Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிமேகலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவர். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் சொல்லுவார்கள். இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் என்னும் வணிகன், தலைவி கண்ணகி கற்பிற் சிறந்த குடும்பப் பெண், கோவலனின் மனைவி. இவர்களின் கதையே.. :P

விளக்கத்துக்கு நன்றி அனித்தா.. நானும் அந்த கதையை படித்து இருக்கிறேன்.. ஆனால் தலைப்புத்தான் மறந்துவிட்டேன்..

  • Replies 99
  • Views 18k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

துயில் எழுப்பிய காதை

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவிலே இறக்கிவிட்டு, மணிமேகலையின் இனிய நினைவுகளால் புரண்டு கொண்ட தூங்காது எதை எதையோ கற்பனை செய்து கொண்டிருந்த உதயகுமாரனைச் சந்தித்ததும் அவனுக்கு அறிவுரை கூறியது. நீ வீணான முயற்சிகளில் இறங்கி உன் மனதை வருத்திக் கொள்ளாதே. அவள் புனித்மானவள், தவ வாழ்க்கையை மேற்கொண்டவள் என்பனவற்றை எல்லாம் மறந்து விடாதே." இவ்வாறு உதயகுமாரனுக்கு அறிவுறுத்தி விட்டு மணிமேகலா தெய்வம் நேராக சுதமதி தூங்கிக்கொண்டிருந்த இடம் சென்றது.

சுதமதியிடம் மணிமேகலா தெய்வம் உரைத்தது.

உவவனம் சென்ற மணிமேகலா தெய்வம் சுதமதியை எழுப்பி தன்னை இன்னார் எனக் கூறியது, இந்திரவிழாவை காணவந்த விபரத்தையும் தெரிவித்தது, மணிமேகலையின் துன்பத்தை தாம் அறிந்ததாகவும் கூறியது. மணிமேகலைக்கு புத்த மதத்தில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும், அவளைத்தாமே எடுத்துச்சென்று மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு வைத்திருப்பதாகவும் அவள் தம்முடைய முற்பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு இன்னும் ஏழு தினங்களுக்குள் இங்கு வந்து சேருவாள் என்றும் உரைத்தது. மணிமேகலை இவ்வாறு வரும் நாளில் அந்த இடத்தில் சில அற்புதங்கள் நிகழும் என்றும், மாதவியிடம் தான் வந்து மணிமேகலையைத் தூக்கிச்சென்ற விபரத்தை கூறுமாறு சொல்லியது.

மாதவிக்குத் தன்னை தெரியும் என்றும் , மணிமேகலையை பெயர் சூட்டக் கோவலனும் மாதவியும் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது, தமது குல தெய்வத்தின் பெயரை இடவேண்டும் என்று கோவலன் மாதவிக்கு கூறியதை நினைவு படுத்தி தம் பெயரைச் சூட்டியதும்.அந்தத் தெய்வம் அப்போது தெரியபடுத்தியது. குழந்தைக்கு 'மணிமேகலை" என்று பெயர் சூட்டிய அன்று இரவு , மாதவியின் கனவில் தாம் தோன்றி, காமன் எதுவும் செய்ய முடியாமல் ஏங்கும்படி மாபெரும் தவக்கொடியாம் பெண்ணணங்கைப் பெற்றாள் மாதவி என்று கூறி வாழ்த்தியதை அவளுக்கு கூறி நினைவு படுத்த வேண்டும் என்றும் அந்த தெய்வம் கேட்டுக் கொண்டது.. இவ்வாறு எல்லாம் கூறிவிட்டு மணிமேகலா தெய்வம் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டது. இவையனைத்தும் சுதமதிக்கு ஒரு கனவு போல் இருந்தது.

மணிமேகலா தெய்வம் கூறிய வண்ணம் அவள் அந்த சக்கரவளக்கோட்டம் வழியே சென்றாள் அந்தப் பெருஞ்சாலையில் சம்பாபதி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள தூணில் துவதிகன் என்பவனுடைய வடுவத்தை போன்று அமைக்கப்பட்ட பாவையிருந்தது. அந்தப்பாவை நாவுடைய பாவை என்றும் கூறுவார்கள். இந்தப்பாவை முக்காலத்தைப் பற்றியும் கூற வல்லது. அது சுதமதியிடம் பேச ஆரம்பித்தது. 'இரவிவர்மன் என்ற வேந்தனின் மகளே என்றும் துச்சன் என்ற அரசனின் மனைவியே என்றும் அவளை அழைத்தது. இதை உணர்ந்த சுதமதி விழித்தாள் முக்காலத்தையும் தெரிந்த பாவை விளக்கமாகப் பேசியது.

"உனது மூத்தாள் தாரை மது உண்டு மயங்கிய ஒரு யானையால் இறந்தாள்; அதைக் கேட்டப் பொறுக்க முடியாத நீயும் இறந்து போனாய். அந்தத் தாரை தான் மாதவி என்றும் கூறினாள். அப்பொழுது நீ வீரை என்னும் பெயருடன் உலவி வந்தாய், பின்னர் கௌசிகன் என்னும் அந்தணன் மகளாக வந்து பிறந்தாய். உன் இப்போதுள்ள பெயர் சுதமதியாகும். உனக்கு இலக்குமி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாள். அந்த இலக்குமி தான் இப்போது மாதவியின் மகளாக - மணிமேகலையாக வந்து பிறந்து இருக்கிறாள். இந்த மணிமேகலையும் தன்னுடைய பழம்பிறவியை உணர்ந்து தெளிந்தவளாய் இன்னும் ஏழு நாட்களில் இங்கு வந்து சேருவாள். நீ எதற்கும் அச்சம் அடைய வேண்டியது இல்லை என்று கூறியது.

பொழுது எப்போது புலரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சுதமதி, நன்றாக விடிந்ததும் விரைந்து சென்று முந்தைய இரவு நடந்த அனைத்தையும் சொன்னாள். சுதமதி சொல்லிய அனைத்தையும் கேட்ட மாதவி பெரிதும் வேதனைப்பட்டாள். மகளின் பிரிவால் பெரிதும் வாடினாள். அவளுக்கு வந்த துயரத்தை எண்ணி வருந்தினாள்.

  • தொடங்கியவர்

மணிபல்லவத்துக் துயர் உற்ற காதை

மணிமேகலை கண் விழிக்க அவள் பார்த்த காட்சிகள் அவளுக்கு புதுமையாகத் தோன்றியது. மணிபல்லவத்து மணல் வெளியில் உதிர்ந்து கிடந்த மலர் இதழ்களின் மேல் இரவெல்லாம் அவள் தூங்கி இருக்கிறாள். தாம் எங்குள்ளோம் என்று தெரியாத அவள் திகைப்புற்றாள். சுதமதியைக்காணாது பெரிதும் வருந்தினாள். சுதமதி தன்னை விட்டுவிட்டு எங்கயோ சென்று விட்டாள் என புலம்பலானாள்.கண்ணீருடன் புலம்பித்தவித்த மணிமேகலையின் முன்னர் ஒரு புத்தபீடிகை தீடீரென்று தோன்றியது.இந்தப் பீடிகையை அடைய வேண்டும் என்று கீழ்த்திசையை சார்ந்த நாக நாட்டு அரசர்கள் இருவர் போர் புரிந்தார்கள் என்பது வரலாறு. புத்தபீடிகையை கண்டதும்மணிமேகலை தம்முடைய சிவந்த கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கலானாள். அந்தப் பீடிகையை வணங்கியதும் அவள் முற்பிறப்பை பற்றி அறிந்து கொண்டாள்.

