Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் அவர் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.முதலில் தனிப்பட்ட விஜயமாக மேற்கொள்ள நினைத்திருந்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கனிமொழியை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அனுப்புவது என்று முடிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்புக்குழ உருவாக்கப்பட்டு அதற்கு தலைமையேற்று கனிமொழி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று வருவார் என்றும் இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனிமொழியுடன் தமிழகத்திலிருந்து மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்குழுவில் இடம்பெறக்கூடும் என்றும் இருவரில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்.பிக்ககள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் கொண்ட குழு விரைவில் இலங்கைக்கு செல்லும் என்று தெரிகிறது.

நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

தற்போது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா நிதியுதவி கனிமொழியின் பயணத்தின் பின்னர் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.meenagam.org/?p=5510

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி டோனி தலைமையில் இந்தியா தோர்த்ததோ அதே போன்ற நிலைமை தான் இலங்கையில். பெரிய மாறுதல் ஏற்பட்டால் அது கடவுளின் செயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனிமொழிக்கு புலி பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பிருப்பதனால் இவரை சுதந்திர ஒன்றுபட்ட இறையான்மயுள்ள ஸ்ரீலங்காவுக்குள் அனுமதிக்கவேண்டாம் என்று மதிப்புக்குரிய மகிந்த ராஜபக்ச அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மத்தியில் அழகிரி மானிலத்தில் ஸ்டாலின் அப்போ சர்வதேசதுக்கு கனிமொழி நரி மூலை நல்லாதான் வேலை செய்யுது.

முகாம் மக்கள் கல் எறிந்து கலைக்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து சாகடிச்சு போட்டு இப்ப செத்த வீட்டுக்கு வாறியள்.

எங்களை எங்கள் ஊருக்கு அனுப்பினால் சரி. இங்ச வந்து எங்களை பார்த்து அனுதாபபட வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் அழகிரி மானிலத்தில் ஸ்டாலின் அப்போ சர்வதேசதுக்கு கனிமொழி நரி மூலை நல்லாதான் வேலை செய்யுது.

அரசியல் சாணக்கியம்

முகாம் மக்கள் கல் எறிந்து கலைக்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து சாகடிச்சு போட்டு இப்ப செத்த வீட்டுக்கு வாறியள்.

எங்களை எங்கள் ஊருக்கு அனுப்பினால் சரி. இங்ச வந்து எங்களை பார்த்து அனுதாபபட வேண்டாம்

செயற்படுத்துவது யார்???

அதையும் ஈழத்தில வதங்கிக்கொண்டிருக்கும் மானமுள்ள தமிழன் தான் செய்ய வேண்டுமா......

அரசியல் சாணக்கியம்

செயற்படுத்துவது யார்???

நீங்கள் நன்றாக .... பீர் அடித்துக்கொண்டு... சன் பிக்சர்ஸ் வெளியீடுகள் மற்றும் தரங்கெட்ட தமிழக வெளியீட்டு படங்களை ப்பார்த்துகொண்டு சுகமாக கதை விட்டுக்கொண்டு இருப்பீர்களா....

வெளி நாடுகளில் வாழும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழன் தான் சன் குழுமம் உட்பட ,பல இன துரோகிகளுக்கு வருமானம் ஈட்டித்தருபவன்...

எல்லாத்தையும் ஈழத்தில் வதங்கும் தமிழன் பார்த்துக்கொள்வான்...

நான் சுகமாக கிடந்து படங்கள் பார்த்து ரசிப்பேன் என்னய்யா உங்க நியாயம்???

னீங்கள் வாழும் நாடுகளில் ஒழுங்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளீர்களா???

அந்த அமைப்புகளை பிற நாட்டு தமிழ் அமைப்புகளோடு உறவுகள் பேணும் வகையிலும்.... தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுஅமைப்புகளோடும் ... உறவுகள் பேணி ... பல ஊடகங்களை உருவாக்கி நம் தரப்பு நியாயங்கள் வெளிப்படுத்த பரப்புரை செய்ய ஏதாவது நடவடிக்கை இதுவரை எடுத்ததுண்டா??

சரி நீங்கள் வாழும் நாடுகளில் எத்தனை தமிழக இனத்துரோகி தலைவர்கள் மீது கல்லடித்தீர்கள்???

இல்லை என்றால் தண்டனை பயம் காரணமா??

ஈழத்தில் வாழும் தமிழன் ,தான் கல்லும் அடிக்க வேண்டும் ஷெல்லும் அடிக்க வேண்டும் .... நாங்கள் சும்மா இருப்போம் நல்லா இருக்குங்க உங்க நியாயம்...

போங்க போய் உங்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ,சிங்கள தூதரகங்களை முற்றுகையிடுங்கள் ...

வேலிக்குள் கிடக்கும் உறவுகளை மீட்க நடவடிக்கைகள் எடுங்கள்.......

குறைந்த பட்சம் உங்களால் தமிழக ... டி.விக்களை யும் படங்களையும் புறக்கணிக்க முடியுமா???

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த பட்சம் உங்களால் தமிழக ... டி.விக்களை யும் படங்களையும் புறக்கணிக்க முடியுமா???

ஐயா வேலவன்

தங்கள் ஆதங்கம் புரிகிறது

அங்கு வாழும் மக்களால் இன்றைய நிலையில் எதுவுமே செய்யமுடியாது என்றுதான் அப்படி எழுதினேன்

ஆனால் எம்மால் முடிந்தவரை செய்தோம் ஐயா

இன்றும் செய்கிறோம்

இன்னும் செய்வோமையா.....

நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்லி விட முடியாது.... ஆனால் அமைப்புகளை சரியாக உருவாக்கவில்லை வெளி நாடுகளில் என்றே எண்ணத்தோன்றுகிறது....

யூதர்களைப்பார்த்து நாம் நிறையக்கற்றுக்கொள்ள வேண்டும்!

சும்மா பணம் கொடுப்பது மட்டும் போதாது...

அமைப்பை உருவாக்கி .... அதன் வாயிலாக அரசியல் தலைவர்களை அணுகி காரியம் சாதிக்க வேண்டாமா

சன் போண்ற ஊடகங்களுக்கு நிறைய லாபம் உங்களால் வருகிறது.... நீங்கள் அதற்கு கைமாறாக ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை காட்டச்சொல்லுங்கள் .... காட்ட மறுத்தால் புறக்கணியுங்கள் .... சட்டப்படி கட்டமைப்புகளை உருவாக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் GTV தவிர்ந்த எந்த தொலைக்காட்சியும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? எல்லாம் முடிந்து சங்கூதிய பின்னர் மிச்சம் மீதி ஏதாவது விட்டுப்போயிருந்தால் போட்டுத்தள்ளவா? பச்சோந்திக்குப் பிறந்ததுகளிடம் என்ன தீர்வை எதிர்பார்க்க முடியும்? விட்ட வரலாற்றுப்பிழைக்கு முலாம் பூசும் அரசியல் சித்து வேலைக்கு திறந்தவெளிச் சிறையில் வாடும் மக்களா கிடைத்தார்கள்? இதுகள் அலரி மாளிகையில் பல்லிளித்து போஸ் கொடுக்க தமிழர்களின் ஏதிலி வாழ்க்கையிலும் விளையாடுகிறார்கள். என்ன செய்ய, இத்தனை நாட்கள் காத்துவந்த புலிகளின் அருமை குறைகளே இருப்பினும் இப்போதாவது புரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவும் மகளும் சொனியாவோட செந்து எங்கட உறவுகள கொலை செய்து போட்டு..

இப்ப.... :(

உங்களுக்கு இருக்கடி இரு நாளைக்கு பெரிய ஆப்பு ..

உண்ட அப்பன் ஒரு செத்த பிணம் மடி பிணம் தின்னி :icon_idea: .. அவன் ஒரு காசு பூதம்..நீங்கள் எல்லாரும் சேந்து போட்ட நாடகம் எல்லாம் எங்களுக்கு தெரியும்....

எங்கட உறவுகள் அங்கை உயிரை பலி கொடுக்க.. நீயும் உன்ட அப்பனும் பாட்டாசு கொளுத்தி உங்கட வெற்றிய கொண்டாடினிங்கலெல்லோ... :D

உங்கள மாரி கேவலம் கெட்டவங்கள் இருக்கிற படியாத் தான் தமிழ் இனத்துக்கே அவமானம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே

கடந்த மே மாதத்தில் 16 ந் திகதியும் அதற்கும் எமது செய்தியாளர்கள் கனிமொழியை தொலைபேசியில் இருமுறை தொடர்புகொண்ட பொழுதும் ஈழம் பற்றி பேசுகிறோம் என்றவுடன் தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மறுபடியும் தொடர்புகொண்ட பொழுது நமது( அயலக) எண் மற்றும் ஏனைய எண்களிலிருந்து அழைத்தும் call attend செய்யவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே

கடந்த மே மாதத்தில் 16 ந் திகதியும் அதற்கும் எமது செய்தியாளர்கள் கனிமொழியை தொலைபேசியில் இருமுறை தொடர்புகொண்ட பொழுதும் ஈழம் பற்றி பேசுகிறோம் என்றவுடன் தொடர்பை துண்டித்துவிட்டார்கள். மறுபடியும் தொடர்புகொண்ட பொழுது நமது( அயலக) எண் மற்றும் ஏனைய எண்களிலிருந்து அழைத்தும் call attend செய்யவில்லை.

நண்பா

நமக்கு எல்லாம் தெரியும்டா

நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்லி விட முடியாது.... ஆனால் அமைப்புகளை சரியாக உருவாக்கவில்லை வெளி நாடுகளில் என்றே எண்ணத்தோன்றுகிறது....

யூதர்களைப்பார்த்து நாம் நிறையக்கற்றுக்கொள்ள வேண்டும்!

சும்மா பணம் கொடுப்பது மட்டும் போதாது...

அமைப்பை உருவாக்கி .... அதன் வாயிலாக அரசியல் தலைவர்களை அணுகி காரியம் சாதிக்க வேண்டாமா

சன் போண்ற ஊடகங்களுக்கு நிறைய லாபம் உங்களால் வருகிறது.... நீங்கள் அதற்கு கைமாறாக ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை காட்டச்சொல்லுங்கள் .... காட்ட மறுத்தால் புறக்கணியுங்கள் .... சட்டப்படி கட்டமைப்புகளை உருவாக்குங்கள்

எல்லாரும் கள்ளர், கருணாநிதி செய்தது மகாதவறு என்பது எல்லாத்தமிழருக்கும் தெரியும். அறிக்கை விடும் சங்கங்கள் அமைபுக்கள் அதை அந்த எட்டப்பனுக்கு உணர்த்துவதற்ற்காக கூட ஒரு கண்டன அறிக்கை விட முன்வரவில்லை.

இப்படி நரிக்குணம்

ஏனென்றால் பார்ப்பவன் அழிந்து போய்விட்டான், ஏன் இருப்பானையும் பகைத்து சங்கங்கள் அமைப்புக்கள் பெயரை கெடுப்பான் என்றுதான் முன் வரவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.