Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ‐ லங்கா கார்டியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ‐ லங்கா கார்டியன் ‐ தமிழாக்கம் ‐ GTN

IMG6624-1251023676.jpg

(செய்தியை வெளியிட்ட குளோபல் தமிழ் நியூஸ் ஆசிரியர் ஊடகவியலாளர் நடறாஜா குருபரன். )

கே.பி பற்றிய எவ்வித ரகசியங்களையோ அல்லது விசாரணைகளின் போது அவர் சொல்லும் விடயங்கள் குறித்தோ என்னுடைய அனுமதியில்லாமல் எவராவது ஊடகங்களுக்கு தெரிவிப்பார்களாயின் அவர்களை அலுவலகத்திலிருந்து துரத்தி விடுவேன் என அண்மையில் தொலைபேசியூடாக தனது சிரேஸ்ட பாதுகாப்பு அலுவலருக்குத் தெரிவித்திருந்தார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும்பிலுள்ள ரசகியமான இடமொன்றில் வைத்து கே.பி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கே.பி. கைதிற்குப் பின்னணியில் இருந்த செயற்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் தான் இந்த கபில ஹெந்தவிதாரண. பாதுகாப்பு அதிகாரிகள் கேட்ட முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்த்த கே.பி. அவை எல்லாவற்றையும் பொட்டம்மானின் தலையில் சுமத்தி இருந்தார். ஆனால், இறுதியில் பல்வேறு விடயங்களை கே.பி.வெளிப்படுத்துவார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள்.

முன்னர் ஒரு தடவை செப்.11 2007இல் தாய்லாந்து அரசாங்கத்தால் கே.பி.கைது செய்யப்பட்ட போதும், சர்வதேச சட்ட விதிகளையும், குடிவரவு குடியகல்வு சட்டங்களையும் காட்டி அவரை நாடு கடத்த தாய்லாந்து அரச அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை வெற்றியளித்து விட்டது. கேபியிடம் விசாரணைகள் நடைபெற்று வரும் அதேவேளையில் கே.பியின் கைது குறித்து ஏராளமான கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் கே.பி.கைது குறித்து தத்தமது கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அவர்களுடைய சொந்தக் கற்பனைகளாகும்.

தமது அனுமதியின்றி கே.பி தொடர்பான எந்தச் செய்தியையும் எழுதவோ பிரசுரிக்கவோ வேண்டாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசாங்கம் அரச ஊடகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. கே.பி தொடர்பான எந்தச் செய்தியையும் பிரசுரிப்பதாயின் அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் செய்தியாக இருக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தி இருந்தது.

மலேசியாவில் வைத்து கே.பி. கைது செய்யப்பட்ட போது கே.பிக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளிவந்திருந்தன. அது மலேசியாவில் தற்போது உள்ள விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தயாமோகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பே என்று இவ்விடயங்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IMG6624-1251022777.jpg

(செய்தியை முதலாவதாக வெளியிட்ட லங்கா காடியன் இணைய உரிமையாளர் நிலந்த இலங்கமவ)

கே.பி. உண்மையிலேயே எம்.எஸ்.பி. (MSB ) எனப்படும் மலேசிய விசேட பொலிஸ் பிரிவினராலேயே (Malaysian Special Bureau) கைது செய்யப்பட்டிருந்தார். இது மலேசிய பொலிஸின் (Malaysian Royalist Police) கீழ் இயங்கும் ஒரு விசேட பிரிவாகும். ஓகஸ்ட் 5ஆம் திகதி கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியிலிருந்த ஜலான் தாங்கு அப்தல் ரகுமான் றோட்டிலிருந்த பெஸ்ற் ரியூன் ஹோட்டலில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசனின் மகனையும் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நடேசனின் உறவினர் ஒருவரையும் சந்திக்கச் சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

பெஸ்ற் ரியூன் ஹோட்டலைச் சூழ இருந்த அனைத்து வீதிகளும் கடும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. இறுதியாக வந்த தொலைபேசி அழைப்பின் 15வது நிமிடத்தில் கே.பி. கைது செய்யப்பட்டார். அவரோடு கூடவே அவரின் வாகனச்சாரதியான அப்புவும் கைது செய்யப்பட்டு அங்கிருந்து பாங்கொக் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கை இலங்கையின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஓருவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா. இவர் மலேசியாவுக்கான இலங்கையின் துணைத் தூதராக இருக்கிறார். (இவர் முன்னர் இலங்கை இராணுவத்த்pன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்தவர்.) மற்றவர் தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரண.

ஓகஸ்ட்; ஐந்தாம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் இருப்பவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா. அவர் கே.பி கைது செய்யப்பட்ட செய்தியை முதன் முதலில் சொல்கிறார். தாம் அவரை பாங்கொக்கிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

அந்த வட்டாரங்களின் தகவல்களின்படி கேபி எம்.எஸ்.பி. (MSB ) எனப்படும் மலேசிய விசேட பொலிஸ் பிரிவினருடன் தொடர்பு பட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றைப் பெறுகிறார். (இதற்கு முன்னதாக அவர் தயாமோகனிடமிருந்து கிடைத்த அழைப்பிற்குப் பதிலளித்து இருந்தார். அந்நபர் கேபியுடன் 14 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொலைபேசி அழைப்பின் 15வது நிமிடத்தில் அவர் கைது செய்யப்படுகிறார்.

உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சால் விசேட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒழங்குபடுத்தப்படுகிறது. அதனைச் செலுத்த விமானப்படை விமானிகளும் ஒழுங்குபடுத்தப்படுகிறார்கள

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

IMG6624-1251023793.jpg

(தளபதி கேணல் ராம்)

கேபியை உயிரோடு பிடிப்பதில் இரண்டு முக்கிய விடயங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. முதலாவது அவருடைய தொடர்பாடலில் உள்ள இயல்பு காரணமான பலவீனம். இரண்டாவது கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த கேர்ணல் ராம். கேபி பற்றிய ரகசியங்களை அறிவதற்கு அவர் ஒரு கருவியாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளார். அக்கரைப்பற்றில் வைத்து கேர்ணல் ராம் இலங்கைப் படையினரிடம் சரணடைந்தார். முன்னதாக அவர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் சரணடைந்த செய்தி பாதுகாப்புப் படையினரால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் வெளிநாட்டிலுள்ள ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக ஏராளமான பயனுள்ள தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் சேகரிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இதுவரை கேபிக்கு தெரியாது இலங்கை இராணுவத்திடம் தான் ராம் சரணடைந்திருக்கிறார் என்று.

களத்தில் இலங்கைப் படையினர் புலிகளைத் தோற்கடித்து விட்டார்கள் என்பது உண்மை தான். இதனால் புலிகளின் பழைய அத்தியாயம் முற்றாக முடிவடைந்து விட்டது. எனினும் புலிகளின் முழு வலையமைப்பும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டதா என்பதை இப்போதைக்குக் கூற முடியாது.

நன்றி: நிலாந்த இலங்கமுவ

சிறிலங்கா கார்டியன்

updated - 2009-08-23

மூலம் - Lanka Guardian

http://www.globaltamilnews.net/tamil_news....13596&cat=1

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் குருதியையும் சதைகளையும் என்புகளையும் விற்பதில் இன்று முன்னணியில் நிற்பவர்கள் ஊடகர்களே என்பதுதான் உண்மை.

என்ன செய்வது எட்டப்பர்கள் பிறந்த பூமியில் அல்லவா ஒரு நேர்மையான தூய்மையான எதற்கும் விலைபோகா நெஞ்சுரம் கொண்ட தலைவனும் பிறந்து ஒரு அரசை அமைத்து தமிழரைத் தலைநிமிர வைத்துத் "தமிழா" உன்னாலும் இவ்வுலகிலே அரசமைத்துத் தலைநிமிர்ந்து வாழமுடியுமென்றாரே............

தன்னைப்போல் விலைபோகா வீரர்களையே உருவாக்கிக் காட்டினார். ஆனால், ஐந்து நூற்றாண்டுகளாக அடிமைகளாகவும் சலுகைகளுக்காகவும் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட கோடரிக் கம்புகளின் படுபாதகத்தால் எம்மினத்தின் எழுச்சியானது இன்று உறைந்துபோயுள்ளது. ஆனால் இந்த உறைநிலைமாறும். மாறாது, முடியாதென்பவர்கள் உள்ளார்கள் என்பது உண்மையே. பண்டாரவன்னியனின் பின்னரும் தமிழினம் எழுச்சி கொண்டது நாம் கண்டோமல்லவா?

படத்தில் இருப்பவர் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ராம் அல்ல.

கட்டுரைகளில் சொல்லப்படுவது போல கேணல் ராம் படையினரிடம் சரணடைந்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் கேபியின் இருப்பிடத்தை அவர் அறிந்து வைத்திருந்து படையினருக்குக் காட்டிக்கொடுத்தது போன்று எழுதுவது சிறுபிள்ளைத் தனமானது.

கேபியின் கைதிற்குப் பின்னர் ஏஞ்சியிருந்த மூக்கிய உறுப்பினர்கள் கேணல் ராம் மற்றும் கேணல் சுரேஸ் ஆகியோர். கேபியின் கைது தொடர்பான செய்தியை புலிகள் சார்பில் வெளியே அறிவித்தவர் கேணல் ராம். கேணல் ராமை தமிழ் மக்களிடத்திலிருந்து ஒதுக்குவதற்கான சதி முயற்சியை இந்த கட்டுரையின் நோக்கம் அல்லது உண்மையிலேயெ படையினரிடம் அவர் சரணைந்துவிட்டரா? சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாக இருப்பது நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் இருப்பவர் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ராம் அல்ல.

நன்றி தவறை சுட்டி காட்டியதற்கு நான் முதலிலேயே அந்த படத்தை நீக்கி விட்டேன்.

Edited by ஜீவா

நன்றி தவறை சுட்டி காட்டியதற்கு நான் முதலிலேயே அந்த படத்தை நீக்கி விட்டேன். இது ராம் அல்ல.

கேணல் ரமேஸ்.

அவர் கேணல் ரமேசுமல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்றி தவறை சுட்டி காட்டியதற்கு .

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேணல் ரமேசுமல்ல

அப்ப அவர் யாரங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.