எப்போதும் கடலின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் அசோக நகரத்தை ஆண்ட இரவிவன்மன் மனைவியாம் அமுதபதி என்னும் பெருந்தேவியின் வயிற்றில் இலக்குமி என்னும் பெயருடன் பிறந்தேன் அத்திபதி என்னும் அரசனும் அவன் பெருந்தகை தேவியாம் சித்திரபுரத்தை ஆண்ட சீதரன் திருமகளாக விளங்கிய 'நீலபதி' என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்த இராகுலன் என்பவரின் மனைவியானேன். இவ்வாறு நாங்கள் இனிதே வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் உன்னிடம் வர இன்றிலிருந்து பதினாறாவது நாளில் என் கணவன் திட்டி விடம் என்னும் பாம்பு கடித்து இறப்பார் என்றும் நீ கூறினாய், மேலும் என் கணவரைத்தொடர்ந்து நானும் தீப்புகுந்து இறப்பதாகவும் உரைத்தாய். பின்னர் நான் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறக்கப் போவதாகவும் அங்கு சென்று பிறந்து வளர்ந்து வரும் நாளில் எனக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்படும் என்றும் தெரிவித்தாய்.

இந்தப் பெருந்துன்பத்தை மணிமேகலா தெய்வம் வந்து தீர்த்து வைப்பாள் என்றும் இந்தத் துன்பத்திலிருந்தும் என்னைக் காக்க, அந்தத் தெய்வமானது அங்கிருந்து யாரும் அறியா வண்ணம் தெந்திசை நோக்கி எடுத்துச் சென்று ஒரு தீவில் கொண்டு வைக்கும் என்றும் கூறினாய். புத்தபீடிகையை வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்றும் உரைத்தாய். இவ்வாறு நான் புத்த பீடிகையை தொழுது வணங்கும் போது எனது பழம் பிறப்புப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டேன்.என்னை அந்த தீவிற்கு கொண்டு வந்த தெய்வம் என் கணவனைப் பற்றிக் கூறும் என்றாய். அந்த தெய்வம் வந்தவுடன் எனது கணவனைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறன், எனவே அந்த தெய்வத்தை காண துடிக்கிறேன். அந்த தெய்வத்தை இதுவரை காணவில்லையே என்ன செய்வேன் என மணிமேகலை ஏங்கி அழுதாள்.

  • தொடங்கியவர்

மந்திரம் கொடுத்த காதை

புத்த பீடிகையை மணிமேகலை வணங்கி வந்ததால் அவள் தம்முடைய பழம் பிறவி பற்றி அறிய முடிந்தது. இவள் உண்மையிலே பெற்றவளாய் எண்ணினா. ஆகாயத்திலிருந்தும் ஒரு பூங்கொடி இறங்கி வந்தது போன்று அங்கே தோன்றியது அந்த மணிமேகலா தெய்வம்.!மணிமேகலா தெய்வம் புத்த பீடிகையை வணங்கிப் போற்றியதும் மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தை பார்த்து வணங்கியவளாய்" அருள் தாயே உன் ஒப்பற்ற திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கேயிருக்கிறான்? என்று மிக்க ஆர்வத்துடன் கேட்டாள்.

அன்புடையவளே நீயும் இராகுலனும் ஒரு நாள் மலர்ச்சோலையில் இருந்தபோது, நீ உன் கணவ்ருடன் ஊடல் செய்துகொண்டாய். உன் மீது உயிரையே வைத்திருந்த உன் கணவன் அந்த ஊடல் போக்க உன்னிடம் எவ்வளவோ அன்புடன் நடந்து கொண்டான். அவ்வேளை, வானத்திலிருந்து "சாது சக்கரன்" என்பவர் இறங்கி வந்து உங்கள் முன் தோன்றினார், நீ உடனே உன் கணவரிடம் கொண்ட கோபத்தை விட்டுவிட்டு, அவரை வணங்க ஆரம்பித்தாய். அதனால் உன் கணவனோ " யார் இவர்?? என்று கேட்டு நின்றான். இதைக் கேட்ட உன் உள்ளம் பதை பதைக்க ஆரம்பித்தது. தெய்வ அருள் பெற்ற ஒருவரை- எல்லோரும் வணங்கிப் போற்றுதற்குரிய மகானை போய் தன் கணவர் இவ்வாறு கேட்கிறாரே என்று எண்ணியவளாய் உன் கணவரின் வாயைப் பொத்தி " வந்திருப்பவரின் அருமை பெருமைகளை தெரியாமல் இவ்வாறு கேட்கலாமா என்று கோபித்து அவனையும் சேர்த்து அந்த தெய்வ அருள் பெற்ற முனிவரின் காலில் விழச் செய்தாய்.

இவ்விதம் இருவரும் அந்த முனிவரை வணங்கி அவரை உணவருந்திச் செல்லுமாறு அன்புடன் வெண்டினாய்.நீயும் உன் கணவரும் மிகவும் பய பக்தியுடன் உணவு பரிமாறினீர்கள். அன்று அந்த மாமுனிக்கு அன்புடன் உணவளித்து உண்ண வைத்த அறச் செயலே இப்பூது உன் பிறப்பை நீக்குதற்குக் காரணமாக அமைந்தது. அந்த உன் கணவனான இராகுலந்தான் இப்போது உன் மீது ஆறாக்காதல் கொண்டு உன்னை அடையத் துடிக்கும் உதயகுமாரன் ஆவான். உன்னிடம் அவன் காதல் கொண்டு அலைவது போன்று அவனிடமும் உன் மனம் நாடக் காரணமும் முற்பிறவியிலுள்ள கணவன் மனைவி உறவேயாகும். இவ்விதம் உன்னை அவன் நாடி திரிந்த காரணத்தால் தான் உன்னைச் சுதமதியிடமிருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்ன் என்றது அந்த தெய்வம். முற்பிறவியில் உனக்கு சகோதரிகளாக இருந்த தாரை வீரை என்பவரே இப்போ மாதவியும் சுதமதியும் ஆவர் என்று கூறினாள்.

நீ அறிய வேண்டியவைகளையும் பழைய பிறப்பு வரலாறுகளையும் அறியும் வாய்ப்பு பெற்றாய். மற்ற சமயவாதிகளுடைய கொள்கை என்ன , அவற்றின் சிறப்பு என்ன என்பவற்றையும் நீ அறிந்து கொள்வாய். அந்தச் சமயவாதிகள் உன்னை மிகவும் இளையவள் என்று கருதி உனக்கு அவை ப்ற்றிச் சொல்லாவிட்டால் நீ வேற்றுரு கொள்வது நல்லது. என்று கூறி அந்த தெய்வம் வேற்றுருவம் பெறத் தகுந்த மந்திரத்தையும் வான்வழியே செல்லத்தக்க சக்தி தரும் மந்திரத்தையும் உபதேசித்தது. "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல அற வழியில் செல்லல் உறுதி என்பதை உணர வேண்டும்" என்று கூறியவண்ணம் புறப்பட ஆயத்தமானது. பின்னர் மீண்டும் வந்து, உயர்ந்த விரத்ங்களை காத்து நிற்பவளே, உணவின் அடிப்படையில் தான் இந்த மக்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே இந்த கொடிய பசியை போக்கிடும் இந்த மந்திரத்தையும் நீ தெரிந்து கொள்வாய்: என்று மணிமேகலா தெய்வம் அந்த மந்திரத்தையும் மணிமேகலைக்கு கூறிச் சென்றது.

