Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரித்தானியா கண்ணீர் வடிக்காது – டேவிட் மில்பாண்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்காக பிரித்தானியா ஒருபோதும் கண்ணீர் மல்காதென அந்நாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்பாண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும், டேவிட் மில்பாண்ட்டிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போத அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கம் அடைந்த ஓர் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார்.

கடந்த 28 ஆண்டு காலமாக யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கி அழிவுகளை எதிர்நோக்கிய யுத்த வலயங்களை புனர் நிர்மாணம் செய்வதில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டுமென டேவிட் மில்பாண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு தேவையான சகல உதவிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெளிநாடுகளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் பொகொல்லாகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குதல் மற்றும் அவர்களை மீளக் குடியமர்த்தல் போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

52 மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் அகதி முகாம்களில் கடமையாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகவும், இதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச சமூகம் காத்திரமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....10387&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes: இதுக்கு ஒண்ணும் குறச்சல் இல்ல..செத்துப்போன அப்பாவி மக்களுக்காக தன்னும் கண்ணீர் வடிக்க நீங்க தயார் இல்லாதபோது ஒரு போராட்ட அமைப்புக்கு எப்படி வடிப்பீங்க..
  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக ஐநாவில் பலமாக கேள்விக்கணைகள் மூலம் குரல் கொடுக்கும் மத்யூ லீ கூட புலிகளைப் பற்ற அடக்கியே வாசிக்கிறார். இல்லாவிட்டால் புலி ஆதரவாளன் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே உலக அரசியல் ஓட்டத்தைக் கற்ருக்கொண்டு செயல்பட நாம் பழகிக் கொள்ளவேண்டும். சக்கையை விட்டுவிட்டு சாற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்..!

நாம் கடந்த காலங்களில் அரசியல் சாணக்கியம் இல்லாது எமது போராட்டத்தை முன்னெடுத்ததே அழிவிற்கு ஒரு காரணம். 2001இன் பின் உலக ஓட்டத்தின் மாறுதல்களுக்கு எம்மை நாம் மாற்றத் தவறி விட்டோம்.

உலகில் ஒரு நியதி உள்ளது ..... "எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள்" ..... ஆனால் எம்மைப் பொறுத்த மட்டில் எல்லோரும் எதிரிகள். சிங்களவன், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸம், சீனா, வியட்நாம், ........ அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா எல்லோரும்..... எல்லோரும்! இனியாவது நண்பர்களை சேர்ப்போம்.

நாலெளுத்து சரியான நிலை எடுக்காவிடில் அழிந்து விடும். எமது கோஷங்கள் மாற்றப்பட வேண்டும்.

இவ்வளவு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுக்கே கவலைப்படவில்லையாம். அதுக்குள்ள இதைவேற செய்வினம் என்று எதிர்பார்ப்பமா????

கோபம் கோபமாய் வருது........!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்காக பிரித்தானியா ஒருபோதும் கண்ணீர் மல்காதென அந்நாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்பாண்ட் தெரிவித்துள்ளார்....

http://www.globaltamilnews.net/tamil_news....10387&cat=1

நீங்கள் தமிழருக்காகக் கண்ணீர் மல்கப் போவதில்லை என்பது எங்களுக்கு எப்பவோ தெரியும். அப்படி ஒரு கவலை இருந்த்திருந்தால், நீங்கள் சொரிலங்கவுக்கு பல தடவைகள் ஆயுதங்களை விற்பனை செய்து இருப்பீர்களா?

நீங்கள் கண்ணீர் வடித்தாலும் அது நீலிக்கண்ணீராக இருக்குமே தவிர இரங்கல் கண்ணீராக இருக்கவே இருக்காது!

நீங்கள் எங்கெல்லாம் போய் காலனித்துவம் அமைத்தீர்களோ அங்கெல்லாம் பிரச்னை தான் icon_angry.gif

சிங்களவன், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸம், சீனா, வியட்நாம், ........ அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா எல்லோரும்..... எல்லோரும்! இனியாவது நண்பர்களை சேர்ப்போம்
.

இவர்களுடன் நன்பர்களாக இருந்து எமது உரிமைகளை பெறுவோம்.கூடியிருந்து குழி பறிப்போம்,சிங்களவனுக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரித்தானியா கண்ணீர் வடிக்காது – டேவிட் மில்பாண்ட்

இவர் இப்படி சொல்லி போட்டார் என்று .நாங்களும் கோபமடைந்து வீரபான்டிய கட்டப்பொம்மன் மாதிரி "எமக்காக கண்ணீர் வடிக்க நீ என்ன எங்களின் மாமனா மச்சானா "" என்று டயலாக் பேசாமல் நடக்க வேண்டிய காரியங்களை அவர்கள் மூலமே செய்து முடிப்போம்..

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தினது இன்றைய அரசியல் இருப்புக் கேள்விக்குறியாகி, அனாதைகளாக நிற்பதற்கான காரணகர்த்தாக்களான உங்களுக்கு எப்படி கண்ணீர் வருமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியும். எம்மை அடைவு வைத்துவிட்டு சுரண்டலுக்கான தொடர் உரிமைகளை பெற்றுவந்தவர்கள் அல்லவா நீங்கள். இதற்கான காரணகர்த்தாக்களாக எமது முன்னாள் தமிழினத் தலைமைகளுக்கும் பங்கு அல்லது தொலைநோக்கற்ற பிரபுத்துவப்பார்வை என்பனவும் காரணமாகும்.அதனைப் பின்னாளில் பண்டாரம் நாயக்கா இல்லாது செய்தது வேறு விடயம். உங்களிடமோ .இந்த உலகிடமோ நியாயம் கிடைக்கப் போவதில்லையென்பதை இப்போதாவது எமதினம் புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்யலாம். எந்த வகையிலே எமதிளையோரினது சக்தியைத் திரட்டிச் சரியான திசை நோக்கிக் கொண்டு சென்று உரிய இலக்கை அடையலாம் என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. ஆனால் தமிழினமானது தனது இருப்பை உறுதிசெய்யும் விதமாக எந்தவிதமான செயற்பாட்டிலும் முழுமையாகப் பங்குபற்றுவதைக் காணமுடியாதுள்ள சூழலானது ஆரோக்கியமானதல்ல என்பதே இன்றைய நிலையாக உள்ளது.

எப்போது நாம் பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்றுத் தெளியப் போகிறோம் என்ற கேள்வி பெரும் மலையாகத் தொக்கி நிற்க, வெறும் கடுகளவிலானதொரு நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதான இந்த நிலையை எப்படிக் கடந்து செல்லப் போகிறோம். எப்படிக் மின்சாரக் கம்பிகளுக்குள்ளே சிறைவைக்கப்பட்டுள்ள தமிழினத்தை மீட்க்கப் போகிறோம்.எப்படி எமது எதிர்காலச் சந்ததியையும் எமது அடையாளங்களைப் பேணப்போகிறோம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்படி செய்தி பற்றி சற்று அவதானமாக இருப்பது நல்லது. ஏனெனில் இது மிலிபானட் ஐ சந்தித்த போகல்லாகம சொன்னது. மிலிபான்ட் இதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதும் இது தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி எதனையும் வெளியிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை தமிழில் மொழிபெயர்த்து தங்கள் செய்தியாளர் எழுதியது போல குளோபல்தமிழ்நியூஸ் பிரசுரித்துள்ளது. இதனை பிரதியெடுத்து ஜீரிவி உட்பட வேறு சில தமிழ் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.