Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

Featured Replies

ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

போர்களம் என்றால் புலிச்சண்டை...

கருத்துக்களம் என்றால்...

catfight-5.jpg

:):icon_idea:

ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

சுயவிளம்பரமுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களம் என்றால் சிலர் எழுதுவதை மட்டுமே நீங்கள் படிக்கணும்.. அவங்களிற்கு பிடித்த மாதிரியே நீங்க எழுதணும்.அதே நேரம் ஒரு மாயையிலையே எழுதணும் .அதை தவித்து நீங்கள் ஏதாவது உண்மை நிலையை எழுதினால் நீங்க துரோகி.. உங்களை நாங்க ஒரு வழி பண்ணி பின்னிடுவம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களம் என்றால் சிலர் எழுதுவதை மட்டுமே நீங்கள் படிக்கணும்.. அவங்களிற்கு பிடித்த மாதிரியே நீங்க எழுதணும்.அதே நேரம் ஒரு மாயையிலையே எழுதணும் .அதை தவித்து நீங்கள் ஏதாவது உண்மை நிலையை எழுதினால் நீங்க துரோகி.. உங்களை நாங்க ஒரு வழி பண்ணி பின்னிடுவம்..

சரியாய் சொன்னீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ட கண்ட களிசறை தலைப்புக்கள் வரும்??

கண்ட கண்ட களிசறை கருத்துக்கள் வரும்??

எல்லாத்தையும் நிர்வாகம் விடோணும்!

அப்புடி விட்டால் உந்த கேள்வியள் வராது?

உவ்வளவு அழிஞ்சும் எங்கடையளுக்கு இன்னும் புத்தி வரேல்லை பாருங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்றால் சிலர் எழுதுவதை மட்டுமே நீங்கள் படிக்கணும்.. அவங்களிற்கு பிடித்த மாதிரியே நீங்க எழுதணும்.அதே நேரம் ஒரு மாயையிலையே எழுதணும் .அதை தவித்து நீங்கள் ஏதாவது உண்மை நிலையை எழுதினால் நீங்க துரோகி.. உங்களை நாங்க ஒரு வழி பண்ணி பின்னிடுவம்..

ஐயா இந்த உலகில் எது மாயை இல்லை. ஜனநாயகம் என்ற மாயை.. முதலாளித்துவம் என்ற மாயை.. இப்படி மாயைகளுக்குள்ள தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதேன் ஒரு சில விடயத்துக்குள்ளதான் உங்களுக்கு மாயை தெரியுது. சொந்த வாழ்க்கையே மாயை என்பதை அறிஞ்சு.. அதில உண்மை மரணம் ஒன்றுதான்.. என்று அதனை அணைச்சுக் கொள்ளலாமே. ஏன் செய்கிறீர்கள் இல்லை..???!

கருத்துக்களம் என்பது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளம். அதில் சில கருத்துக்கள் மற்றவனுக்கு உங்களை துரோகியாகக் கூட இனங்காட்டலாம். அதை எழுதும் உரிமை அவனுக்கும் உண்டு. உங்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்ற பலவீனத்தை தவிர அவன் துரோகி என்பதை தவிர் என்பது அவனுடைய கருத்தை அல்லது பார்வையை நிராகரிப்பது போன்றது. அவன் துரோகி என்கின்றான் என்றால் நீங்கள் அதனை மறுதலிக்க மாற்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை முன் வைக்க வேண்டியதுதான் நியாயமான கருத்தாடல்.

அதைவிட்டிட்டு.. இப்படிச் சொன்னா துரோகி என்றீனம்.. இப்படி சொன்னா அப்படி என்றீனம்.. என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. திட்டமிட்டு ஒருவரை துரோகி என்று பழிச்சு அவரின் கருத்துக்களுக்கு சரியான பதிலிறுக்காமல் விரட்டி அடிக்கிறது வேறு. உங்களின் கருத்துக்களின் அடிப்படையில் அதில் துரோகம் என்பது இனங்காணப்படின்.. அதை வெளிப்படையாக கருத்தாக முன்வைத்து உங்களிடம் விளக்கம் கோருவது வேறு. பின்னையது கருத்துக்கள நியாயமும் கூட. உங்களின் நிலைப்பாடு அவனுக்கு துரோகமாகத் தெரிகிறதெனின்.. அதனை தெளிவுறுத்த வேண்டியது உங்கள் கருத்தே அன்றி.. அவனை பதிலுக்கு சாடுவதல்ல..!