  • தொடங்கியவர்

பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரங்களை உரைத்து சென்ற பின்னர், மணிமேடலை ஓரளவு நிம்மதியுடன் அந்த தீவிலே உலவி வந்தாள். அவளுக்கு தன்னிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. முன்னர் அவள் உள்ளத்தில் இருந்துவந்த பயம் அவளை விட்டு நீங்கிவிட்டத்ய். மணிமேகலை அந்தத் தீவில் உலவிக் கொண்டிருக்கும் போது தீவதிலகை என்ற பெண் தோன்றினாள். அவள் யாரெனக் கேட்டதும் மணிமேகலை எல்லா உண்மையையும் சொன்னாள். மணிமேகலை தன்னைப் பற்றிக் கூறி மணிமேகலா தெய்வம் தூக்கி வந்து அருள் செய்வதை கூறியதும். மணிமேகலைபற்றி உயர்ந்த எண்ணாத்தை தீவதிலகை கொண்டாள். என்வே மணிமேகலையிடம் தன்னைப் பற்றி தெரிவித்தாள்.

தருமத் தலைவனாம் புத்த பெருமானது நல்லறத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் இந்தப் புகழ் பெற்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதால் நன்மைகளையெல்லாம் அடைவார்கள். தமது பழைய பிறப்பு உணர்வைப் பெறுவார்கள். எனினும் இங்கு வந்து இந்த புத்த பீடிகை முன்னால் குவளையும் நெய்தலும் நெருங்கி மலர்ந்து ஒளி விடும் கோமுகி என்னும் சிறப்பு கிக்க பொய்கை ஒன்று உள்ளது. புத்தபிரான் அவதரித்த நாளில் அமுதசுரபி என்னும் அருள் நிறைந்த உணவு வழங்கும் பாத்திரம் இந்த பொய்கைல் வெளிவந்து காணப்படும். இவ்வாறு அமுதசுரபி தோன்றும் அந்த ஒப்பற நாள். இந்நாள் தான். இதைப்பற்றி மேலதிக விவரம் தேவையாயின் நீ அறவணடிகளிடம் கேட்டு தெரிந்து கொள். என்றாள். மணிமேகலை இதை கேட்டு மகிழ்ந்தவளாய் மீண்டும் அந்தப் புத்த பீடிகையை வணங்கி எழுந்தாள்.

புத்த பீடிகையை உள்ளமுருக வேண்டிய மணிமேகலை, பின்னர் தீவதிலகையுடன் அவள் குறிப்பிட்டுக கூறீய புனித பொய்கையை அடைந்தாள். மணிமேகலை அந்த பொய்கைய சென்று வணங்கி நின்றதும் பொய்கையின் நடுப் பக்கத்திலிருந்து எழுந்த அமுதசுரபி விரைவாக மணிமேகலையின் கைகளை அடைந்தாள். அள்ள அள்ள குறையாது அமுதத்தை வழங்கும் அமுதசுரபி கிடைத்ததும் தீவதிலகை மணிமேகலையிடம் பசிப்பிணியின் கொடுமை பற்றிக் கூறினாள்.அவளுக்கு கிடைத்த அற்புத அமுதசுரபி மூலம் எண்ணற்றோரின் பசிபிணியை போக்குமாறு வேண்டினாள். உணவுக்கு ஏங்கும் அவல நிலை இனி இருக்க கூடாது என மணிமேகலை முடிவு செய்தாள்.

தெய்வம் கூறிய ஏழு நாட்கள் கழிந்து விட்டனவே இதுவரை மணிமேகலை வரக் காணோமே என மாதவி புத்தர் பள்ளியில் வாடிப் போய் நின்றாள். அதே நேரத்தில் மணி பல்லவத்தில் தீவதிலகை மணிமேகலையை புகாருக்கு புறப்படச் சொன்னாள். புத்தபீடிகையயும் தீவதிலகையும் வணங்கி கையில் அமுத சுரபியுடன் வானத்தின் வழி புறப்படும் மந்திரத்தை உச்சரித்த வண்ணாம் புறப்பட்டாள்.புகாரை அடைந்த மணிமேகலை தனது அவ்ர்களது முற்பிறப்பை பற்றி கூறி அந்த அமுதசுரபுயை வணங்குமாறு வேண்டினாள். மணிமேகலைத் தீவில் நடந்த நிகழ்ச்சியை கேட்ட அவர்கள் வியப்பும் மகிழ்வும் அடைந்தார்கள்.

  • தொடங்கியவர்

அறவண அடிகளை தொழுத காதை

அறவணடிகளைச் சந்திக்க வேண்டும் என்ற பேரவாவால் தன் தாயாருடனும் சுதமதியுடனும் புத்த பள்ளி சென்றாள். அறவணடிகள் எங்கு உள்ளார் என்று கேட்டு முதிய நிலையில் இருந்த அறவணடிகளை வணங்கி பணிந்து உபசரித்தாள்.. அடிகளிடம் மணிமேகலை தான் உவவனம் சென்றதையும்,அங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் ஒன்று விடாது கூறினாள். இவ்வாறு மணிமேகலை உரைத்ததும் அனைத்தும் கேட்டு அறிந்தார் அடிகள். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. மணிமேகலா தெய்வத்தின் அருள் பெற்ற மணிமேகலையை அவர் பெரிதும் பாராட்டியுரைத்தார்

அறவணடிகள் புத்த பெருமானின் பெருமைகளை கூறினார் அப்புறம் மணிமேகலையின் சிறப்புக்களை கூறினார்.

மணிமேகலா தெய்வத்தின் அருளைப் பெற்றவளே நீ இந்த நாட்டில் பலவிதமான அற்புதங்களை செய்ய போகிறாய். இவ்வாறு நீ நிகழ்த்த போகின்ற புதுமைகளுக்கு பிறகு தான் எனது அறிவுரைகள் உனது மனதில் ஆழமாகப் பதியும். உன்னுடன் வந்திருக்கும் மாதவி சுதமதி இருவரும் பாதபங்கஜ மலையை தரிசித்த பின்னர் புத்த பெருமானின் திருவடிகளை வணங்கி எல்லா விதமான தீய வினைகளிலிருந்தும் விலகி உயர் பெரும் வீட்டும் பேற்றையடைவார்கள். உன்னிடம் அளிக்கப்பட்ட அமுதசுரபியால் மக்கள் பசி மட்டுமன்றி தேவர்களின் பசியையும் போக்க வேண்டும்; இதுவே சிறந்த அறமாகும். எனவே இந்த உலகத்திலுள்ள அத்தனை உயிர்களின் பசிப்பிணியை தீர்த்து சிறப்புடன் வாழ்வாயாக என்று வாழ்த்த அவ்விதமே செய்வதாக மணிமேகலை பணிவுடன் கூறினாள்.

