Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேபி; கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பான சகல விபரங்களும் வழங்கப்பட்டுள்ளது ‐ பாதுகாப்புத் தரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான முயற்சியினாலும் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நான்கு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு புலனாய்வுப் பிவினராலுமே கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் கே.பி.க்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளது எனவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி.யிடம் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சர்வதேச ரீதியிலான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் கே.பி. சந்தித்திருந்த வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் பாதுகாப்பு தரப்புக்கு தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் அரச துரோகம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் எனும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கே.பி.க்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன. இந்நிலையில் அவர் வெகு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....13009&cat=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைதாகியுள்ள கே.பி புலிகளின் இரகசியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார் ‐ ஞாயிறு லங்காதீப :

கே.பி கைதாகியுள்ள 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் ஆதரவாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பற்றிய சகல தகவல்களையும் அம்பலப்படுத்தியுள்ளதாக ஞாயிறு லங்காதீப தெரிவிக்கின்றது.

அந்த செய்தியின் விபரம் வருமாறு: கே.பியின் தகவல்களை அடுத்து எதிர்வரும் தினங்களில் பல சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மலேசியாவில் கே.பி கைதாகும் சமயம் இந்தோனேஷிய அச்சே பிரதேசத்தில் நாடு கடந்த தமிழீழம் அமைப்பது குறித்து ஆலோசனையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை புலனாய்வு பிரிவினரின் தனித்த முயற்சியினாலும், ஏனைய நான்கு நாடுகளின் உதவியுடனும் கே.பியை கைது செய்ய முடிந்துள்ளது. புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவர்களுள் ஒருவரான அறிவழகனுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகளே அவர் கைது செய்யப்படுவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்று தெரிய வருகின்றது.

கே.பி தற்பொழுது வெளியிட்டுள்ள தகவல்களின் படி அவர் சந்தித்த தூதுவர்கள் மற்றும் பிரபல சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பற்றிய விபரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன.

கே.பி கைதான செய்தியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதிக்கு அறிவித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்ற ஜனாதிபதி முழுமையாக புலிகளை முடக்கி விட்டதற்காக பாதுகாப்பு செயலாளருக்கும் புலனாய்வுப்பிரிவினருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

updated - 2009-08-09

மூலம் - Singhala News Paper

GTN.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரை என்னென்ன சித்திரவதை எல்லாம் செய்திருப்பாங்கள்,ஏன் தான் கவலையீன்மாக இருந்தரோ தெரியவில்லை :icon_idea:

கைதாகியுள்ள கே.பி புலிகளின் இரகசியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார் ‐

புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவர்களுள் ஒருவரான அறிவழகனுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகளே அவர் கைது செய்யப்படுவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்று தெரிய வருகின்றது.

இது ஒரு காப்ல கடாய் வெட்டு

  • கருத்துக்கள உறவுகள்

ram1b.jpg

ram2m.jpg

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.