அடிப்படையில்.. அவன் ஒரு மாயையில் இருக்கிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்களும் இன்னொரு மாயைக்குள் நுழைந்திருக்கிறீர்கள் என்று தெரியாமலே அதைச் சொல்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இதுதான் இங்கு பிரச்சனையே தவிர வேறல்ல..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அடடா... மேல இருக்கிறதுகளை பார்க்க கருத்துக்களம் என்றால் என்ன எண்டு இப்ப எப்பன் விளங்குது. விளக்கங்களுக்கு நன்றியுங்கோ

ஐயா இந்த உலகில் எது மாயை இல்லை. ஜனநாயகம் என்ற மாயை.. முதலாளித்துவம் என்ற மாயை.. இப்படி மாயைகளுக்குள்ள தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதேன் ஒரு சில விடயத்துக்குள்ளதான் உங்களுக்கு மாயை தெரியுது. சொந்த வாழ்க்கையே மாயை என்பதை அறிஞ்சு.. அதில உண்மை மரணம் ஒன்றுதான்.. என்று அதனை அணைச்சுக் கொள்ளலாமே. ஏன் செய்கிறீர்கள் இல்லை..???!

கருத்துக்களம் என்பது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளம். அதில் சில கருத்துக்கள் மற்றவனுக்கு உங்களை துரோகியாகக் கூட இனங்காட்டலாம். அதை எழுதும் உரிமை அவனுக்கும் உண்டு. உங்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்ற பலவீனத்தை தவிர அவன் துரோகி என்பதை தவிர் என்பது அவனுடைய கருத்தை அல்லது பார்வையை நிராகரிப்பது போன்றது. அவன் துரோகி என்கின்றான் என்றால் நீங்கள் அதனை மறுதலிக்க மாற்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை முன் வைக்க வேண்டியதுதான் நியாயமான கருத்தாடல்.

அதைவிட்டிட்டு.. இப்படிச் சொன்னா துரோகி என்றீனம்.. இப்படி சொன்னா அப்படி என்றீனம்.. என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. திட்டமிட்டு ஒருவரை துரோகி என்று பழிச்சு அவரின் கருத்துக்களுக்கு சரியான பதிலிறுக்காமல் விரட்டி அடிக்கிறது வேறு. உங்களின் கருத்துக்களின் அடிப்படையில் அதில் துரோகம் என்பது இனங்காணப்படின்.. அதை வெளிப்படையாக கருத்தாக முன்வைத்து உங்களிடம் விளக்கம் கோருவது வேறு. பின்னையது கருத்துக்கள நியாயமும் கூட. உங்களின் நிலைப்பாடு அவனுக்கு துரோகமாகத் தெரிகிறதெனின்.. அதனை தெளிவுறுத்த வேண்டியது உங்கள் கருத்தே அன்றி.. அவனை பதிலுக்கு சாடுவதல்ல..!

அடிப்படையில்.. அவன் ஒரு மாயையில் இருக்கிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்களும் இன்னொரு மாயைக்குள் நுழைந்திருக்கிறீர்கள் என்று தெரியாமலே அதைச் சொல்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இதுதான் இங்கு பிரச்சனையே தவிர வேறல்ல..!

