Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டாக்டர் சத்தியமூர்த்தி புலிகளுடன் தொடர்புள்ளவர் - சி ஐ டி

Featured Replies

கிளிநொச்சி மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியை தாம் விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களான த.சத்தியமூர்த்தி, கே.துரைநாதன் மற்றும் மருத்துவத் தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது தாம் மேற்கொண்டுள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை கொழும்பு நீதவானிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்காப் படையினர் நடத்திய இறுதிக்கட்டத் தாக்குதலின் போது அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மருத்துவர் த.சத்தியமூர்த்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்லும் போது மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தனது கொண்டுசென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியில் பிறந்தவரான மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பின்னர் கிளிநொச்சி சென்று வசித்ததாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறையினர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் சிகிசையளித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, அந்த வைத்தியசாலையில் இருந்து மருந்து மற்றும் சுகாதார பணியாளர்களுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று, விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இது குறித்த அறிக்கையொன்றையும் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற போது, படையினர் கிளிநொச்சிக்குள் பிரவேசித்த நிலையில், குறித்த வைத்திய அதிகாரி, தமது மருத்துவ பணியாளர்களுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த வைத்திய அதிகாரியுடன், விடுதலைப்புலிகளிடம் மருத்துவ பயிற்சிகளை பெற்ற வைத்தியர் ஒருவரும், தாதியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கிளிநொச்சி அரச மருத்துவமனையில் பணியாற்றிய வைத்திய அதிகாரி டி. சத்தியமூர்த்தி, விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவில் பயிற்சிகளை பெற்ற வைத்தியர் கந்தசாமி துரைநாதன், அதில் பயிற்சி பெற்ற தாதி ஆறுமுகம் ஜெயலக்சுமி, ஆகியோரே தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளனர் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாவது குற்றவாளியான தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி, நாவலப்பிட்டியில் பிறந்து, கிளிநொச்சிக்கு சென்று, யாழ்ப்பாண பல்கமலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளதுடன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக கிளிநொச்சி மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் படையினரின் இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்து இருப்பதாகவும் பீ.பீ.சி உலக சேவைக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியிருந்ததாகவும் புலனாய்வு திணைக்களத்தின் நீதிவானிடம் தெரிவித்தனர்.

வடக்கில் பல பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அங்குள்ள அரச மருத்துவமனைகளுக்கு, அரசாங்கம் வழங்கிய மருந்துகளை விடுதலைப்புலிகளின் பயன்பாட்டுக்குக்கு வழங்கியுள்ள சந்தேகநபர், புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியிருந்தாகவும் திணைக்களத்தின் குற்றம்சுமத்தியுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கருத்துக்களை செவிமடுத்த நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி, சந்தேக நபர்களை பார்வையிட்டதுடன், அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் தம் முன் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மூலம் - GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.