Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள் ......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார்.

இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள்.

இதுவரைகாலமும் தாயகத்திலுள்ள தமிழ்மக்களைப்பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் எவ்வித அக்கறையுமின்றி இருந்தவர்களாக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தை உடையவர்களாக செயற்பட்ட இவர்கள், இன்று தாயக மக்களின் மேல் திடீரென கரிசனையுள்ளவர்களாக வீதி உலா வரப்போகிறார்கள்.

இராணுவரீதியில் விடுதலைப் போராட்டம் மழுங்கடிக்கப்படும்வரை சிங்கள அல்லது இந்திய அரசுகளின் புலனாய்வுத்துறையினரால் காக்கவைக்கப்பட்ட இவர்கள், இன்று தாயகமக்களில் கரிசனை உள்ளவர்கள் போல மக்கள் முன் காட்சியளிக்கப் போகின்றார்கள்.

புலம்பெயர்வாழ் தமிழீழமக்களுடன் சிங்களஅரசானது தொடர்பைபேணி நிரந்த அரசியல் தீர்வை வைக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் அண்மைக்கால அறிவிப்பும், புலம்பெயர்நாடுகளில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களாலும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சிங்களஅரசானது, தனக்கு ஆதரவான ஒருகுழுவை புலம்பெயர்நாடுகளில் ஏற்படுத்த முனைகின்ற ஒரு செயற்பாடாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.

இவர்கள் அல்லது இக்குழுவானது, சிங்களஅரசு புரிந்த படுகொலைகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். எனவே, பல்லாயிரக்காண தமிழ்மக்களை கொடூரமாகப் படுகொலைசெய்து, இலட்சக்கணக்கான மக்களை ஆடு மாடுகளைப்போல் வதை முகாம்களில் அடிப்படைவசதிகளை மறுத்து வதைக்கின்ற, கொல்கின்ற சிங்களஅரசின் அடியாட்களான இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பது பற்றியும் சிந்தியுங்கள்.

தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம்

புறப்படத்தயார்! தயார்! தயார்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்

நன்றி சங்கதி

Edited by தமிழ் சிறி

அண்மையில் தேனீ எனப்படுகின்ற இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஓர் கட்டுரையை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அதில்..

யதார்த்தமான பல விசயங்களை சொல்லி இருந்தார்கள். ஆனால்... கட்டுரை முழுவதும் புலியை நேரடியாகவும், மறைமுகமாகவும் தூற்றுகின்ற ஓர் புலியெதிர்ப்பு புராணமாகவே இருந்தது. மேலும்.. தமிழரின் தலைமை ஆரம்பகாலம் தொட்டே ஏமாற்றுப் பேர்வழிகள்... சுயநலவாதிகள் என்று எல்லாம் நிறுவப்பட்டு இருந்தது. ஆனால்..

சிங்களம் - பேரினவாதம் பக்கமாக எதுவித குற்றச்சாட்டும் சொல்லப்படவில்லை. சிங்களவன்கள் ஏதோ யோக்கியவான்கள் போலவும்... தமிழர்கள்தான் ஒன்றும் அறியாத அப்பாவிப் பாப்பாக்களை வரலாற்றில் சீண்டிப்பார்த்து கடைசியில் அழிவைச் சந்தித்ததாகவும் சாரம்சமாக கூறப்பட்டு இருந்தது.

நடுவுநிலமை என்பது தனக்கு பிடிக்காதவர்களின் பலவீனங்களையும், குறைகளையும் மட்டும் நுணுக்குக்காட்டியூடாக பார்ப்பது அல்ல. தவறுகள் சகலபகுதிகளிலும், சகலகோணங்களிலும் பார்க்கப்படவேண்டும்.

இந்தவகையில் தேனீ போன்ற இணையத்தளம் சிறீ லங்கா அரசின் ஊதுகுழலாக விளங்குகின்றது என்பது தவிர, அங்கு தமிழ்மக்களின் நலன்களிற்காக என்று சொல்லாவிட்டால்கூட ஆகக்குறைந்தது நடுவுநிலமையாகக்கூட பிரச்சனைகள் ஆராயப்படவில்லை என்று தோன்றுகின்றது.

இரண்டுவகையான நடுவுநிலமையாளர்கள் இருக்கின்றார்கள். முதலாவது வகை:

உண்மையில் சகல கோணங்களிலும் பிரச்சனைகளை ஆராய்பவர்கள் - தராசு போன்றவர்கள்.

அடுத்தவகை:

நடுவுநிலமைபோல நிற்பதாக காட்டிக்கொண்டு ஒருபக்கச்சார்பாக செயற்படுபவர்கள்.