  • தொடங்கியவர்

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை மடக்கொடியாம் மணிமேகலைகருளிய ஆபுத்திரனின் வரலாற்றை அறவணடிகள் கூறினார். வாரணாசியில் அபஞ்சிகன் என்ற ஏழைப் பிராமணனின் மனைவி சாலி என்பவள் சந்தர்ப்ப வசத்தால் கற்பிழந்து விடுகிறாள். இந்தப் பாவத்தை போக்க தெற்கே கன்னியாகுமாரி முனை சென்று தீர்த்தமாடிச் செல்ல எண்ணிப் புறப்பட்டாள். ஒவ்வொரு ஊராகத் தங்கி தங்கி வந்தாள். அப்போது அவள் சூல் கொண்டிருந்த காரணத்தால் அவளால் மேலும் நடக்க முடியவில்லை. பாண்டி நாடு வந்த அவள் கொற்றாகைகருகே ஒரு தோட்டத்தில் ஆண் குழந்தையை ஈன்றாள். அவள் செய்த பாவச் செயலால் அந்தக் குழந்தையை பேணி வளர்க்க முடியாத நிலையில் சென்றாள். அந்த குழந்தை அழுதவண்ணம் இருந்தது. இதைக் கண்ட பசு ஒன்று பசித்து அழுது கொண்டிருந்த அக்குழந்தைக்கு தனது மடி பாலைக் கொடுத்தது.

அவ்வழியால் வந்த பூதி என்னும் பெயர் கொண்ட அந்தணன் அக்குழந்தையை எடுத்து ஆபுத்திரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வேள்வி என்ற பெயரால் பசுவை கொலை செய்து வரும் படுபாதகச் செயல்களை அவன் வெறுத்தான். இதனால் அவன் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி அவ்வூரை விட்டு துரத்தப்பட்டான். அந்த ஊரை விட்டு தென்மதுரை சென்று இரந்து கிடைத்ததில் பெரும் பங்கை கூன் குருடு எதுவுமே இயலாத ஏழையர் இஅவ்ர்களுக்கு அளித்து , மிஞ்சியதைத் தான் உண்டு வந்தான். நம் வயிற்றை வளர்ப்பதுக்கு மட்டுமல்லாது பிறர் வாழவும் கையேந்தினான். நோயால் துடித்து துவண்டவர்களுகெல்லாம் உதவினான்; அவர்களின் துரம் போக்கி ஒரு நிம்மதியைக் கண்டான்.

  • தொடங்கியவர்

பாத்திர மரபு கூறிய காதை

பசியால் வாடுவோர்க்கு தாம் இரந்து கொண்டு வந்தை அளித்து அவ்ர்கள் பசிபோக்கியவன் ஆபுத்திரன். ஒருநாளிரவு அம்பலத்தில் சிலர் வந்து அவனை எழுப்பி தம்பசியை பற்றிக் கூறினார்கள். ஏதாவது உதவியை அவன் செய்வான் என அவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவனால் அந்த இரவு எதையும் கொடுக்க முடியாதகாரணத்தால் பெரிதும் வருந்தினான், தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறுவதை விட இறைவனிடம் மனமுருக வேண்டினான். அவன் கண்களிலிருந்து நீர் சுரந்து பெருகியது. இவ்வளவு இரக்கப்பட்டு வேண்டிய ஆபுத்திரன் முன் சிந்தாதேவி தோன்றினாள். ஆபுத்திரா வருந்தாதே, இந்ததிருவோட்டில் உணவு இருக்கிறது. இந்த நாடே வறுமையுற்றாலும் இந்தத் திருவேட்டுக்குக் குறைவு வராது.. அள்ள அள்ளா பெருகிக் கொண்டே வரும். எனவே உன்னைப் பசி என நாடி வருபவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கிக் கொண்டே இரு. இது உயிர் காக்கும் உணவான் அமுதத்தை தருவதால், அதாவது சுரப்பதால். அமுத சுரபி என்று சொல்லலாம். என்று கூறி அதை அவனிடம் கொடுத்தது. ஆபுத்திரனுக்கு தெய்வத்தின் அருளால் அமுதசுரபி கிடைத்ததும் ஏழை எளியவர்களின் துயரை தீர்த்து வைத்தான்.

தேவலோகத்தில் வசிக்கும் இந்திரன் ஆபுத்திரனை அணுகி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஆபுத்திரா நான் இந்திரன் நீ அன்னதான்ம் செய்து எல்லோர் புகழையும் பெற்றாய், நீ இவ்வாறு செய்வதால் அதற்குரிய பயன் என்ன உண்டோ அதை என்னிடம் பெற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ஆபுத்திரன் நகைத்தான். இந்த நாட்டில் இல்லாதது வானுலகத்தில் என்ன இருக்கிறது என்று கர்வமாக பேசினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் அவனது கர்வத்தை போக்க எண்ணி நாட்டில் மழை வர செய்து பசி பட்டிணி எல்லாம் போக்கினான். இதனால். ஆபுத்திரனிடம் உணவு கேட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தது.இதனால் ஆபுத்திரன் பெரிதும் துயர் உற்றான். எனவே ஊரை விட்டு பாண்டி நாட்டை விட்டுச் செல்ல வேண்டியவன் ஆனான். ஒவ்வொரு இடமாகச் சென்று யாருக்காவது உணவு வேண்டுமா எனக் கேட்டான். இவ்விதம் கேட்டுக் கொண்டு த்ரிகிறானே இவன் என்ன பைத்தியமா என மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஊர்தோறும் நாடுதோறும் ஆபுத்திரன் அலைந்து கொண்டிருக்க சாவக நாட்டிலே கடுமையான பஞ்சம் என்று அவன் கேள்விப் பட்டான். எனவே அங்கு செல்ல எண்ணி அவன் கப்பல் ஏறிவிட்டான். கப்பலில் சென்று கொண்டிருந்தவன் கற்பனையில் மிதந்த வண்ணம் சென்றான். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது காற்று கடுமையாக வீசியதால் மேலே செல்ல முடியாது மணிபல்லவத்தில் கப்பல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிபல்லவத்தில் கப்பல் நின்றதால் ஆபுத்திரன் இறங்கி மணிபல்லவத்தை பார்த்து வர புறப்பட்டான். திரும்பி வருவதற்குள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன் மாலுமி கப்பலை ஓட்டிச் சென்று விட்டான். இதன் காரணத்தால் அவன் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது,

பல உயிர்களை காத்து போற்றுகின்ற அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டு தனி ஒரு மனிதன் சாப்பிடுவதில் என்ன நன்மை ஏற்படும் என்று எண்ணிய ஆபுத்திரனுக்கு வெறுப்பு தோன்றீயது. எனவே அவன் அமுதசுரபியை மேலும் வைத்துக் கொள்ள விரும்பாது. நீ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒப்புரவாளர்கள் யாராவது வந்தால் அவர்கள் உண்மையானவர்கள் என்றால் நீ அவர்களுடைய கைகளில் சென்று அடைய வேண்டும் அவ்ர்கள் மூலம் உன் தொண்டு சிறக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பாத்திரத்தை வண்ங்கி கோமுகி என்னும் பொய்கைல் வீசி எறிந்தான். பின்னர் உயிர் வாழ பிடிக்காது. உண்ணா நோன்பு இருக்க புறப்பட்டான். அப்போது அறவணடிகள் அங்கு சென்றிருக்கிறார். அவனைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டார் அவ்ர் எவ்வளவே சொல்லியும் கேட்காமல் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டான். அவன் விரும்பியது போல சாவக நாட்டு வேந்தனின் பசு வயிற்றில் பிறந்தான்

  • தொடங்கியவர்

பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை.

