Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்புடன் ஒரு தாய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெய்தியையும் வெளியிடும் முன், தற்போது இலங்கையில் உள்ள ஓட்டு மொத்த உண்மையான தமிழர், இயக்கம் எஞ்சியிருந்தால் பற்றி ஒருதடவை சிந்தியுங்கோ. அரசும் அரச கூட்டுபடையும் இயக்கம் முற்றாக இல்லை என்பதை ஏன் நாமும் ஆமாம் போட்டு உலகை தமிழராக நியாயம் நீதி கோரி தக்க ஆதாரங்களை திரட்டி விரைந்து செயட்படகூடாது. எல்லாம் முடிந்து விட்டது என்று கணக்கு காட்னவை இப்போ திடீரெந பத்தாயிர கணக்கு சொல்லுது????

நான் தமிழச்சியாய் தமிழுணர்வு இருப்பதால் கடந்த ஏழு மாதமாக என்கல்வியை, குடும்ப பராமரிப்பை தொடரமுடியாமல் அவதிபடுகிறேன். என்னால் முடிந்தவரை எனைசுற்றியுள்ள நம்மின, வேற்றின மக்களுக்கு நேற்று இன்று நாளை போல் தமிழர் நிலையை விளங்கபடுதுகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் என்னைப்பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது அனால் அவர்களே பின் நான் கூறியவை அதாரபூர்வமாக வேற்றின பத்திரிகைகளில் வரும்போது எனக்கு கவலை பட்டு கடிதம் எழுதுகிறார்கள். அனாலும் அவர்கள் என்னையும் என்குடும்பம் பாதிக்கப்பட்டதா என்பதில் தான் அதிகம் பார்க்கிறார்கள். மேட்கதயர்கள் பொதுவாக தான் தனது குடும்பம் என்பதில் அதிகம் கவனமானவர்கள். எம்மைபோல் அல்ல. இப்போதுள்ள ஐரோப்பிய சந்தாதிகள் போர்வாடை இன்றி வளர்வதால் (நம்மவரை சொல்லவில்லை) நாம் ஏன் எங்கோ நடப்பதுக்காக எம்வாழ்வை தொலைக்கிறோம் என்றும் நினைக்கிறார்கள். சில சமயம் விரக்தியே மிஞ்சுகிறது.

கடந்த சில நாட்களாக இன்டர் நெட் பார்த்து வெறுத்துப்போய் எழுதுகிறேன்.

எத்தனை வியாபாரம், எத்தனை விதண்டாவாதம், எத்தனை புலனாய்வுகள். இப்போ இவை தேவைதானா? என்னமோ மீண்டும் குண்டு சட்டிக்குள் குதிரையே! என்னையும்சேர்த்து.

பிற்குறிப்பு:

முன்பு ஒரு ஆங்கில இணையத்துக்கு கருத்து எழுதுங்கள் என்று யாழ் இணையத்தில் வந்ததை பார்த்து அந்த பக்கத்துக்கு சென்று பக்கத்திலுள்ள கருத்துக்களை வாசித்தபோது ஒருவர் எழுதியிருந்தார், யாழ் இணையத்தில் கருத்தெளுத சொன்னதால்தான் இவளவு கருத்துக்கள் வந்திருக்குது என்று. இந்த நபர் யாராயினும் தமிழ் வசிக்கதேரிந்தவர் என்பது் தெளிவாகிறது. ஆகவே மிகுதியை புரிந்துகொள்ளுங்கள்.

நட்புடன் ஒரு தாய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு ..........

.மேலுள்ள பதிவை யாழ் வாசகி ஒருவர் பதிந்து விடும்படி இ மெயில் மூலம் கேடார் அதனால்இதை பதிந்தேன். விரும்பியவார்கள் கருத்து எழுதினால் அவர் வாசிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளனென்பவன் தனது இனத்தினது உண்மை நிலைகண்டு, அது எழுச்சியாயினும் சரி வீழ்ச்சியாயினும் சரி சீர்தூக்கிப் பார்த்து, தனது இனத்தினது சுய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் செய்திகளை எடுத்து வருவதே பொருத்தமாகும். இது "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல்" இருக்கிறது. சில ஊடகங்களது செயற்பாடு. அதனை அவசரமாகக் காவிவருவதும் இதுபோன்றதே. இறுதி நாட்களில் வன்னியின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்று சாட்சிகளே இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளது. இருக்கின்ற முக்கிய சாட்சிகளை அழிக்கும் அல்லது செயலற்றதாக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது.தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர்கள் தொடர்பாக ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் செய்தோமா? இவர்களை விடுவிக்க என்ன செய்யலாம். சிறிலங்காவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையே இப்படியாயின், சாதாரண மக்களது நிலை என்ன? நாம் வாழும் நாடுகளில் உள்ள, எமது பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பான கோரிக்கைகளை அனுப்புவது கூட அவசியமானது.

நாங்கள் தற்போது என்ன தேவையோ அதனை நாம் செய்வதே எம்மினம் விடிவதற்கானதொரு வழியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.