Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த ஈழப்போராளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காப்பாற்ற யார் வருவார்கள்?:

சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த ஈழப்போராளிகள்

[ நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி, பொருண்மியப் பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். ஈற்றில் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை சிறிலங்கா படையினர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மொத்தத்தில் சர்வதேச போர் நியமங்களை அனைத்தையும் மீறிய படுபாதகங்களை அங்கு அரங்கேற்றியது.

அதன்பின்னர், சரணடைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை தனித்தனியான குழுக்களாக பிரித்து கிளிநொச்சி மற்றும் ஏனைய பிரதேசங்களில் வைத்து விசாரணைசெய்த படையினர் அவர்களிலிருந்த உயர்மட்ட உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு சென்று நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்தனர். இவர்களில் பலர் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் செயற்பட்ட நீண்டகால உறுப்பினர்களும் அடங்குவர்.

இவ்வாறு விசாரணை செய்யப்பட்ட பின்னர் முக்கிய உறுப்பினர்கள் பலரையும் அரசு தொலைக்காட்சிகளுக்கு வந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக செவ்வி தரும்படி அரச புலனாய்வுத்துறையினர் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். புலனாய்வுத்துறையின் இந்த வேண்டுகோளை நிராகரித்த பல நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தினர், தலைமையின் பணிப்பின்பேரில் ஆயதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைந்த நாம், எமது தேசத்துக்கும் தேசியத்துக்கும் இலட்சியத்துக்கும் துரோகமிழைக்கும்வகையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனையடுத்து மீண்டும் வன்னிக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த நூற்றுக்கணக்கான போராளிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

நான் இப்பிடியெல்லாம் இழப்புக்கள் ஏற்பட்டு இருக்கிது எண்டு ஒரு அன்ரியோட கதைக்கேக்க சொன்னன். அவையள் சொல்லுறீனம்.. சுதந்திரம் எண்டால் இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டால்தான் கிடைக்குமாம். யாரோ ஒருத்தர் பத்திரிகையில் எழுதி இருக்கிறாராம்.

நான் இப்பிடியெல்லாம் இழப்புக்கள் ஏற்பட்டு இருக்கிது எண்டு ஒரு அன்ரியோட கதைக்கேக்க சொன்னன். அவையள் சொல்லுறீனம்.. சுதந்திரம் எண்டால் இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டால்தான் கிடைக்குமாம். யாரோ ஒருத்தர் பத்திரிகையில் எழுதி இருக்கிறாராம்.

அன்ரி சொன்னவவோ அல்லது நீங்கள் சொல்லுறியளோ?

ஏன் துரோகி பட்டம் ஏதும் தரப்போறியளோ?

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் என்ன செய்கின்றன.

இது தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களையும் சர்வதேச சமூகம் மீது அழுத்தங்களையும் மேற்்கொண்டால் என்ன.

ஏன் அனைவரும் இது தொடர்பில் மவுனம் சாதிக்கின்றனர் என விளங்கவில்லை.

ஏன் துரோகி பட்டம் ஏதும் தரப்போறியளோ?

எந்த பல்கலைக்கழகத்தில கொடுப்பினம் அந்த பட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில குடுப்பீனம்

நான் இப்பிடியெல்லாம் இழப்புக்கள் ஏற்பட்டு இருக்கிது எண்டு ஒரு அன்ரியோட கதைக்கேக்க சொன்னன். அவையள் சொல்லுறீனம்.. சுதந்திரம் எண்டால் இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டால்தான் கிடைக்குமாம். யாரோ ஒருத்தர் பத்திரிகையில் எழுதி இருக்கிறாராம்.

கெட்டதுக்கை நல்லது காணுறதிலை எங்கட ஆக்களை விட்டால் யாரும் கிடையாது...

நேற்று ஒருவர் KP அண்ணையை பிடிச்சு போட்டினமாம் எண்டு மிக வருத்தமாக பேசி கொண்டு இருந்தார்.. அவரிட்ட அண்ணை இப்ப KP அண்ணண ஒரு தேடப்படும் நபர் அல்லது தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டவர்... இப்ப அவர் வெளிப்படையாக செயற்பட வேணும் எண்டால் அவர் பிடிபட்டு பின்னர் விடுவிக்க பட்டால்தானே முடியும்.. இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைச்சன்.. மனுசன் துள்ளி குதிக்காத குறை...

என்னத்தை சொல்லுறது... மற்றவனிலை தங்கள் சுமக்க வேண்டிய பாரத்தை சுமத்திப்போட்டு இருக்கிறதிலை இருக்கும் ஆர்வம்தான் அது எனும் உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கு...

Edited by தயா

ஈழநேசன் இணையதளத்தில் வெளியான கட்டுரையை இன்போதமிழின் ஊடகபணிமனை வெளியிட்டியிருக்கிறது.

ஊடக பணியில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Edited by vishal

ஈழநேசன் இணையதளத்தில் வெளியான கட்டுரையை இன்போதமிழின் ஊடகபணிமனை வெளியிட்டியிருக்கிறது.

ஊடக பணியில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

nbxmxg_th.jpg

ஏன் துரோகி பட்டம் ஏதும் தரப்போறியளோ?

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை .......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.