Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு

திகதி: 19.07.2009 // தமிழீழம்

பிரான்ஸ் தலைநகர் பரிசின் லாச்சப்பல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் மற்றும் சிங்கள இளைஞர்களையும் உள்ளடக்கிய காடையர்கள் குழுவொன்று தமிழ் வர்த்தகரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது.

சம்பவத்திற்கு முதல்நாள் லாச்சப்பல் பகுதியில் வழமைக்கு மாறாக புளொட் குழுவினரால் கொல்லப்பட்ட அக்குழுவின் தலைவர் நினைவாக இரவோடு இரவாக இரகசியமாக வந்து வர்த்தக நிலையங்களின் கதவுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ன. இதனை மறுநாள் காலை அங்கு வந்த வர்த்தகர்கள் கிழித்தெறிந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த குறிப்பிட்ட வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த காடையர்கள் சிலர், சுவரொட்டியை கிழித்தமைக்காக ஆயிரம் ஈரோக்களை வழங்கவேண்டும் என எச்சரித்திருந்தனர். பின்னர் மாலை 9979 YY 93 எனும் இலக்கம் கொண்ட சாம்பல் நிற (எஸ்பஸ்) ரக வாகனத்திலும், மேலும் அங்கு தயார் நிலையில் நின்ற இருபது வரையான காடையர்களும் இணைந்து வர்த்தகரை மிரட்டி குறைந்தது 500 ஈரோக்களையாவுதல் தரவேண்டும் என எச்சரித்துள்ளனர்.

வர்த்தகர் காவல்துறையினருக்கு தொலைபேசி எடுக்க முனைந்தபோது, காவல்துறையினருக்கு தொலைபேசி அடிக்குமாறும் தங்களை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியாது எனவும் நையாண்டி செய்தவர்கள், இரண்டு நாளில் வெளியே வந்துவிடுவோம் நீ இதிலைதானே கடை வைத்திருப்பாய் என்ற ரீதியில் எச்சரித்துடன், இந்த கடைக்கு முன்னால்தான் வந்து நிற்போம் என எச்சரித்துள்ளனர்.

இறுதியில் அவர்களின் கடுமையான அச்சுறுத்தலால் அப்போது வர்த்தகரிடம் இருந்த 250 ஈரோக்களை அவர்களிடம் வழங்கியுள்ளார். அத்துடன், மேலும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை, லாச்சப்பலில் மேலும் சில வர்த்தகர்களை இவர்கள் மிரட்டியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. கொழும்பில் லாச்சப்பல் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை தாங்கள் புலனாய்வுத்துறையிடம் வழங்கியிருப்பதாகவும், இங்கிருந்து கொழும்பு சென்றால் வர்த்தகர்கள் மீது அங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவரும் இந்தக் காடையர்கள், அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கும் இலகுவாக கொழும்பு சென்று வருவதற்கும் தங்களுக்கு குறைந்தது 5000 முதல் 1000 ஆயிரம் வரையான ஈரோக்களை வழங்குமாறும் எச்சரித்து வருகின்றனர்.

அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த ஈ.பி.டி.பி. குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது இக்குழுவினருக்கு அவரால் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இவ்வாறான குழுக்கள் என்று சொல்லிக்கொண்டு நடமாடுவதற்கே அச்சப்பட்ட இவர்கள், தற்போது அவ்வாறான குழுக்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு சுதந்திரமாக நடமாட வெளிக்கிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வெட்கமாக இல்ல. இதென்ன யாழ்ப்பாணமா அல்லது கொழும்பா.

போய் பொலிஸீல முறையிட வேண்டியதுதானே. இங்கு சட்டத்தை மதிக்காதவர்களை குறித்த நாடுகள் தண்டிக்கப் பின் நிற்கா..!

புலிகள் தாயகத்தில் தான் பலவீனம் அடைந்தார்கள்.புகலிடத்திலுமா. ஆயுதத்தை விடுங்கள்.. சட்டத்தை சரியாகப் பாவியுங்கள். இந்தக் கோடரிக்காம்புகளின் கொட்டம் அடக்கலாம்..!

டக்கிளஸ் தேவானந்தா தப்பி விட்டவன் அல்ல. அவனுக்கு எமன் காத்துக் கொண்டுதான் இருக்கிறான்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ரண்டு மூண்டு தரம் போய்க் கேட்டதற்கே "புலிகள் மிரட்டிப் பணம் வாங்கீனம்" எண்டு சட்டத்திடம் முறையிட்டுத் தான் பதினாறு தமிழ் ஆர்வலர்கள பொலிஸ் உள்ள பிடிச்சுப் போட்டது. இதை முறையிட ஏன் தான் நாக்கில்லாமல் போனது? ஓ விளங்குது.. இங்க முரண்டு போட்டு ஈழத்துக்குப் போயிருந்தா புலிகள் உங்கள ஒண்டும் செய்திருக்க மாட்டீனம். ஆனா டக்கி குழு அப்பிடியில்லைத் தானே?

உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுகருத்து மந்திரம் இதுதானோ?

நல்ல வேணும்... ( ஒரு தொலைநோக்கில்.... :( )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.