ஆபுத்திரனுக்கு பாலூட்டிய பசு தெய்வ அருளால் அதுக்கு பொன் கொம்புகளுடன் பொற் குழம்புகளுடனும் சாவக நாட்டிற்கு சென்று தவள மலை என்னும் மாமலயில் தவம் செய்து கொண்டிருந்த மண்முக முனிவரை அடைந்தது. இந்த மாமுனிவர் அந்தப் பசு வயிற்றில் இருந்து அற்புதங்கள் செய்யும் ஒருவன் பிறக்க போகிறான் என்றான். புத்தர் புறந்த வைகாச பூரண பௌர்ணமியன்று குறிப்பிட்ட பசுவின் வயிறில் ஆபுத்திரன் மீண்டும் வந்து பிறந்தான். அன்று பல நற்குறிகள் தோன்றின. இதே நற்குறிகள் புத்த பெருமான் பிறக்கும் போதும் ஏற்பட்டது என்று கூறக் கேட்ட சாவக மன்னன் தனக்கு வாரிசி இல்லாத காரணத்தால் அந்த அதிசய குழந்தையை தாம் வளர்க்க விரும்பினார். அவ்வாறு வந்தவனே தற்போதைய சாவக நாட்டு மன்னனாக விளங்கிறான். அங்கு இப்போது பெரும் பஞ்சம் ஆகவே அங்கு செல்லுமாறு கூறினார். அவரது கூற்றின் படியே மணிமேகலை தாயாருடனும் சுதமதியுடனும் அங்கு புறப்படலானாள்.

ஆபுத்திரன் மூலம் கிடைக்கப் பெற்ற அமுதசுரபுயில் முதலில் ஒரு பத்தினிப்பெண் பிச்சையிட வேண்டும் பின்னர் அந்திலிருந்து எடுக்க எடுக்க உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கும். எனவே பிக்குணி வேடம் பூண்டு கையில் அமுதசுரபியை கையில் ஏந்திய வண்ணம் நகர்ப்புற வீதியை அடைந்தாள்.பத்தினிப் பெண்ணொருத்தி தனது அமுதசுரபியில் உணவு இடுதலே சிறப்பாகும் எனக் கூற காயசண்டிகை எனும் பெண் அவளிடம் வந்து ஆதிரை என்ற உயர் கற்புடைய பெண்ணின் வீட்டைப் பற்றிக் கூறினாள்.

  • தொடங்கியவர்

ஆதிரை பிச்சையிட்ட காதை.

காயசண்டிகை ஆதிரையின் கற்பைப் பற்றி பெரிதும் போற்றியுரைத்தாள். தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு தானும் அவ்வழி செல்ல தீக்குளித்தாள். குளிர்ந்த நீர் போல் அத்தீயானது அவளைக் குளிப்பாட்டியது. இதனால் ஆதிரை பெரிதும் வேதனையுடன் கண்ணீர் உகுத்து நின்றாள் அப்போது ஒரு அசரீரி கேட்டது ஆதிரை உனது கணவன் உயிரோடிருக்கிறான்.அவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் பத்திரமாகவே உள்ளான் விரைவில் பொன்னுடனும் பொருளுடனும் இங்கு வந்து சேருவான். என்ற குரல் கேட்டு மகிழ்ந்தாள். ஆதிரை மணிமேகலையை பற்றி கேள்விப் பட்டவள் அவள் வெளியே வந்து மணிமேகலையை வண்ங்கி அவள் வைத்திருந்த பாத்திரதில். நிறையும் அளவு உணவிட்டாள். இந்த உலகத்தை பிடித்திருக்கும் பசிப்பிணி ஒழிய வேண்டும் என வாழ்த்தினாள்.

உங்கள் பணிக்கு நன்றி ரசிகை.

ரசிகை காதை காதை என எழுதுறீங்களே. அது என்ன கதை என்று வருமா? இல்லை அதற்கு வேறேதும் அர்த்தமா?

  • தொடங்கியவர்

ஒவ்வொரு பகுதியையும் காதை என்று சொல்கிறார்கள் எனக்கு சரியா தெரியவில்லை அதுக்கு என்ன அர்த்தம் என்று :?

  • தொடங்கியவர்

உலக அறவி புக்க காதை,

கற்புடைய செல்வி ஆதிரை இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருகி வளர்ந்த்து. இதனால் அமுதசுரபு வந்தவர்களுகெல்லாம் உணவு வழங்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழும் என்று மணிமேகலை நம்பினாள்.காயசண்டிகைக்கு ஆறாப் பசி. எவ்வளவு உணவு உண்டாலும் தன் பசி தீரவில்லை எனவே மணிமேகலையிடம் வேண்டினாள் நீ தான் எனது பசியை போக்க உணவு தந்தருள வேண்டும் என்று, மணிமேகலை அதிலிருந்து ஒரி பிடி உணவை எடுத்தி கொடுக்க அவளது கொடிய யானைப் பசி தணிந்தது. காயசண்டிகை தனக்கு ஏன் ஆறாப் பசி ஏற்பட்டது என்னும் வரலாற்றை மணிமேகலைக்கு கூறினாள். அத்துடன் சக்கரவாளக் கோட்டத்தில் செல்லுகின்ற பாதையில் உள்ள உலக அறவியில் பசியால் வாடுவார்கள் நோயால் நலிந்து போய் இருப்பார்கள் அங்கு மணிமேகலை சென்று அவ்ர்கள் துயர் துடைக்க வேண்டும் என அவள் வேண்டினாள்.

காயசண்டிகை கூறியது போன்று உலக அறிவிற்கு மணிமேகலை சென்றாள். சம்பாதி கோயிலையும் கந்திற் பாவையையும் வணங்கினாள். கையில் அமுதசுரபியுடன். அங்கு நின்று எல்லோரது பசியையும் போக்கினாள். அவர்களது முகமலர்ச்சி கண்டு தானும் மகிழ்வுற்றாள்.

  • தொடங்கியவர்

உதயகுமாரன் அம்பலம் புகுந்த கதை.

