Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாளில் மீண்டும் உலகெங்கும் அணிதிரள்வோம்

Featured Replies

இலங்கை பயங்கரவாத அரசின் படுகொலைகளுக்கான தண்டனையை மனித உரிமையின் பேரால் நிறைவேற்ற சொல்லி உலகின் திசையெங்கும் ஒரே நாளில் மீண்டும் அணி திரள்வோம். ஏற்கனவே நாம் இனவழிப்பினை நிறுத்து எனும் கோரிக்கையுடன் ஒரே நாளில் பல நாடுகளில் எவ்வாறு செய்தோமோ, அதனை விட பன்மடங்கு ஓர்மத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மீண்டும் உலக கதவுகளில் ஓங்கித் தட்டுவோம்.

எஞ்சியிருக்கும் எம் மக்கள் மீதான இன்னொரு நரவேட்டையை சிங்களம் மீண்டும் அரங்கேற்ற விடாது தடுக்க வேண்டும் எனில் எமக்கிருக்கும் ஒரே தெரிவு இதுதான். தொடர் போராட்டங்களும், கவனயீர்ப்புகளும் மட்டுமே சிங்களத்தின் இன்னொரு இனவழிப்பை நிறுத்தவும், இனவழிப்பிற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவும் உதவும்.

முன்னர் இவ்வாறு செய்யும் போதெல்லாம், புலிகளை காப்பாற்ற செய்யும் போராட்டம் என முத்திரை குத்தப் பட்டு அலட்சியப் படுத்தப் பட்டது. இன்று புலிகள் இயக்கமே அழிந்து போய்விட்ட்டது என இலங்கை அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இனி நடக்க இருக்கும் போரரட்டங்கள் அனைத்தும் மக்களை பாதுக்காக்கவே என எம்மால் நிறுவ முடியும் என்பதை கருத்தில் கொள்க.

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எம் மக்களின் மீது இனி நடாத்த திட்டமிட்டுள்ள படுகொலைகளை தடுக்க முயற்சி எடுக்க தவறிய நாட்களாக போய்விடும் என்பதை மறக்காதீர்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தவிர்க்கமுடியாத நடவடிக்கை!

ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுப்பார்கள் என்று நினைக்கின்றேன் அல்லது நாங்கள் வற்புறுத்தவேண்டும்.

இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் சிங்கள அரசு வேட்டையாடும் எங்கள் உறவுகளைக் காக்கவும், உண்மைகளை வெளிக் கொணரவும் நேற்றைகளைவிட வீச்சாக, மாபெரும் மக்கள் வலிமையை உலகின் திசைகள் அதிர தெரிவிக்கவேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

நொறுங்கிவிடவில்லை.

இன்னும் மூர்க்கம் கொண்டு எழுந்துள்ளோம் என்பதை உலகின் திசைகள் அதிரும் கணத்தில் சிங்களம் உணரவேண்டும்.

சர்வதேசத்தின் குரல் அரசின் யுத்தக் கொடூரத்தில் பலியான அத்தனை ஆத்மாக்களில் ஏக குரலாக ஒலிக்க வைக்கவேண்டும்.

அகதி முகாம்கள் என்ற பேரில் சிங்களத்தால் நடத்தப்படும் அடிமை முகாம்களில் இருந்து எங்கள் உறவுகளை விடுவிக்க வேண்டும். கணக்கிலடங்கா வலிசுமந்த எங்கள் உறவுகளை நிரந்தர ஊனமாக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருகிறது. உலகின் கண்கள் இன்னும் திறக்கப்படாமல் அறிக்கை என்ற பேரில் பேசுவதுடன் முற்றுப் பெற்று விடுகிறது. அந்நிலையை மாற்றவேண்டும். மாற்றியே தீர வேண்டும் இல்லாவிட்டால் எங்களுடைய உறவுகளை நடைபிணமாக மாற்றும் சிறீலங்கா அரசின் செயல்களுக்குத் துணைபோனவர்கள் ஆக்கப்பட்டுவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களில் எமது ஒரே கோட்பாடாக எமது தாயக விடுதலையை முன்னிறுத்த வேண்டும்.

புலம் பெயர்ந்த மக்களே எம் தாயக விடுதலைக்காக போராட வேண்டும்.

இனவெறிகொண்ட சிங்கள அரசின் பொய்ப்ப்ரச்சாரத்தை எமக்குச்சாதகமாக்கி

ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் தமது ஒரே கோட்பாடாக ஈழவிடுதலையை முன்னிறுத்த வேண்டும்

ஈழத்தமிழன் இனவிடுதலை கீழைத்தெருக்களிலும்

மேலே கோட்டையிலும் குடாவிற்க்கப்பாலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்திற்கு மேலாக புலம் பெயர் நாடுகளில் எமது போராட்டம் தாயக செய்திகளால் சோர்வடைந்திருப்பது உண்மையே ........

ஆனால் இதுவே தொடர்ந்தால் ..... அங்கு நடந்த குற்றச் செயல்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாது .

அத்துடன் தற்பொது சிறிது ஆர்வம் காட்டிய மேற்குலக நாடுகளும் பின் வாங்கிவிடும் .

30,000 மக்கள் உடல் ஊனமுற்று இருக்கின்றார்கள் .

தாய் , தந்தையர் இறந்ததை கூட புரிந்து கொள்ளாத வயதில் சிறு குழந்தைகள் உள்ளார்கள் .

அவர்களின் எதிர்காலத்திற்காவது நாம் செயற்பட்டே ஆக வேண்டும் .

அந்தந்த நாடுகளில் இதுவரை போராட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள் , தாமதியாது மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்க ஒழுங்கு செய்ய வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.