Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் மக்களுக்கு பேரிழப்பு என்று கூறிய சர்வதேசம் இனி என்ன சொல்லப் போகிறது: மஹிந்த சமரசிங்க கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் "பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு பேரிழப்பு" என புலிகளின் அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது குற்றஞ் சுமத்திய சர்வதேசம், தற்போது வைத்தியர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் என்ன கூறப் போகின்றது? என்று...

இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு

யுத்தத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின்போது பொது மக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது என பாதுகாப்பு வலயத்தில் இருந்த வைத்தியர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டன. சில சர்வதேச நாடுகள் இலங்கையை நோக்கி விரல் நீட்டின.

பாதுகாப்பு வலயத்தில் இருந்த வைத்தியர்கள் புலிகளின் அழுத்தம் காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர் என நாங்கள் வலியுறுத்திக் கூறினோம். சர்வதேச ஊடகங்களுக்கு விளக்கினோம். பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட நிலைமையை புரிந்துகொள்ளுமாறு கோரினோம். இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்

இந்நிலையில் பாதுகாப்பு வலயத்திலிருந்தவாறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட வைத்தியர்கள் தற்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே தற்போது சர்வதேசம் என்ன கூற விரும்புகின்றது என்று கேள்வியெழுப்புகின்றோம்.

இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே பாதுகாப்பு வலயங்கள் மற்றும் பாதுகாப்பு பாதைகள் பிரகடனம் செய்யப்பட்டன.

இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளை மிகவும் ஒழுக்கமான முறையில் மேற்கொண்டனர். இப்போதாவது சர்வதேசம் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்

Edited by ஜீவா

சர்வதேசம் என்ன சொல்லவேண்டும் என்று நீங்கள் நினைப்பதையும் சொல்லவும்!

இதை பார்த்து விட்டு நீங்கள் கேட்கும் பிச்சையை தரும்படி கேட்கவும்..... அதை விட்டு விட்டு சர்வதேசம்

ஏதவது சோல்ல வேண்டும் என்றால் என்னத்தை சொல்வார்கள்? இதுதான் உண்மையென்றால்

நீங்கள் சொல்லும் சர்வதேசத்தை சுதந்திரமாக ஒரு விசாரணை செய்யவிடுங்கள் அப்போ அவர்கள்

என்ன சொல்வார்கள என்று பார்ப்போம்.....

இதுகு எல்லாத்துக்கு முன்னம் உங்கள் ஆறிக்கைக்களுக்கு சர்வதேசம் என்ன மரியாதை கொடுக்கிறார்கள் என்ரு தெரிந்து வைத்துகொள்ளவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சர்வதேசம் நல்ல சொறிலங்கா..

என்ன நாடகம் அப்பா.. பொய் சொல்லுறவன் புளுத்துத் தான் சாவானாம்.. உவனக்கும் அந்த நிலமை தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சொல்ல வச்சுட்டீங்களே .........ஆயிரங்களை ........நூறுகள் என்று .......இனி என்ன நீங்கள் விரும்பிய படிதான்........ஆடு மட்டும

ஆடி ஓயுங்கள். ஆட்டம் போட்ட கூட்டமொன்று ..ஒரு நாள் ..ஓட்டம் காணும். காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்த செய்திக்கு என்ன சொல்ல போகிறீர்கள் மகிந்த சமரசிங்க? போருக்கு பின்னரே இவ்வளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் போருக்கு முன்?

வாரந்தோறும் 1400 இடம்பெயர்ந்தோர் உயிரிழப்பதாக லண்டன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது :

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் வாரந்தோறும் 1400 பேர் உயிரிழப்பதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமில் இந்தப் பேரவலம் இடம்பெறுவதாக தொண்டு நிறுவனங்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை கொண்டாடி வரும் இலங்கை அரசாங்கம் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்த வலயத்தில் இன விகிதாசாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டினால் பலர் உயிரிழப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....11719&cat=1

சிறிலங்கா ஒரு வெறிநாய், சர்வதேசங்கள் சொறிநாய்கள், எவன் என்னத்தைச் சொன்னாலென்ன.

பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான முன்னைய தகவல்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை: ஐ.நா. திட்டவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காவல் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக தாம் ஏற்கனவே தெரிவித்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.

போர்ப் பகுதிகளில் பணிபுரிந்து தற்போது சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் தாம் விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பொதுமக்களின் இழப்புக்களை மிகைப்படுத்தி வெளியிட்டதாக அறிவித்திருப்பதன் பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளில் ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது" என சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். மருத்துவர்கள் தாம் ஏற்கனவே தெரிவித்த எண்ணிக்கையை இப்போது மாற்றித் தெரிவித்திருப்பதையிட்டுக் கேட்டபோது அது தொடர்பாக தனக்கு நேரடியாக எந்தத் தகவலும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.puthinam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.