அடடா உதுவெல்லோ சரியான விளக்கம். உந்த அம்புலிமாமியுடன் யாரும் விவாதத்தில கலந்து வெற்றிபெற்றா அதுதான் நியாயமான ஒரு கருத்துக்களம். இல்லை எல்லாம் குட்டையில ஊறிய மட்டைகள் போல நோஞ்சான்கள், கருத்துக்களை கருத்தால் சந்திக்க பயந்த கோழைகள். இவர்களைப்போன்றவர்கள் என்னைப்போன்ற அம்புலிமாமிக்களை தடுப்புமுகாம் போன்ற அறிமுக பகுதியில் வைத்திருக்கும் பாசிச ஆட்சி நடத்துபவர்கள். இல்லை இவர்கள் நேர்மையாகவே தமிழர்களுக்காக, அதுவும் சில உண்மைகளை அலச அன்றிலிருந்து நடந்திருந்தால் இன்றை ஈழதமிழனைப்போல காச்சட்டையுமில்லாமல் உலக அரங்கில் நிற்கவேண்டி வந்திருக்குமா?

  • தொடங்கியவர்

இவர்கள் நேர்மையாகவே தமிழர்களுக்காக, அதுவும் சில உண்மைகளை அலச அன்றிலிருந்து நடந்திருந்தால் இன்றை ஈழதமிழனைப்போல காச்சட்டையுமில்லாமல் உலக அரங்கில் நிற்கவேண்டி வந்திருக்குமா?

நியாயமான கேள்விதான். அதற்காக யாழ் களத்தை இலங்கைத் தீவிற்கு ஒப்பிடமுடியாது.

வணக்கம் மாப்பிள்ளை( கலைஞன்). உங்கள் ஆதங்கமும் எனக்கும் புரிகிறது. நாம் யார் அப்சொலூட் தமிழர்கள் எதற்காக இப்படி எம்மானத்தினை வித்து உப்படி தடுப்புமுக்காம்கள் போன்ற மனித மனத்தின் சுதந்திரமான கருதுக்களுக்கு சவால் விடும் தளங்களில் நின்று கடந்த 4 வருடங்களாக தவங்கிடப்பது. எனக்கொரு நம்பிக்கை ஈழதமிழன் கெட்டவனல்ல, கெட்டுப்போனவன் ஆகவே தம் தவறை உணர்ந்து எம்மைப்போன்ற எதிர் ஆனாலும் சரியான பதத்தில் வைத்து கருத்தினை சொல்லும் ஈழதமிழர்கள் பல லட்சம் பேர்களை தடைசெய்து தம் ஒரு தலைப்பற்ச அரசியலை எடுத்துக்கொண்டு செல்ல நிற்கும் ஒரு குறு நிலை மன்னர்கள் போலல்லாத் பெருநிலமன்னர்களாக நடக்க இவர்களால் முடியும். ஈழதமிழனை ஒர்றுமைப்படுத்த இவர்களால் முடியும் அதற்குறிய பலம் இவர்களிடம் இன்று இருப்பதால் என்று நமபுவதாலேயே.

இவர்கள யார் ஒரு காலத்தில் ஒரு தலைப்பற்சமாக கருத்துப்பகிர அனுபவித்த அதே யாழ் இணைய தள உரிமையாளர்கள். அன்று நான் கேட்டேன் இன்றும் கேட்கின்றேன்...அமெரிக்க அதிபரும் கேட்கின்றார்...மனித உரிமைகளை மதித்து, ஜனநாயக கருத்துக்களை மதித்து எதையும் செய்துங்கள் உங்கள் சுதந்திரம் முற்று முழு தமிழர்களின் ஆதரவுடன் உங்கள் காலடியில் கிடக்க வைக்கப்படும். நான் எத்தனை வருடங்கள் இப்படி வருவதும் போவதும். எனக்கே சலிக்கிறது. ஆனாலும் எம ஈழதமிழர்கள் திருந்த பல லட்சம் வேடங்கள் எடுக்தாகிலும் இங்கே பல உருவ்ங்களில் வருவேன். ஈழதமிழ உணமையில் எப்படிப்பட்ட வீரவேங்கைகள் என்று காட்ட முயற்சிப்பேன்.

