Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம்: பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு ஆபத்தாக மாறுகிறது

Featured Replies

இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளைக் கையாண்டவிதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது பதவிக் காலத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

இலங்கையின் மனிதாபிமான அவலத்தை சிறப்பான முறையில் பான் கீ மூன் கையாளவில்லை என்ற கருத்து பல நாடுகள் மத்தியில் குறிப்பாக மேற்குலக நாடுகள் மத்தியில் நிலவுகின்றது.

இந்நிலையில் அவரது இரண்டாவது பதவிக் காலத்திற்கான வாய்ப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகள் மத்தியில் பலத்த கேள்வி எழுந்துள்ளது என 'வாசிங்ரன் போஸ்ட்' நாளேடு தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:

போர் நடந்து கொண்டிருந்தபோது பொதுமக்களின் உயிரிழப்புக்களைக் குறைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கும் பொறுப்பு குறித்து அறிவுறுத்தி அவரை அதற்கு இணங்க வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.

பான் கீ மூன் மற்றும் அவரது முதன்நிலை ஆலோசகர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இத்தகைய ஒரு உறவு நிலை பேணப்பட்டு வந்தபோதும், அவர்களுக்கு எதிராக அரசு விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவில்லை.

போரில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என சிறிலங்காவால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அதிகாரிகள் தமது நம்பகத்தன்மையைக் காப்பாற்றவில்லை என்று சிறிலங்கா குற்றம் சாட்டியுள்ளதாக இந்தக் கலந்துரையாடல்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறுதியில் பான் கீ மூனின் தலையீட்டினால் சண்டையின் இடையே வார இறுதி நாட்களில் ஒரு இடை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், 7 ஆயிரத்து 800 பேர் தொடக்கம் 20 ஆயிரம் பேர் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அதனால் சிறிய தாக்கத்தையே செலுத்த முடிந்தது.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது மற்றும் மக்களிடம் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்பன தொடர்பிலான வாக்குறுதிகளை சிறிலங்கா அரச தலைவர்களிடம் இருந்து பெறுவதில்தான் வெற்றி பெற்றதாக பான் கீ மூன் கூறுகிறார்.

ஆனால், இந்தப் பிரச்சினையை அவர் கையாண்ட விதம் அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் சாத்தியங்களை கேள்விக்குள்ளாக்குவதாக சில இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

பான் கீ மூன் ஒரு முதுகு எலும்பில்லாத கவர்ச்சி இல்லாத தலைவர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் காத்திரமான குரலையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துவதற்குத் தவறிவிட்டார் எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நோர்வேத் தூதுவர் மேனா யூல் எழுதியுள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கான இரகசிய அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதுவர் டெர்ஜே ரோட் - லார்சன் என்பவரின் கணவர்தான் மேனா யூல். சிறிலங்கா மற்றும் மியான்மர் (பர்மா) விவகாரங்களை பான் கீ மூன் கையாண்ட விதத்தை அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விடயம் நோர்வே ஊடகம் ஒன்றிலேயே முதலில் வெளியாகி இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தபோதும் லட்சக்கணக்கானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியபோதும் செய்வதற்கு அதிகாரம் ஏதுமற்ற வெறும் பார்வையாளராக பான் கீ மூன் அமர்ந்திருந்தார் என மேனா யூல் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

செயலாளர் நாயகத்தின் காத்திரமான குரலும் அதிகாரமும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

விமர்சனங்களால் பான் கீ மூன் நன்றாகக் குட்டுப்பட்டுள்ளார். தனது நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முயன்று வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆசியாவின் இராஜதந்திர அணுகுமுறையை மேற்குலகம் தவறாகப் புரிந்துகொள்வதனாலேயே இந்த விமர்சனங்கள் எழுவதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தலைவரதும் தலைமைத்துவப் பாணி, பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை நாம் மதிக்க வேண்டிய தேவை உள்ளது என நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒஸ்லோவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய பான் கீ மூன் கூறினார். நான் எனக்கான தனித்துவ ஆளுமையைக் கொண்டிருக்கிறேன். என்னிடம் தனிப்பட்ட தலைமைத்துவம் இருக்கிறது என்றார் அவர்.

சிறிலங்கா விவகாரத்தில் பான் கீ மூனிடம் இருந்தும் அவரது ஆலோசகர்களிடம் இருந்தும் நியாயமான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டன. வன்முறைகள் குறித்து பகிரங்க அறிவிப்புக்களை விடுப்பதைத் தவிர்த்துக்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவதற்கான அழுத்தத்தை அரச தலைவர் ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பான் கீ மூன் விடுத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

சிறிலங்கா மீது பான் கீ மூன் போதியளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போர் முடிவடைந்த சில நாட்களின் பின்னர் அரச தலைவர் ராஜபக்சவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார்.

தமிழர்களுடன் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் விடுவிப்பதற்கும் அந்த உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை சிறிலங்காவுக்கு கொடுப்பதைக்கூட பான் கீ மூன் தவிர்த்தார்.

இறுதியாக நடைபெற்ற வலிந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததற்கு தனது படையினர் பொறுப்பாளிகளா இல்லையா என்பதை சிறிலங்காவே தீர்மானித்துக் கொள்ளட்டும் என அவர் விட்டுவிட்டார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அதிகாரிகள் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சிறிலங்கா இராஜதந்திரிகள், பான் கீ மூனுடனான உடன்படிக்கையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

அதேநேரத்தில் சிறிலங்கா விடயத்தை பான் கீ மூன் கையாண்ட விதம் குறித்து கருத்துத் தெரிவித்த வேறு சில இராஜதந்திரிகள், அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய எந்தவொரு நாட்டின் தலைவர்களையும்விட காத்திரமான முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சிறிலங்கா விடயத்தில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அவர் (பான் கீ மூன்) குறிப்பிட்டு வெளியே கொண்டுவந்தார். அந்த நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது போதுமானதல்ல. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் பல லட்சம் பேர் முகாம்களுக்கு அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூன் ஒரு முதுகு எலும்பில்லாத கவர்ச்சி இல்லாத தலைவர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் காத்திரமான குரலையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துவதற்குத் தவறிவிட்டார் எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நோர்வேத் தூதுவர் மேனா யூல் எழுதியுள்ளார்.

சரியான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதற்கு நாம் எதுவும் செய்துவிட்டதாக கூறமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

எனினும், பான் கீ மூனின் தலையீடு இந்த விடயத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய மிக மோசமான நிலையை கொஞ்சம் குறைத்தது என்றுதான் நான் கருதுகின்றேன் என்றார் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் சவார்ஸ்.

இதைவிட மோசமான நிலமையா?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.