Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….

ampe-1.jpg

அம்மா….அம்மா…அம்மா….எனக்கு அம்மாட்:டைப் போகவேணும்….. அவள் கதறக்கதற கொடிய கரங்கள் அவளை இழுத்துக் கொண்டு போகின்றன……என்ர பிள்ளை….என்ரை பிள்ளையை விடுங்கோ……என்ற அவளது கதறலையும் கேட்காமல் கார்த்தினி இழுபட்டுக் கொண்டு போனாள்….அவள் நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும் உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிற அவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்து நொருங்குகிறது.

கமலினி…கமலினி….என்ன….பக்கத்த

ில் படுத்திருந்த கணவனின் குரல் அவளை மீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவான அணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை…..

என்ர பிள்ளையப்பா…..என்ரை பிள்ளையை யாரோ…..அதற்கப்பால் அவளால் எந்த வார்த்தைகளையும் உச்சரிக்க முடியாமல் விம்மல் பெலத்து……என்ர பிள்ளை…..என்ர பிள்ளை…..எனப் பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என்னாலை தாங்கேலாதாமப்பா…..நான் செத்துப்போப்போறன்……என்ரை பிள்ளையெங்கை கஸ்ரப்படுறாளோ தெரியேல்ல…..என்ரை பிள்ளை படிக்கவெண்டெல்லோ விட்டனான்…..என்ரை பிள்ளையை எங்கையிருக்கிறாளோ……சேவை சேவையெண்டு ஊருக்கு எவ்வளவைச் செய்தன்…..எனக்கேனப்பா இப்பிடியொரு விதியைக் கடவுள் தந்தான்……?

நீ செய்த நன்மையள் எங்கடை பிள்ளையைக் காப்பாற்றும்…..நீ யோசிக்காத…..அவள் எப்பிடியும் வருவாள்…..சிவன் கோவில் சாத்திரி சொன்னமாதிரி 6மாதத்தில திரும்பி வருவாள் பாரன்…..அவளை ஆறுதற்படுத்தத் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் சொன்னான். அவள் தானாக அழுகையை நிறுத்தும் வரை அவன் அமைதியாய் இருந்தான்.

அவள் சொல்வது போல செத்துப் போய்விடலாமா ? என்றுதானிருந்தது. அப்பா அப்பா எனக் கார்த்தினி உலவிய வீடும் விறாந்தையும் வளவும் இன்று அவளின்றி ஒரு சுடுகாட்டின் வாசனைகளைத் தன்னோடு சேமித்துக் கொண்டிருந்தது. அவள் இருப்பாள் என்ற நம்பிக்கையை அவன் தொலைத்துவிட்டான். கமலினிக்காக சாத்திரங்களையும் கோவில்களையும் சாட்டுக்கு வைத்திருப்பதைத் தவிர வேறெந்த நம்பிக்கையும் அவனுக்கில்லை.

கமலினியின் பெரியக்கா நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் முல்லைத்தீவுக்கு கார்த்தினியையும் கூடவே அழைத்துப் போனபோது, தன்னுடன் அவளை வைத்துக் கொள்வதாக பெரியக்கா கேட்டதும் மறுவார்த்தையின்றிக் கார்த்தினி சொன்னாள். நான் பெரியம்மாவோடை நிக்கிறன் நீங்க வவுனியாவுக்குப் போங்கோ….என இவர்கள் வவுனியா திரும்ப அவள் அங்கேயே தங்கினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வர இவனுக்கு முடியாது என்பதை யாருக்கும் சொல்லவில்லை.

இடையிடை இவர்கள் போய்ப் பார்த்து வந்தார்கள். கமலினி பணியாற்றிய தொண்டு நிறுவனத்தின் அலுவலாக அல்லது ஏதாவதொரு தேவைக்காக இராணுவத் தடையரண்கள் தாண்டி முல்லைத்தீவு போய்வர ஏதாவது அலுவல் இருந்து கொண்டுதானிருந்தது. அக்காவுடன் அவள் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கை மலையளவு அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைகளோடு இருந்தவளுக்கு ஏ9நெடுஞ்சாலை தொடர்புகளற்று முல்லைத்தீவுடனான அவளது தொடர்புகளும் அற்றுப்போய்…..போர் உக்கிரமாகியது. எப்போதாவது பெரியக்கா வந்து அவள்பற்றி சொல்லும் தகவல்களுடன் மாதங்கள் விரைந்த 2009தை மாதத்தில் ஒரு நாள்…..

பெரியக்கா அவளது வேலையிடத்துக்கு அவசரமாக அழைத்தாள். ஐயோ பிள்ளை என்னைக்குறை சொல்லாதை நானொண்டும் செய்யேலாமக்கிடக்கு….நான் தேடாத இடமில்லை…..இஞ்சை கனபிள்ளையள் இப்பிடித்தான்……வீட்டுக்கொ

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கதை நிஜமாய் நடந்ததாய் இருக்கலாம் . உயிரோட்டமாய் இருக்கிறது.நீங்கள் சொன்ன திருத்தங்களை செய்தால் ,

மேலும் சிறப்பாய் இருக்கும். பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை எத்தனை சோகங்கள்............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் படிச்சு 24 மணிநேரமாச்சு. இன்னும் மனசு வலிக்குது. சாந்திஅக்கா உங்களின் கதை சொல்லும் முறை மிகநல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நிஜமாய் நடந்ததாய் இருக்கலாம் . உயிரோட்டமாய் இருக்கிறது.நீங்கள் சொன்ன திருத்தங்களை செய்தால் ,

மேலும் சிறப்பாய் இருக்கும். பதிவுக்கு நன்றி.

பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

இப்படி எத்தனை எத்தனை சோகங்கள்............................

சோகங்கள் கமலினியக்கா போல் எங்கள் எல்லாரையும் துரத்திக்கொண்டு வருகிறது.

இதைப் படிச்சு 24 மணிநேரமாச்சு. இன்னும் மனசு வலிக்குது. சாந்திஅக்கா உங்களின் கதை சொல்லும் முறை மிகநல்லது.

four four bravo பகிர்வுக்கு நன்றிகள். தினமும் தனது மகளின் நினைவுகளோடு அந்தரிக்கும் கமலினியக்காவுக்காக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.