Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா, யாழ் செல்வதற்கு த.தே.கூவுக்கு அனுமதி இல்லை: தேர்தல் ஆணையாளரிடம் மாவை கோரிக்கை

Featured Replies

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நியமனப் பத்திரத் தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதிக் கோரிக்கை 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் மாலை விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பாடல் அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.பி.பெர்னாண்டோ, நானும் எனது தமிழரசுக் கட்சி சக தலைவர்களும் வவுனியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று எனக்கு அறிவித்திருந்தார்.

அரசியல் பணிகளுக்கான வவுனியா இன்னமும் தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும் எமது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருப்பதாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான நான் கட்சியின் நியமனப் பத்திரங்கள் தொடர்பான பணிகளை தேர்தல் சட்டத்துக்கு இணங்க பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வவுனியாவுக்கு எனக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதை தங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மேலும், இலங்கை தமிழரசுக்கு கட்சியானது (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ) ஏனைய மூன்று பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணியாக இயங்குகின்றது.

அகில இலங்கை தமிழரசுக்கு கட்சியானது (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஏனைய மூன்று பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணியாக இயங்குகின்றது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ ஆகியவை ஏனைய கட்சிகளாகும். என்னுடன், இக்கட்சிகளின் தலைவர்கள் வவுனியாவுக்கு பயணம் செய்வது அவசியத் தேவையாகும்.

ஆதலால், இந்த விடயத்தில் தாங்கள் தலையிட வேண்டும் என்று நான் தங்களை வலியுறுத்துவதுடன் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் பொதுச் செயலாளரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்

ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என்னுடன் வவுனியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக உடனடியாக பரிகாரம் காணப்படாவிடில் நியமனப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துதல் தொடர்பாக பொருத்தமான தீர்மானத்தை தாங்கள் மேற்கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.