Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் சுயநலத்தால் வீழ்ந்த போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயலின்றி.. வெற்றி இல்லை.. தாகமும் தீராது.

செயலிழந்த ஒரு புலம்பெயர் சமூகத்தையே இப்போ அவதானிக்க முடிகிறது. மீண்டும் பழைய கிழவி கதவத்திறவடி நிலையாய்..??!

எழுதலாம்.. அழகா.. தமிழரின் தாகம் தமிழீழம் என்று.. புலிகளின் தாகத்துக்கு ஒரு விடை கிடைக்கல்ல... தமிழரின் செயற்பாட்டு வேகத்தை பார்க்கிறப்போ.. தாகம் தீருறாப் போல தான் இருக்குது.

அதுசரி.. யார் இந்தப் புலம்பெயர் மக்கள்.. யாரு இவையைப் புலம்பெயரச் சொன்னது. போராடக் கேட்டதா.. புலம்பெயரக் கேட்டதா.. இப்படியும் பதில் கேள்வி விதண்டாவாதமாகக் கேட்கலாம்.

அதல்ல தேவை. இப்போ தேவை.. ஓரிருவரின் செயற்பாடல்ல. ஒட்டு மொத்த மக்களின் செயற்பாடு ஒரே திசையில் விடுதலையின் திசை நோக்கி இருக்க வேண்டிய இன்றே தவிர வேறல்ல. அதை தொடங்க வேண்டியவர்கள்.. நீங்கள் சொன்ன புலம்பெயர் மக்களே.

ஆனால் அப்படியா ஏதும் தெரியல்ல. எனி இன்னொரு பிரபாகரன் வந்து.. இவர்களை எழுப்பும் வரை.. கும்பகர்ண நித்திரைதான் போங்கோ..! :D

புலிகள் பலமாக போராடிக் கொண்டிருந்த காலத்திலையே ......

புலம் பெயர் மக்களில் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு ஈழப்பிரச்சினையை பற்றி , பிறநாட்டவர்களுக்கு விளங்கப் படுத்துவது போல் விளங்கப் படுத்த வேண்டியிருந்தது .

அவர்கள் ஈழப்பிரச்சினையின் காரணமாக அகதி அந்தஸ்து கோரி , குடியுரிமையும் பெற்ற பின்பு பலருக்கு ஈழப்பிரச்சினை மறந்து விட்டது .

இனி அவர்களின் தூக்கத்தை கலைப்பதென்பது , கல்லில் நார் உரிப்பது போலைத் தான் .

பொதுமக்கள் ஒற்றுமையாக கடுமையான காரியங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. யூத சமுதாயத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டபோது கூட அவர்கள் ( பொதுமக்கள்) ஒற்றுமையான சமுதாயமாக செயற்படவில்ல. ஆனால் யூதர்களின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் சாணக்கியமாக நடந்து கொண்டதனால் அவர்களுக்கு நாடு கிடைத்தது.

அது...மக்கள் போராட்டம்.ஒற்றுமை இதெல்லாம் சும்மா பில்டப்..போராடும் குழு தான் எல்லாம்

உங்கள் கட்டுரையை வலுப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்பதால்

நீங்கள் குறிப்பிட்ட ஐந்து வகையினரை விட ஆறாவதாக ஒன்று இருக்கின்றது அது உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இருட்டடிப்பு செய்திருக்கின்றீர்கள்

இதுவே உங்களது கட்டுரையின் பொது நலன் என்பதான சந்தேகம் அதறகாக நீங்கள் எழுதியதெல்லாம் பொய் என்று சொல்லவரவில்லை

ஏற்கனவே நீங்கள் அகதி அந்தஸ்து பற்றி காரசாரமாகவும் காழ்ப்புணர்ச்சியாகவும் எழுதுபவர் இது யாழில் உங்களது தனிப்பட்ட ஓரவஞ்சகம் கூட

இதன் பின்புலத்தில் நிச்சயமாக உங்களது சுயநலன் இருக்கின்றது

இதுவே இக்கட்டுரையின் இரட்டை வேடம்

எந்த விடுதலையும் புலம்பெயர்ந்த அந்த மக்கள் தான் உந்து சக்தியாக இருந்திருக்கின்றார்கள்