மணிமேகலை இவ்வாறு செய்வதை பெரிதும் விரும்பாத மாதவியின் தாயாரான சித்திராபதிக்கு கோவமும் வருத்தமும் ஏற்பட்டது. அவள் உதயகுமாரனை மாளிகை சென்று அவனைக் கண்டு அவன் மணிமேகலை மேல் கொண்ட ஆசையத் தூண்டி விட வேண்டும் என முடிவு செய்தாள். மணிமேகலை அடைய எண்ணி முயன்று பார்த்து தோல்வியுற்ற உதயகுமாரன் ஓரளவு அமைதியுடனே காணப்பட்டன் சித்திராபதின் தூண்டுதல் அவனிடம் மணிமேகலை பற்றிய எண்ணத்தை வளர்த்திட உதவியது. சித்திராபதியுன் தூண்டுதலால் எவ்விதமும் மணிமேகலையை அடைந்தே தீருவது என முடிவு செய்தான்.

உதயகுமாரன் மணிமேகலையை கண்டான். அவளது மாற்றத்துக்கு காரணம் யாதெனக் கேட்டான். மணிமேகலையும் பொறுமையுடன் அவனுக்கு அறிவுரை சொன்னாள். சொல்லிவிட்டு அவன் நின்ற இடத்தை விட்டு அகன்று சம்பாபதியின் கோயிலில் உட்பக்கம் சென்று விட்டாள். உண்மையான உருவத்துடன் இருத்தல் கூடாது என எண்ணியவளாய் வேற்றுருவம் கொள்ளும் மந்திரத்தை ஓதியபடி காயசண்டிகையின் உருவத்துடன் அமுதசுரபியைக் கைல் ஏந்தி வெளியே சென்றுவிட்டாள். உதயகுமாரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். தெய்வமே மணிமேகலை இன்றி என்னால் வாழ இயலாது என்ற நிலைக்கு ஆகிவிட்டேன் எனவே அவள் என்னுடன் வர இசைவது வரை நான் இங்குதான் இருப்பேன் என்று மணிமேகலையை எதிர்பார்த்து சூளுரைத்து நின்றான்.

  • தொடங்கியவர்

சிறை கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய காதை

மணிமேகலையுடன் தான் வெளியே செல்லப் போவதாக அவள் வரவில்லையானால் அந்த இடத்தை விட்டு தான் நகரப் போவதில்லை எனவும் உதயகுமாரன் சூளுரைக்க கேட்டதும் உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. "நீ ஆராயாமல் சூளுரைத்தனை " என்ற தெய்வக குரல் அவனை அச்சுறுத்தியது. எனவே மேற்கொண்டி அங்கு நிற்காமல் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி வெளியே வந்து விட்டான்

காயசண்டிகை உருவத்துடன் மணிமேகலை சிறைக்கோட்டத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளுடன் அன்பொழுக பேசி அவர்கள் பசி போக்கினாள். இதைக் கண்ட சிறைக்க் கோட்டத்து அதிகாரிகள் இந்த வியத்தகு செயலை மன்னருக்கு தெரிவித்தனர். இதனைக்கேட்ட மன்னன் அவளை அழைத்து வருமாறு கூறினான். அரச சபைக்கு வந்த மணிமேகலை மன்னை போற்றிப் பாடினாள். மன்னன் அவள் செஉஅல்களை பெரிதும் பாராட்டி தம்மிடமிருந்து எதையாவது கேட்குமாறு உத்தரவிட்டார். மணிமேகலை உடனே சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாக வேண்டும் என வேண்டினாள். அவள் வேண்டுகோளுக்கு இணங்க சிறைக் கோட்டமேல்லம் அறக் கோட்டமாகின.

  • தொடங்கியவர்

உதயகுமாரனை வாளால் எறிந்த காதை

அரசன் ஆணைப்படி எல்லாமே மாற்றப்பட்டன . இதற்கு காரணம் மணிமேகலை என மக்கள் பேசிக் கொண்டனர். மணிமேகலை எவ்விதமும் கவர்ந்து சென்று விடவேண்டும் என்று உலக அறிவியை அடைந்து அங்கேயே காத்திருந்தான். காயசண்டிகை ஊர் சென்றது அறியாதவானய் அவள் கணவன் காஞ்சனன் அங்கு வந்தான் மாறு வேடத்தில் இருப்பது மணிமேகலை என் அறியாத அவன் கஞ்சனையிடம் காதல் மொழி பேசலனான் ஆனால் மணிமேகலை அதை பொருட்படுத்தவில்லை. உதயகுமாரன் அவளை கூர்ந்து கவனித்திக் கொண்டிருந்தான். அவன் தன்னைக் கவனித்து கொண்டிருப்பதை பார்த்த மணிமேகலை காஞ்சனனுக்கு உரைப்பது போல் உதயகுமாரன் உணர வேண்டியும் முதிர்ந்த நிலையிலுள்ள கிழவியை காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.

காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலை இவ்வாறு கூற காஞ்சனன் தன்க்கு தான் இவைகளெல்லாம் தன் மனைவி கூறுகிறாள் என்று எண்ணி ஆத்திரப்பட்டான். அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவை அவளது கள்ளக்காதலன் என நினைத்துவிட்டான். உதயகுமாரன் காயசண்டிகையின் கள்ளக்காதலன் என நினைத்து அவனும் அவளும் சந்திக்கும் நேரத்தில் எப்படியும் அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். இனிமேலும் மணிமேகலை தன்னை ஏமாற்ற ஏலாது என்று எண்ணியவனய். யாருடைய துணையுமின்றி நள்ளிரவில் பதுங்கி பதுங்கி வந்தான். இதனைக் கண்ட காஞ்சனன் கோவம் கொண்டு அவனது வாளால் அவனை கொண்டான். .

அப்பொழுது காஞ்சனனெ தவறு செய்தாய் ஆத்திரத்தில் அறிவை இழந்து விட்டாய். உன் மனைவி காயசண்டிகை தன் இருப்பிடத்துக்கு எப்போதோ சென்றுவிட்டாள். நீ கண்டது உன் மனைவியை அல்ல மணிமேகலையை என்றும் உதயகுமாரன் அரசிளங்குமாரன் எனவும் அவனுக்கும் உன் மூலம் தண்டனை கிடைத்துவிட்டது அவன் இவ்வாறு இறக்க அவனது நீவினை பயனேஎ காரணம் எனக் கூறியது, இதனைக் கேட்ட காஞ்சனன் உடலும் உள்ளமும் துடித்தான். எவ்விதம் தட்டு தடுமாறி வெளியேறிவிட்டான்.

ரசிகை அக்கா...ரொம்ப நன்றி அக்கா...ரொம்பவே நன்றி..நான் இந்த கதைகள் ஒருபோதும் வாசித்ததில்லை..ஆனால் எனக்கு இப்படியான புராணக்கதைகள் ரொம்ப விருப்பம்.

தொடருங்கள்..