இந்த இரண்டாவது வகையானவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத்தான் உண்மையான நடுவுநிலமைவாதிகூட நின்றுபிடிக்க இயலாமல் இருக்கின்றது.

இதேபோல...

கடந்தகாலத்தை மீட்டுப் பார்த்தால்..

இரண்டுவகையான புலிகளிற்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் காணப்படுகின்றார்கள். முதலாவது வகை:

புலிகளினதும், சிறீ லங்கா அரசினதும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள். புலிகளினதும், சீறீ லங்கா அரசினதும் கொள்கைகள், செயற்பாடுகளுடன் முரண்பாடுகளைக் கொண்டவர்கள்.

இரண்டாவது வகை: புலிகளின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுபவர்கள். புலிகளின் கொள்கைகளுடன், செயற்பாடுகளுடன் மட்டும் முரண்பாடுகளை கொண்டவர்கள்.

இந்த இரண்டாவது புலி எதிர்ப்பு வகையினையும் மேலும் இரண்டுபிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவதுவகை:

தங்கள் தனிப்பட்ட வாழ்வில் புலிகளால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாதிக்கப்பட்டவர்கள்.

இரண்டாவது வகை: தங்கள் சுய பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுய அரசியல், பொருளாதார இலாபங்களிற்காகவும் புலிகளை எதிர்ப்பவர்கள்.

மேலுள்ளதில் இந்த கடைசி வகையானவர்களே உண்மையில் ஆபத்தானவர்கள்: அதாவது இந்தவகையைச் சேர்ந்தவர்கள்:

தங்கள் சுய பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுய அரசியல், பொருளாதார இலாபங்களிற்காகவும் புலிகளை எதிர்ப்பவர்கள்.

இந்தவகையைச் சேர்ந்தவர்களிலும் பலவகையானவர்கள் இருக்கின்றார்கள். அதில் மிகவும் ஆபத்தானவகை:

சிறீ லங்கா அரசின் கைக்கூலிகள். இந்தகைக்கூலிகள் ஒருபோதும்... தமதுபோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவது இல்லை. ஏன் என்றால் இவர்கள் தங்களிற்கு தரப்பட்ட வேலைத் திட்டங்களை ஒழுங்காகச் செய்யாவிட்டால் அவர்களிற்கு பைசா கிடைக்காது. இதற்காக.. தொடர்ந்து நடுவுநிலமையாளர்களின் வேசத்தைபோட்டுக்கொண்டு தமது பணிகளை கச்சிதமாக செய்துகொண்டு இருப்பார்கள்.

இங்கு நான் தேனி இணையத்தளம் மிகவும் ஆபத்தானவகை என்று சொல்லவரவில்லை. யார் ஆபத்தானவர்கள், யார் உண்மையான துரோகிகள் என்பது அவரவர்க்கு மட்டும் தெரிந்த உண்மை. சாதாரண பொதுமக்கள் இவர்களை பிரித்து அறிவது மிகவும் கடினமானது.

Edited by மாப்பிள்ளை

குறிப்பு: இங்கு மேலே நான் எழுதியதில் புலி என்ற பதத்திற்கு பதிலாக சிறீ லங்கா அரசு என்றபதத்தையும், சிறீ லங்கா அரசு என்ற பதத்திற்கு பதிலாக புலி என்ற பதத்தையும் பாவித்தால் வேறு ஓர் விதமான கருத்தை - சிந்தனையை காணலாம். இப்படி சிந்தித்தால் அதுவும் வாஸ்தவம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை ,சக்கைபோடு நீங்கள் சொல்வது முழு உண்மை .

எங்கட சனம் இப்ப எங்கே விழிப்பாக இருக்கிறது. தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களைச் சொல்கிறவர்களோடு சண்டைபிடிக்கலாம் என்று நிக்கினம்

இவ்வளவு காலமும் போராட்டத்துக்கு ஆதரவு தராதவன் ,புலி எதிர்ப்பாய் இருந்தவன் எல்லாம் இனி வந்து மக்களுக்காக போராடுவார்கள் .நீதி பெற்று கொடுப்பார்கள் என்று எந்த புலம் பெயர் தமிழரும் நம்ப மாட்டான். 75 வீதமான புலம் பெயர் மக்கள் இவ்வளவு காலமும் நடந்த விடுதலை போரில் தங்களை ஏதோ ஒரு வகையில் இணைத்திருந்தவர்கள்.

அவர்கள் இனி புது மீட்பர் வந்து எங்களுக்கு விடுதலை பெற்று தருவான் என்று ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.

இது உந்த அரைகுறைகளுக்கும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.