Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசும் புறநிலை அரசும்

Featured Replies

தமிழீழ மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடித்து விட்டது. இன்றைக்கு தமிழினம் தன்னுடைய தலைமையையும் படை வலிமையையும் இழந்து விடுதலைப் போரை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் நிற்கின்றது.

தமிழீழப் போராட்டத்தை வேறு வடிவில் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தமிழினத்தை காலம் தள்ளிவிட்டிருக்கிறது.

தனக்கு என்று ஒரு மொழியை, பண்பாட்டை, நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகிய தமிழினம் ஒரு அரசை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருந்தது. அரசுக்கான கட்டமைப்புகளையும், முப்படையினரையும் கொண்டிருந்த தமிழீழத்தை சிங்களம் மீண்டும் ஆக்கிரமித்து விட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கின்ற வரலாறு இது. தமிழ் மன்னர்கள் தமது நிலத்தை மீட்பதும், பின்பு அதை சிங்களம் ஆக்கிரமிப்பதுமாகவே ஈழ வரலாறு செல்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு பின்பு தமிழர்களின் நிலத்தின் பெரும் பகுதியை மீட்டு தமிழர்களின் ஆட்சியை மேதகு பிரபாகரன் அவர்கள் நிலைநாட்டியிருந்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நீடித்த தமிழர்களின் இந்த அரசு மீண்டும் சிங்களத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

தாயகத்தில் இயங்கிய தமிழர்களின் அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில் வெளிநாட்டில் தமிழீழ அரசை நடத்துவது பற்றி தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழீழத்திற்கான புறநிலை அரசு (government in exile) ஒன்றை உருவாக்குவது பற்றிய சிந்தனை பல ஆண்டுகளுக்கு முன்பே சிலரிடம் துளிர்விட்டிருந்தது. இது பற்றிய ஆக்கங்களை சிலர் எழுதியிருக்கின்றார்கள். தமக்குள் விவாதித்திருக்கின்றார்கள். ஆனால் புறநிலை அரசுக்கான முயற்சி அதைத் தாண்டி அப்பொழுது செல்லவில்லை.

அதற்கு ஒரு நியாயமான காரணமும் இருந்தது. தமிழர்கள் தம்முடைய தாயகத்தில் ஒரு நிழல் அரசை உருவாக்கியருந்தார்கள். இந்த நிலையில் வெளிநாட்டில் ஒரு அரசை உருவாக்குவது அநாவசியமானதாக இருந்தது. ஒரு நாட்டிற்கு இரண்டு அரசுகள் இருக்க முடியாது அல்லவா?

ஆனால் இன்றைக்கு தமிழர்களின் தாயகம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அங்கே தமிழர்களின் அரசு இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் புறநிலை அரசு பற்றிய சிந்தனை இயல்பாகவே எழுகின்றது.

அந்நிய நாட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டு சொந்த நாட்டில் இயங்க முடியாத நிலையில் பல அரசுகள் வெளிநாடு ஒன்றில் இயங்கிய சம்பவங்கள் வரலாற்றில் பல முறை நடந்திருக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லரின் ஆக்கிரமிப்பில் சிக்கிய பல நாடுகள் தமது அரசை வெளிநாட்டில் அமைத்திருந்தன. அப்பொழுது பல நாடுகளின் பாராளுமன்றங்கள் பிரித்தானியாவில் இயங்கின. கிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட பெல்ஜியம், பிரான்ஸ், போலாந்து, நோர்வே, கிரீஸ் போன்ற பல நாடுகள் இப்படி புறநிலை அரசை அமைத்திருந்தன.

இராணுவப் புரட்சி ஏற்பட்டு சட்ட விரோதமான சர்வாதிகார அரசு ஒன்று குறிப்பிட்ட நாட்டில் உருவாகின்ற பொழுது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின

  • கருத்துக்கள உறவுகள்

"நாடுகடந்த திழழீழ அரசு" தற்போதைய நிலையில் வேறு யாரும் இதைவிடத் தெளிவாக இவ்விடையத்தைச் கூறவில்லை.

அதைவிட இன்னுமொரு விடையம்

தோற்கடிக்கப்பட்ட எத்தனையோ நாடுகள் மீண்டும் எழுந்திருக்கின்றன. வேறு உதாரணங்கள் தேவையில்லை. நாமே இருக்கின்றோம். வரலாற்றில் எத்தனை முறை தோற்றிருக்கின்றோம் என்பதற்கு கணக்கு இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் எழுந்தோம். எமது முன்னோர்கள் தமது கனவுகளை எமக்குத் தந்தனால் நாம் எழுந்தோம். இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டோம். எமது கனவுகளை தொடர்ந்தும் கொடுப்போம்.

இதுவே இன்றைய நிதர்சனம்

  • தொடங்கியவர்

நாடு கடந்த அரசு என்பதை பலர் தவறாகவே விளங்கிக் கொள்கிறார்கள். சிலர் இதை கடல் கடந்த அரசு என்றும் சொல்கிறார்கள். இது மிகத் தவறான விளக்கம்.

ஆனால் நாடு கடந்த அரசு பற்றி விளக்கம் அளிப்பவர்களும் இதற்கான சரியான விளக்கத்தைக் கொடுப்பது இல்லை. புறநிலை அரசு பற்றிப் பேசிவிட்டு நாடு கடந்த அரசு சற்று வித்தியாசமானது என்றும் சொல்லி விட்டு அப்படியே அந்த விடயத்தை தாண்டிச் சென்றுவிடுகிறார்கள்.

நாடு கடந்த அரசு அமைப்பதற்கு முதல் நாம் அதைப் பற்றி ஓரளவு என்றாலும் விளங்கியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோற்கடிக்கப்பட்ட எத்தனையோ நாடுகள் மீண்டும் எழுந்திருக்கின்றன. வேறு உதாரணங்கள் தேவையில்லை. நாமே இருக்கின்றோம். வரலாற்றில் எத்தனை முறை தோற்றிருக்கின்றோம் என்பதற்கு கணக்கு இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் எழுந்தோம். எமது முன்னோர்கள் தமது கனவுகளை எமக்குத் தந்தனால் நாம் எழுந்தோம். இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டோம். எமது கனவுகளை தொடர்ந்தும் கொடுப்போம்

முந்தி நாம் தோல்வியடைந்தது சிறிலங்கா இராணுவத்திடம் மட்டும் ஆகவே மீண்டும் எழுந்தோம் ஆனால் இந்தமுறை தோல்வியடைந்தது சர்வதேசத்திடம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.