இதை எழுதி என்னை உங்கள் ரசிகை ஆக்கி விட்டீர்கள் :wink:

ரசிகைக்கே ரசிகையா? :P

  • தொடங்கியவர்

ரசிகைக்கே ரசிகையா? :P
:):lol:

ப்ரியசகி நன்றிகள் ரொம்ப புகழாதீங்கள் நான் படிச்சதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன் அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகைக்கே ரசிகையா? :P

அடுத்த லேடி சுப்பர் நீங்கள் தான் ரசிகை :)

  • தொடங்கியவர்

கந்திற்பாவை வருவது உரைத்த காதை

சம்பாபதியின் ஆலயத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மணிமேகலையின் காதில் கந்திற்வாவை கூறியது கேட்டது. அவள் அலறிப் புடைத்துக் கொண்டு வந்து பார்க்க வெட்டுண்டு கிடந்தான் உதயகுமாரன். முற்பிறப்பில் அவன் தன்னுடைய கணவன் என்பதால் கண்ணீர்வடித்து கதறினாள். காயசண்டிகை உருவத்தை களைந்து தம் சுய உருவம் கொண்டவளாய் உதயகுமாரன் பக்கத்தில் சென்று பேசலனாள்,.கதறி அழுதாள் உடல் கிடந்த இடத்தின் பக்கம் சென்றாள். அப்போது போகாதே அவன்ருகே போகாதே எனக் கூறி காந்திற் தெய்வம் தடுத்து விட்டது. நீயும் உதயகுமாரனும் பல பிறவிகளில் கணவன் மனைவியாக இருந்து இருக்கலாம்! பிறவியை ஒழிக்க முயலும் நீ இனிமேல் இதைப் பற்றி எண்ணுவதே தவறாகும் என்றது

மணிமேகலை அத்தெய்வத்தை வணங்கி உதயகுமாரன் அப்படி இறப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டாள். முற்பிறப்பிலே நீயும் உனது கணவனும் காயங்கரை ஆற்றின் கரையிலே அமர்ந்திருந்த பிரம தருமமுனிவருக்கு உணவளித்து சிறப்பிக்க எண்ணி விடியற்காலை சமையற்காரனை வர சொல்லி இருந்தீர்கள் அவன் நீங்கள் சொன்னது போல் வரமால் பொழுது புலர வந்தான். வந்தவன் கால் தடுக்கி அந்த பாத்திங்கள் மேலேயே விழுந்து விட்டான். இதனால் கோபங்கொண்டு உனது கணவன் வளால் வெட்டி கொண்டான். அத்தீவினையே அவன் இவ்வாறு இறக்க காரணமாவன். எனக் கூறியது. அத்துடன் மேலும் நடக்க இருப்பவைகளைக் கூறியது. கந்திற்பாவை மேலும் கூறியதாவது காஞ்சிநகர் மழை இன்றி வருந்தும் நீ அமுதசுரபியுடன் அங்கு சென்று மக்கள் துயர் துடைப்பாய். உன்னை மக்கள் எல்லொரும் புகழ்ந்துரைப்பார்கள். நீ சென்ற பிறகு அங்கு பல அற்புதங்கள் நடக்கும். தவ நெறியில் பற்றுதல் கொண்ட நீ மேலும் உயர் பெரும் தவநெறி வாழ்க்கை வாழ்ந்து உன்காலம் முழுவதையும் காஞ்சியிலே கழித்து அங்கேயே இறப்பாய். பின்னர் நீ உத்தர மாநாடு சென்று அங்கேயே பல பிறவிகளை எடுப்பாய். அந்தப் பிறவிகளில் ஆண் மகனாகவே பிறந்து புத்தரது தலை மாணவனாக் விளங்கி எவ்விதமும் இந்தப் பிறப்பை ஒழித்து மகிழ்வாய் என்றது. .

அன்புள்:ள மணிமேகலையே இன்னும் கேட்பாயாக நீ முன்னர் சாது சக்கர் என்னும் மாமுனிவருக்கு உணவு கொடுத்துச் சிறப்பித்ததனால் உன் முன்னோர்களில் ஒருவரை கடலிலிருந்து காப்பாற்றியது; அது போன்று உன்னை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்தி சென்று உனது முற்பிறவி பற்றி அறியச் செய்தது என்று அத் தெய்வம் கூறி முடித்தது. இவையனைத்தையும் கேட்ட மணிமேகலை நிம்மதி பெருமூச்சு விட்டவளாய்வலயிலிருந்து விடுபட்ட மயில் போன்று மகிழ்ச்சி அடைந்தாள்.

  • தொடங்கியவர்

சிறை செய் காதை.

உதயகுமாரன் இறப்பைப் பற்றி அறிந்த சக்கரவாள்க் கோட்டத்து முனிவர்கள் அதுபற்றி மன்னனுக்கு தெரிவித்தார்கள். அத்துடன் இது போன்ற காம விளையாட்டுக்களால் அழிவை தேடி கொண்டவர்கள் இப்போது மட்டுமல்ல முன்னாளிலும் இந்த நகரத்திலே இருந்தார்கள் என்றுரைத்து சுகந்தன் வரலற்றை கூறினார்கள். இதை அனைத்தையும் கேட்ட மன்னன் தவறு செய்தது தன் மகன் தான் என்பதை புருந்து கொண்டு அவனுக்கு இந்த கது உண்டாயிற்று என்பதை மற்ற மன்னர்கள் தெரியும் முன்னன்ர் அவனுக்கு இறுதிக் கடன்களயெல்லாம் செய்துவிடுங்கள் ; அந்த மணிமேகலை என்ற பெண்ணை காவலில் வையுங்கள் என்றான். அவன் கட்டளை நிறைவேற்றப்பட்டது/

  • தொடங்கியவர்

சிறைவிடு காதை

மன்னர் மகன் உதயகுமாரன் இறந்ததால் மன்னன் மாளிகையில் துயர் நிறைந்து காணப்பட்டது. தன் மகன் உதயகுமாரன் இறந்த்து மணிமேகலையால் தான் என்ற எண்ணம் அரசிக்கு ஏற்பட்டதால் அந்த எண்ணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. அவள் நெஞ்சில் வஞ்சம் பிறந்த்து. மணிமேகலை குற்றம் அற்றவள் என்று பேசினாள் இதனை கேட்ட மன்னன் மகிழ்ந்தான் .தன் மனைவி திருந்திவிட்டாள் எனௌணர்ந்து மணிமேகலையை சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக கூறினான். மணிமேகலையை சிறையிலிருந்து விடுதலை செய்ததௌம் அரசியை காணவேண்டும் என்று பணித்தனர்.அவள் நேராக அரசியைக் கண்டாள். அரசி அவளிடம் அன்பு செலுத்துபவள் போல் நடந்து கொண்டாள். பின்னர் அரசியின் உள்ளத்தில் எழுந்த வஞ்சகச் செயல்கள் தலை விரித்தாடின. அவளை பைத்தியக்காரியாக்க பலவித மருந்துகளை அளித்தாள். அவை எதுவும் மணிமேகலையை ஒன்றும் செஇய்யவில்லை.

இதானால் அரசியார் அவனை மானபங்கபடித்த முயற்சி செய்தார் இதனை அறிந்த ம்ணிமேகலை வேறு உருவத்தை மாற்றிக் கொண்டாள். நோய் வாய்ப்பட்டள். மணிமேகலை என்க்கூறி அவளை தனி அறையில் சாப்பாடு தண்ணிகொடிக்காமல் விட்டு பார்த்தாள். இவை யனைத்தும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை. எதை எதையோ செய்து பார்த்து எதுவும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை எனக் க்ண்டதும் மணிமேகலையிடம் இறையருள் என்பதை உணர்ந்தாள்.. அரசி ம்ணிமேகலையிடம் தன்னை மன்னிக்க வேண்டினாள். மணிமேகலை அரசிக்கு அறிவுரை கூறி அரசியே நீ என் கணவனைப் பெற்றவள் மட்டுமன்றி இந்த நாட்டின் ஒப்பற்ற அரசியும் ஆவய். எனவே நீ என்னை வணங்குவது தவறாகும். என்று கூறி அரசியின் பாதங்களை மணிமேகலை வணங்கினாள்.

