Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற பாத்திரம் நாம் எல்லோரும் அறிந்ததே. அதாவது துரியோதனர்களை தவறான பாதையில் அழைத்து சென்று அவர்கள் அழிவிற்கு வழி வகுத்தவர் என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய இயல்பே அதுதான், அதனால்தான், தீய சகுனியுடன் சேர்ந்த துரிஒதணனும் மாண்டான் என்று பெரும்பாலானோர் நினைக்கலாம். நானும் அவ்வாறுதான் நினைத்திருந்தேன்.

சிறுவயதில் அம்புலிமாமா பத்திரிகையில் படித்த இது தொடர்பான உப கதை ஒன்று என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. அந்த கதை இப்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதை இதுதான்:

தாயாதி சண்டையில், துரியோதனன் தன்னுடைய உறவினறையும் (என்ன உறவு என்று சரியாக நினைவில்லை) அவருடைய அறுபது மகன்களையும் பாதாள சிறையில் அடைத்துவிடுகிறான். ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பருக்கை சோறு என்று பாதாள சிறையிலிருக்கும் சிறு துவாரம் வழியே அவர்களுக்கு அனுப்புகிறான்.

நேரடியாக கொல்லாமல், உணவு அனுப்புகிறேன் என்று வெளியுலகிற்கு சொல்லிக்கொண்டு, தங்கள் அனைவரையும் பூண்டோடு அழிப்பதே துரியோதனின் நோக்கம் என்று தெளிந்த அந்த உறவினர், தன்னுடைய மகன்கள் அனைவருடனும் ஆலோசனை செய்கிறார். சிறையிலிருந்து தப்பிப்பது முடியாத காரியம். ஒரு நாளைக்கு ஒரு பருக்கை வீதம் வரும் உணவைக்கொண்டு அனைவரும் உயிர் வாழ்வதும் இயலாத காரியம். ஆகவே யாராவது ஒருவர் ஒரு நாளைக்கு கிடைக்கும் அறுபது பருக்கை சோற்றையும் உண்டு உயிர் வாழ்ந்திருந்து, சமயம் கிடைத்தவுடன் துரியோதனனை பழிவாங்குவது என்று முடிவாகிறது. இந்த பணிக்கு சரியானவன் என்று புத்திகூர்மையும், சூழ்ச்சித் திறனும் மிகுந்த சகுனி தேர்ந்தெடுக்கப்படுகிறான். அந்த உறவினர் இறக்கும் தருவாயில், தன்னுடைய எலும்புகளில் இருந்து சொக்கட்டான் செய்து வைத்துகொள்ளும்படியும், விளையாட்டில் அவன் கேட்ட எண்ணிக்கையை அந்த சொக்கட்டான் தரும் என்றும், தக்க சமயத்தில் அது அவனுக்கு உதவும் என்றும் துரியோதனனிடம் கூறிவிட்டு உயிரிழக்கிறார்.

துரியோதனன் தன்னுடைய தந்தையின் எலும்பிலிருந்து சொக்கட்டான் செய்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறான். நீண்ட நாட்கள் செல்கிறது, அனைவரும் இறந்துவிட்டார்களா என்று அறியும் ஆர்வம் துரியோதனனுக்கு. பாதாள சிறையை திறக்க உத்தரவிடுகிறான். அங்கு சகுனி மட்டும் உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்று, "மாமா, அனைவரும் இறந்தாலும் நீங்கள் மட்டும் எப்படி உயிருடன் இருக்கிறீர்கள்?" என்று கேட்கிறான். அதற்கு சகுனி," மருமகனே! உன்மேல் உண்மையிலேயே பாசம் கொண்டவன் நான். வஞ்சகம் நிறைந்த பஞ்ச பாண்டவர்களிடமிருந்து உன்னை காக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை உயிரோடு வைத்திருக்கிறது" என்னும் கபட மொழிகள் கூறுகிறான். அதை கேட்டு மிகவும் மகிழ்ந்த துரியோதனன், சகுனியை தன் பக்கத்திலேயே தனக்கு ஆலோசனை கூறும்படி வைத்துகொள்கிறான்.

பலம் வாய்ந்த துரியோதனனை பாண்டவர்களால் மட்டுமே கொல்ல முடியும் என்று உணர்ந்த சகுனி ஆரம்பத்திலிருந்தே பாண்டவர்கள் துரியோதனனுக்கு விரோதிகள் என்று சொல்லி சொல்லி அவன் மனதில் விஷத்தை விதைக்கிறான். பாண்டவர்களுடன் தீராத பகையை உண்டாக்கி, இறுதியில் பாரத போரில் தன் பகை முடிக்கிறான்.

இந்த கதை சொல்லும் நீதி?

எதிரியை ஆயுதம் இல்லாவிட்டாலும் கூட அறிவால் வீழ்த்த முடியும்.

காலம் கூடும் வரை வஞ்சத்தோடு காத்திருக்க வேண்டும்.

"பகல் வெல்லும் கூகையை காக்கை இகல்

வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது"-குறள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே சகுனி பற்றிய இந்தச் செய்தி புதிதாக இருக்கிறது. ஆனால் கதை சொல்லும் உட்கருத்து மிகவும் காத்திர‌மானது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சீனிவாசன் அவர்களே.

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

சகுனி மகாபாரதக் கதையில் வரும் கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். இப்படி தான் சகுனியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தந்திரத்தால் எதிரியை வெல்லவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.