இளங்கவி. உங்களின் கவிதைகள் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றன.உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னை உங்கள் கவிதையின் விசிறி ஆக்கிவிட்டீர்கள் மிகவும் சந்தோசம்.அத்தோடு நான் இந்த தளத்துக்குள் உள்நுளையும் போது என்னை அன்போடு வரவேற்றமைக்கும் மிகவும் நன்றிகள்.

பிரியமுடன்-யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான தமிழீழம்

அழிந்து

அடிமண்ணில் புதைந்ததுவே.....

நன்றி இளங்கவி ..........புதைக்கபடவில்லை விதையாக விதைக்கபட்டு இருக்கிறது . அது வளர்ந்து ஆல விருட்சமாவது புலம்பெயர் உணார்வாளர் கையில் ,இளையவர் கையில் கொடுக்கபட்டு இருக்கிறது .......உலகம் முழுக்க பேசபட்டு இருக்கிறது .....அதைக்காத்து வளர்த்து முன்னெடுப்பது ஒவ்வொருவர் கையிலும்.i.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி கனாவுக்கு

என்/எங்கள் கவலையைப் பகிர்வதற்கு இன்னுமொரு நட்பு கிடைத்ததையிட்டு மிக்க சந்தோசம். தற்பொழுது நாடு இருக்கும் நிலையில் எனது எல்லா விதமான உணர்வுகளுக்கும் கவிதை எழுத முடியவில்லை, கவலைதான் மேலோங்கி நிற்கிறது. என் கவலையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

நிச்சயமாக இந்தக் கடமையை எல்லோரும் செய்யவேண்டுமென்பதுதான் எமது தலைமையின் விருப்பமும் கூட. இம் மண்ணுக்காக இறந்தவர்களின் லட்சியத்தை நிறைவேற்றவேண்டியது எங்கள் எல்லோரினதும் கடமையாகும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.