  • தொடங்கியவர்

ஆபுத்திரன் நாட்டை அடைந்த காதை.

உதயகுமாரன் கொலையுண்டான் என்ற செய்தி கேட்ட சித்திராபதிக்கு பெரும் வேதனையை அளித்தது. அவன் மூலம் அவள் பெற எண்ணியிருந்தவைகள் வீணாகி விட்டனவே என்று அவள் எண்ணி வருந்தினாள். மேலும் உதயகுமாரன் இறப்பையோட்டி மணிமேகலையை சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதையறிந்து அரசியிடம் பேசிப்பார்க்கலம் என்று அங்கு வந்தாள். மணிமேகலையைச்சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்த மாதவி பெரிதும் வருந்தி தனது தோழியான சுதமதியுடன் அறவணடிகளை சென்று பணிந்தாள். பின்னர் அறவணடிகள் அரசியைக் காணப்புறப்பட்டனர். அவ்ருடன் மாதவி சுதமதி ஆகியோரும் அங்கு சென்றனர்.

அறவணடிகளைக் கண்ட அரசி அவரை தொழுது வரவேற்றாள் உரிய ஆசனத்தில் அமரச் செய்து அவரது வருகையால் மளிகை சிறப்புற்றது எனக் கூறினாள். அறவணடிகள் அவ்ர்களுக்கு அறிவுரைகள் கூறினார். மறுபிறப்பு பற்றி நன்குணர்ந்த மணுமேகலையே நீ மற்ற சமயக் கொள்கைகளை முதலில் அறிந்து வரவும். பின்னர் நான் உனக்கு புத்த மதக் கொள்கைகளை போதிப்பேன் என்று கூறிப் புறப்படலானர். அவர் எழக் கண்டதும். அவரை வணங்கி நான் ஆபுத்திரன் நாட்டிற்குச் செல்லப் போகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அருந்தவ முனிவர் சொன்னபடி நடந்து வாருங்கள். நான் இந்த நகரத்தில் இருந்த்தால் உதயகுமாரனைக் கொன்றது நான் தான் எனக் குறை கூறுவார்கள். எனவே நான் புத்த பீடிகையை வணங்கி வஞ்சி மாநகரை அடைந்து அங்கேயுள்ள கற்புக்கரசி கண்ணகி கோட்டத்தை வணங்கி நல்லறங்களை முடிந்தவரை செய்வேன். என்னைப்பற்றி யாரும் இனிக் கவலைப் பட வேண்டியதில்லை என்று கூறியவளய் அந்திப் பொழுதில் வான் வழியே புறப்பட்டுச் சென்றாள். அறவணடிகள் தம் தவப் பள்ளியை அடைந்தார்.

மணிமேகலை இந்திரனின் வழித் தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புற சோலைக்கு சென்று அங்குள்ள தரும்சாவகன் அடிகளை வணங்லி அவன் மூலம் அங்குள்ள அரசன் பெயரை அறிந்தாள். மழைவளம் சிறந்த இடம் என்று அறிந்து மகிழ்வடைந்தாள். எல்லாவளங்களும் அங்கே குறைவறக் கிடைப்பதை கண்டு நிறைவு கொண்டாள்.

  • தொடங்கியவர்

ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை.

புண்ணியராசன் தம் மனைவியோடு அந்தச் சோலையில் புகுந்து தரும சாவகன் என்னும் மாமுனிவனை வணங்கி பின்னர் கையில் அமுதசுரபியுடன் நின்றமணிமேகலையை காட்டி யாரெனக் கேட்டான். இந்த நாவலந்தீவில் இந்த நங்கையை போன்று சிறப்புப் பெற்றவர் யாருமே இல்லை. என்று அவளைப் பற்றிக் கூறினார். மணிமேகலை மன்னனிடம் நீ இந்தப் பாத்திரத்தை மறந்து விட்டாயா? நீ உன் கையில் வைத்திருந்த அமுதசுரபி தான் இப்போது என் கையில் இஉர்ப்பதாகும். நீ உன் முற்பிறப்பை அறியாதவனாக இருக்கலாம். ஆனால் நீ ஆவின் வயிற்றில் பிறந்த இந்தப் பிறவியையாவது அறிந்து இருப்பாய் அல்லவா? மணிபல்லவம் சென்று புத்தர் பீடிகையை தொழுது வந்தால் உன்முற்பிறப்பு பற்றி நிச்சயம் தெரிந்து கொள்வாய் எனவே நீ தவறாது புத்தர் பீடிகைக்கு வர வேண்டும் என்று அன்புடன் த்ரிவித்துவிட்டு வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்தாள்.

மணிமேகலை வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து போற்றி வணங்கினாள். மணிமேகலை ஆபுத்திரனிடம் விபரங்களை கூறிசென்றபின்னர் அவன் தன் பழம் பிறப்பு பற்றி எண்ணிப் பார்ந்தான். மணிபல்லவத் தீவை நீண்ட நாளாக அடைந்து வலம் வர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாகவே அவன் மனதில் எழுந்த வண்ணம் இருந்த்து இப்போது மணிமேகலை அதை வளர்த்து தூண்டி விட்டாள். எனவே அவன் அரச பொறுப்பை அமைச்சர் ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு மணிபல்லவம் புறப்பட்டன்.மணிபல்லவ தீவிற்ற்கு அவன் வருவான் என் எதிர்பார்த்திருந்த மணிமேகலை அவனைக் க்ண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். புத்த பீடிகையை வண்ங்கி எழுந்ததும் அவன் தன் பழம் பிறப்பை அறிந்தான். பின்னர் மணிமேகலையை அழைத்து கோமுகி என்ற பொய்கையை அடைந்து புன்னை மர நிழலிலே இளைபாறினான்.

அப்பொழுது தீவதிலகை தோன்றி ஆபுத்திரனுக்கு பழம் பிறப்பை உணர்த்தினாள். தீவதிலகை காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்த போது தனது எலும்புக்கூடு இருப்பதை க்ண்டு அஞ்சினான். அப்போது மணிமேகலை அரசே நீ அஞ்சவேண்டாம் உன்னை இங்கு வரழைத்தது நீ பழம் பிறப்பை அறிவதற்கே. உனது புகழ் பரவி நீ அறச்செயல்கள் செய்து நீடுழி வாழ்க வென வாழ்த்தினாள். மன்னவனே நீ இனி எதைபற்றியும் வருந்த வேண்டியது இல்லை நீ உன் நாட்டை விட்டுபிரிந்து வரவே தாங்கிக் கொள்ளாத நாட்டவர் உன்னை அழக்கிறார்கள் எனவே நீ உன் நாடு சென்று வளமுடன் பொலியச் செய் எனக்க்கூறி அவனை அனுப்பிவிட்டு வான் வழியாக வஞ்சி நகரை அடைந்தாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.