Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது - மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு வெளிநாடு்ம் தலையிட முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும், இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். இலங்கையும் இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் என, புதுடில்லி வந்துள்ள இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை , இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்தியத் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் மேலும் பேசுகையில், நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையில் பயங்கரவாதம் இன்று ஒழிக்கப்பட்டுள்ளது. புலிகளால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா பிரதமரையே இழந்தது. இலங்கையும் இந்தியாவும் பிராந்திய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. அந்த வகையில், இலங்கை, இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இலங்கை, உள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அவசியம். அதற்கு வேண்டிய உதவிகளை, ஆதரவினை, வழங்குவோம். ஆனால் அதற்காக எந்தவொரு தீர்வினையும் நடைமுறைப்படுத்துங்கள் என ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம். 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்ட ஒரு சட்ட மூலம். அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களைப் பொறுத்த விடயம். இதனை அமுல்படுத்துங்கள் என இந்தியாவோ, அல்லது ஐ.நாவோ, நோர்வேயோ, அமெரிக்காவோ வலியுறுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் யுத்தத்தைத்தான் இலங்கை முன்னெடுத்ததாக ஜனாதிபதி கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளன. இலங்கையும் இந்தியாவும் பல்லின மக்கள் வாழும் ஜனநாயகநாடுகள். ஒரே வகையான கலாசாரத்தைக் கொண்ட நாடு. இருநாடுகளும் இனி எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புதுடில்லி வந்துள்ளதாகவும், அவர்கள் டில்லியில் பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுள்ளதாகவும், பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், இது விடயத்தில் இலங்கை அரசுத் தரப்பில் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை எனத் தெரிவித்தார். இந்தியா, இலங்கைப்பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும் என நம்புவதாகவும், இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் எனவும், தெரிவித்த அவர், தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே இந்திய, இலங்கை மீடியாக்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது எனவும் குறிப்பிட்டார்.

" நீங்கல்லாம் உப்புமா பெமிலி ஆயிட்டதா கூடச் சொல்லலாம்..ஆனா மீடியா இந்தச் செய்தியத்தான் வெளியிடனும்னு சொல்றது என்னங்க ஞாயம்..?"

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...s-rehabiliation

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் எனவும்

அற்புதங்களை நடத்திக்காட்டுங்கோ நாங்களும் பார்த்து ரசிக்கிறோம் செட்டா.

இலங்கையும் இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் ...

அவர் மேலும் பேசுகையில், நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும்...

அந்த வகையில், இலங்கை, இந்திய அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்...

ஒரே வகையான கலாசாரத்தைக் கொண்ட நாடு. இருநாடுகளும் இனி எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்....

இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

:unsure:

...............

..........

.......

48610371.jpg

Edited by குட்டி

இன்னும் நக்க இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி வந்துள்ள இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை ,
:icon_idea::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.