எம் புலம் பெயர் மக்கள் செய்தது காணாது என்று சொல்லாம் அதற்காக செய்யவில்லை என்று சொல்லுவதும் நொண்டி சாட்டுகள் சொல்லுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது

இறுதி கட்டத்தில்

எனக்கு தெரிந்து மாற்று கருத்தாளர்கள் பலர் வீதிக்கு வந்திருந்தார்கள் பலர் வேலைகளை இழந்தும் இருக்கின்றார்கள்

அவை காலம் கடந்தவையாக இருந்தாலும் மக்களின் எழுச்சியினால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது

அதற்கு யார் காரணம் ?? சர்வதேசத்தின் ஒட்டுமொத்த விரோதத்தை யாராலும் மாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை

Edited by tamilsvoice

தமிழர் எதிர் சிங்களவர் எனும் நிலையில் வாழ்வா சாவா எண்று தமிழன் இருக்கும் போது... நீங்கள் மரியாதையாக வாழ வேண்டும் ஆகவே தமிழனுக்குள் இருக்கும் சாதியை ஒளியுங்கள் எண்று பிரச்சாரம் செய்வதுதான் இன உணர்வா...???

ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்னன் வீணை வாசித்துக்கொண்டிருந்தானம் என்று சொல்லுவது இதற்கு பொருந்தும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையை வலுப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்பதால்

நீங்கள் குறிப்பிட்ட ஐந்து வகையினரை விட ஆறாவதாக ஒன்று இருக்கின்றது அது உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இருட்டடிப்பு செய்திருக்கின்றீர்கள்

விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இருந்து அனுமதி பெற்று கல்வி.. மற்றும் வேலை விடயமாக வெளியேறியோர் இதில் அடக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் 100% நாட்டுச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வெளியேறியவர்களாக இனங்காணப்பட முடியாதவர்கள். அவர்கள் நாடு நல்லா இருந்தாலும் கெட்டுப் போயிருந்தாலும் வெளியேற விரும்பின் வெளியேறி இருப்பர். அதுமட்டுமன்றி அவர்களில் எவரும் வெளிநாட்டு அரசுகளிடம் அரசியல் பேசி போராட்டத்தை நாட்டைக் காட்டிக் கொடுத்து விசா வாங்கவில்லை. அவர்கள் தகுதி அடிப்படையில் வெளியேறியோர் ஆவர்..! அவர்கள் தாயகத்துக்கு எப்போது தேவையெனினும் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் அகதி அந்தஸ்துப் பெற்ற பெற்றோரோடு.. பிள்ளைகளோடு இணைந்தோர் மற்றும் அகதி அந்தஸ்தை பெற்றவர்களை திருமணம் செய்து வெளியேறியோர் இன்னொரு பெரிய பட்டியலில் இருப்பினும்.. அவர்கள் தேசத்துக்கு எதிராக பொய் சொல்லி போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து விசாப் பெற்றிருக்க வாய்ப்பில்லை.. என்பதால் அவர்களும் உள்ளடக்கப்படவில்லை.

இங்கு காழ்ப்புணர்வும் இல்லை ஒரு உணர்வும் இல்லை. தேசத்துக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்து தேசத்தை விட்டு வெளியேறியோர் தொடர்ந்தும் தேச நலனில் அக்கறையற்று செயற்படுவதையே இனங்காட்டி இருக்கிறோம்.

புலம்பெயர்ந்த மக்கள் என்று (அது எல்லோரையும் உள்ளடக்கும்..) எல்லோரும் சுயநலத்தோடு இயங்கின்.. அது விடுதலைக்கு உதவாது என்று எல்லோரையும் குறிப்பிட்டே எழுதி இருக்கிறோம். இதில் யாரும் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை.

