Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:33 IST)

சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை

இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நக்கீரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

400 விடுதலைப் புலிகள் ஊடுறுவல்-சோனியா, ராகுல் தமிழகம் வர வேண்டாம் என எச்சரிக்கை

திங்கள்கிழமை, ஜூன் 1, 2009, 17:16 [iST]

டெல்லி: அகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் சில முக்கிய தலைவர்களைக் காணவில்லை என்று இலங்கை அரசே கூறியுள்ளது. குறிப்பாக உளவுப் பணிகளில் கில்லாடியான பொட்டு அம்மான் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

சோனியா - ராகுலுக்கு எச்சரிக்கை..

இந்த நிலையற்ற நிலை காரணமாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இப்போதைக்கு தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனராம்.

தற்ஸ்தமிழ்

பயம் இருக்குதில்ல :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு சேறு பூசி தமிழக மக்களை அடக்க நினைக்கினம்..! எங்கையாவது வெடிகுண்டு இப்ப கண்டுபிடிச்சு எடுக்கப்போகினம்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்ற நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும்.

மறுபுறத்தில்....................... மருண்டவனுக்கு இருண்டெதெல்லாம் பேய்தானே!!!!

400 போரளிகளை அல்ல இப்போது 4000 தானுக்களை உருவாகியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் துரோக தனத்தை தமிழனின் சாம்பலும் மன்னிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உ[ஒ]லவுத்துரையின் கருத்தால் அங்கு சென்ற ஈழ அகதிகளின் நிலை?? :lol::lol:

சோனியா ராகுல் தமிழகம் வருவதற்கு முன்னால் தமிழகத்தில் தமிழக மக்களுக்காகவும் , தமிழீழ மக்களுக்காகவும் பல இன்னல்களுக்கு இடையில் கொளத்தூர் மணி தலைமையில் போராடி வரும் பெரியார் திராவிடர் கழகத்தினை தடை செய்யும் முயற்சியில் ப.சிதம்பரம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் உலாவுகிறது. நக்கீரன் இதழிலும் போட்டுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பயம் இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உப்புத் திண்டவன் தண்ணி குடிப்பான். தப்து செய்தவன் தண்டனை கொள்வான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.