என்னை கருக்து எழுதாமல் விடுவது இணையத்தளத்தில் இருக்கும் சில பட்டின்கள்னைப்பொறுத்தது. அதை நீதியாக அமுக்கினால் என்னால் ஈழதமிழர்களுக்கு பலதை செய்யமுடியும்..ஆனால் பிழையாக மீண்டும் மீண்டும் இவர்கள் அடக்குமுறை என்ற பட்டனை அமுக்கி என்னை எரிமலையாக்கியே தீருவது என்கிறார்கள். ஆனால் நான் மண்டியிடப்போவதில்லை. ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கும் எவரும் பயங்கரவாதிகளே!!. :)

  • 3 weeks later...

எது நடக்கும் யாழில் என்று நினைத்தேனோ அது இம்முறை நடைபெறவில்லை.

எது நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தேனோ அது நடந்துவிட்டது.

இம்முறை யாழில் என் சொந்தக்கருத்துக்களுக்கு கத்தரிபாவிக்காமல் என் வழியில் கருத்துப்பதிக்க விட்டது, ஈழதமிழன் புதிய வழியில் ஜனநாயக பாதையில் செல்ல துணிந்துவிட்டான் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது. இலலவிட்டால் உந்த அம்புலிமாமி சங்கிலிமாமியாகி கட்டப்பட்டிருப்பாள். ஆகவே எதிர்பார்த்த அது நடைபெறவில்லை. ஏது சொன்னாலும் யாழில் நீதியான சட்டங்கள் பாவிக்கப்படுகின்றன. அராஜக வழிமுறைகளில் கருத்துப்பதிபவர்களின் கருத்துக்களை கத்திரிக்காத இந்த ஒரு வேலை போது எம்மைப்போன்றவர்களின் மனதில் ஆறாத வடுக்களாக மறைந்திருக்கும் பல ஈழத்து தமிழர் படைவீரர்களின் போர்க்குற்றங்களை முழுமையாக மறந்துவிட்டு யாழின் பின்னால் நின்று ஓரினமாக ஒன்றினைய.... என் வாழ்த்துக்கள் என்றென்றும் யாழிற்கு இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்புலிமாமி

வணககம்... உங்கள் கருத்துகளையும் நான் வாசித்திருக்கிறன்... ஆனால் நீங்கள் சொல்லவாறது என்னட மரமண்டைக்கு புரியுது இல்லை... ஒருவேளை நீங்கள் பாவிக்கும் நடைமுறைத்தமிழோ தெரியவில்லை... சில வேளைகளில் இரண்டு முன்றுதடவை வாசித்தும் புரியாமல் அதனை விட்டுச் சென்று விடுவேன்... ஆனால் ஒன்று மட்டும் உண்மை.... இன்றைய நிலையில் எம்மத்தியில் ஒற்றுமைக்கான கருத்துக்களை தூவுவது தான் எம்மத்தியில் கடமை உணர்வை பலப்படுத்தும் என்பதே என்னது தாழ்மையான கருத்து.... எமக்குள் விரிசலை ஏற்படுத்தாமல் நீங்கள் சொல்வது போல "காக்கை போல ஒன்றாக செயற்படுவோம்"

மரம் சொல்கின்றது....... எம்மைக்கொண்டு ஆயிரம் சிலுவைகளை உருவாக்க தெரிந்த மனிதனுக்கு தம்மிலிருந்து ஒரு கர்த்தரை உருவாக்க முடியவில்லையே என்று

இப்படிப்பட்ட கருத்துக்களை உந்த வயதில் காவும் உங்களைப்போன்றோர், இனிவரும் காலங்களில் பெரிய காரியங்களை செய்ய லாயக்குள்ளவர்கள். இது அம்புலிமாமியின் கணிப்பு..மனதில் வைத்து மேற்செல்லுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் எப்படிப்பட்ட கஸ்டமான சூழநிலைகளிலும். இது அம்புலிமாமி உங்களைப்பற்றி கணித்த ஒரு மிக பெரிய கணக்கு!!. இது பிழை என்றால் என்னை சந்திக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்டியா மேயிறது ஆக்கமான சிந்தனையான கருத்துக்களை எவர் கருத்தில எடுக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.