அப்படித் தெரிந்தால் அதற்கான விளக்கம் இதுவாகவே இருக்கும். அந்தப் பார்வையை அகற்றிக் கொள்வது நன்று. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் கல்வி, தொழில் காரணமாக புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். (Skill Migrant)

இந்நாடுகளில் அகதியாக வாரவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அண்மைக்காலங்களில் படகுகள் மூலம் இந்தோனேசியாவில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வந்திருக்கிறார்கள். கல்வி கற்க வரும் மாணவர்கள், உறவுகளைச் சந்திக்கவரும் உறவினர்கள் இங்கு வந்ததும் தற்போதைய தாயக நிலமைகளைக் காட்டி அகதி அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இருந்து அனுமதி பெற்று கல்வி.. மற்றும் வேலை விடயமாக வெளியேறியோர் இதில் அடக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் 100% நாட்டுச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வெளியேறியவர்களாக இனங்காணப்பட முடியாதவர்கள். அவர்கள் நாடு நல்லா இருந்தாலும் கெட்டுப் போயிருந்தாலும் வெளியேற விரும்பின் வெளியேறி இருப்பர். அதுமட்டுமன்றி அவர்களில் எவரும் வெளிநாட்டு அரசுகளிடம் அரசியல் பேசி போராட்டத்தை நாட்டைக் காட்டிக் கொடுத்து விசா வாங்கவில்லை. அவர்கள் தகுதி அடிப்படையில் வெளியேறியோர் ஆவர்..! அவர்கள் தாயகத்துக்கு எப்போது தேவையெனினும் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் அகதி அந்தஸ்துப் பெற்ற பெற்றோரோடு.. பிள்ளைகளோடு இணைந்தோர் மற்றும் அகதி அந்தஸ்தை பெற்றவர்களை திருமணம் செய்து வெளியேறியோர் இன்னொரு பெரிய பட்டியலில் இருப்பினும்.. அவர்கள் தேசத்துக்கு எதிராக பொய் சொல்லி போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து விசாப் பெற்றிருக்க வாய்ப்பில்லை.. என்பதால் அவர்களும் உள்ளடக்கப்படவில்லை.

இங்கு காழ்ப்புணர்வும் இல்லை ஒரு உணர்வும் இல்லை. தேசத்துக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்து தேசத்தை விட்டு வெளியேறியோர் தொடர்ந்தும் தேச நலனில் அக்கறையற்று செயற்படுவதையே இனங்காட்டி இருக்கிறோம்.

புலம்பெயர்ந்த மக்கள் என்று (அது எல்லோரையும் உள்ளடக்கும்..) எல்லோரும் சுயநலத்தோடு இயங்கின்.. அது விடுதலைக்கு உதவாது என்று எல்லோரையும் குறிப்பிட்டே எழுதி இருக்கிறோம். இதில் யாரும் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை.

அப்படித் தெரிந்தால் அதற்கான விளக்கம் இதுவாகவே இருக்கும். அந்தப் பார்வையை அகற்றிக் கொள்வது நன்று. :D

உப்பிடிப் பாத்தால் கனடாவில அகதி அந்தஸ்து கோரியவர்கள் மிகக் குறைவானவரோ. அனேகமானவர்கள் குடும்பம் குடும்பமாக sponsor இல் வந்தவர்களே. :lol:

மேலும் அகதி அந்தஸ்துப் பெற்ற பெற்றோரோடு.. பிள்ளைகளோடு இணைந்தோர் மற்றும் அகதி அந்தஸ்தை பெற்றவர்களை திருமணம் செய்து வெளியேறியோர் இன்னொரு பெரிய பட்டியலில் இருப்பினும்..

நான் குறிப்பிட்டது இது வல்ல

தமிழீழத்திற்கு அப்பால் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள், புலிகளுக்கு உதவியோர், புலிகள் என்னும் பெயரில் அப்பாவிகள் பலர் சிறிலங்காவின் நீதிமன்றங்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை முடிந்து வெளியேறி அந்த சான்றிதழ்களுடன் அகதி அந்தஸ்து பெற்றவர்கள்

இவர்கள் பெரும்பாலும் தேச உணர்வு அற்றவர்களாகவே பின்னர் காணப்படுகின்றார்கள் அது வேறவிடயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.