Jump to content

(ஈழத்) தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்? - 2


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

இதை யாவரும் பார்த்திருப்பீர்கள் அல்லவா?

இதில் கொலை செய்யப்பட்டவர்கள் வேறுயாருமில்லை, நானும்,நீங்களும் தான்.

என்ன ஆச்சர்யமாய் உள்ளதா?

நீங்கள் என்ன சிங்களவனா? இந்தியனா? வெள்ளையனா? கறுப்பினத்தவனா?

செத்தது தமிழன்...

கொன்னது சிங்களவன்!

நானும், நீங்களும் தமிழன் நாம் தமிழர் தானே!

தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்?

இந்த கேள்வி தமிழனான எல்லாருக்கும் பொருந்தும்...முக்கியமாக தமிழக அரசியல் தலைவர்கள் - வைகோ, சீமான், திருமாளவன் போன்றவர்களுக்கும் அரசியல் அல்லாத போற்றுதற்குரிய ஐயா நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றோருக்கும் மிகவும் பொருந்தும்.

வாழ்வியல் மற்றும் அரசியல் முதிர்சி பெற்ற உங்களிடம் இருந்து ஓயாத குரல்கள் ஒலிக்கிறதே தவிர நடைமுறையில் சாதகமான, அதாவது ஈழதமிழர்களுக்கு சாதகமான எதையும் நீங்கள் இந்த முக்கிய நேரத்தில் பெற்று தரவில்லை. மாறாக வெவ்வேறு அணியில் சிதறி கிடக்கின்றீர்கள் - சீமானிடமும் கேட்டேன் உங்களிடமும் கேட்கிறேன் எப்பொழுதுதான் ஒன்றாவீர்கள்?

தற்சமயம் முரண்பாடுகளை தவிர்த்து ஒன்றிணைந்தாலன்றி போராட்டத்தை நடத்த இயலாது....

காங்கிரசும், தி மு க வும் மண்ணை அள்ளி தமிழன் வாயில் போடுவது தவிர்க்கவும் இயலாது....

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் போறுங்கள் நண்பர்களே. இப்போதுதானே ராசதந்திரம் என்றும் இந்தியாவுடன் சேர்ந்து போராட்டத்தை தொடருவோம் என்றும்

ஜனநாயகம் என்றும் மாற்றுக் கருத்து உள்ளவர்களை இணைத்த போராட்டம் என்றும் எல்லாவற்றிலும் கடைசியாக 'இந்தியா தமிழ் ஈழத்தை எடுத்து தரும்' என்றும் ஒரு கூட்டமும் அதன் பொறுப்பாளர்களும் பொறுப்பாளர்களால் யாப்பு ஆக்க குழு என்றும

எப்பிடி போராடுறது எண்று கதைத்து கொண்டிருக்கினம். அவர்கள் ஒரு முடிவுக்கு(???) வந்த பின்னாலை இதை பார்ப்பினம்.

பார்த்தாப்பிறகு பாருங்கோவன் விளையாட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்று தமிழர் ஒன்றுபடுகின்றோமோ அன்று இக்கேள்விக்கு விடைதேடமுடியும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் இது சாத்தியமாகாது என்று தெரிந்திருந்தும் தமிழினத்தலைவனும் மகாதீரர்களும் எமக்காகப்போரிட்டாரே

அவர்களின் அர்ப்பணிப்பை எண்ணும் போது இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திற்காக இறைவனின் அவதாரமாகவே இவர்களை நான் பார்க்கின்றேன்

உங்களின் அர்ப்பணிப்பு ஒருபோதும் வீண்போகாது.

அப்பேற்பட்ட பெரிய நாடான இந்தியாவிடமிருந்தே நாட்டைக்கட்டி எழுப்ப நுாறு பேர்களைத்தான் விவேகானந்தர் கேட்டார்.

ஆனால் அது அன்றைய காலம், இன்று தமிழ் இளைஞர்கள் சேர்ந்து கைகோர்த்து நின்று செயற்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம், இல்லை பெறுவோம்.

அதற்குரிய ஆதாரங்களும் எம்மிடம் வந்து சேரத்தொடங்கிவிட்டன.

தோழர்களே, தோழர்களே கொஞ்சம் பாரம் துாக்குங்கள்

நீங்கள் வாழும் தமிழீழம் வாழ உங்களையும் தமிழராக்குங்கள்

Link to comment
Share on other sites

என்று தமிழர் ஒன்றுபடுகின்றோமோ அன்று இக்கேள்விக்கு விடைதேடமுடியும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் இது சாத்தியமாகாது என்று தெரிந்திருந்தும் தமிழினத்தலைவனும் மகாதீரர்களும் எமக்காகப்போரிட்டாரே

அவர்களின் அர்ப்பணிப்பை எண்ணும் போது இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திற்காக இறைவனின் அவதாரமாகவே இவர்களை நான் பார்க்கின்றேன்

உங்களின் அர்ப்பணிப்பு ஒருபோதும் வீண்போகாது.

அப்பேற்பட்ட பெரிய நாடான இந்தியாவிடமிருந்தே நாட்டைக்கட்டி எழுப்ப நுாறு பேர்களைத்தான் விவேகானந்தர் கேட்டார்.

ஆனால் அது அன்றைய காலம், இன்று தமிழ் இளைஞர்கள் சேர்ந்து கைகோர்த்து நின்று செயற்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம், இல்லை பெறுவோம்.

அதற்குரிய ஆதாரங்களும் எம்மிடம் வந்து சேரத்தொடங்கிவிட்டன.

தோழர்களே, தோழர்களே கொஞ்சம் பாரம் துாக்குங்கள்

நீங்கள் வாழும் தமிழீழம் வாழ உங்களையும் தமிழராக்குங்கள்

தமிழீழ இளைஞர்களே இயன்றவரை தூசானமாக கதைப்பதை விட்டு விட்டு, தோள் கொடுங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.