Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சிவப்புக் கட்சிக்கு வாக்களிக்க ஈழத்தமிழர்கள் தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருள்நிலா, நோர்வே 11/09/2009, 12:27

நோர்வேயில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சிவப்புக் கட்சிக்கு வாக்களிக்க ஈழத்தமிழர்கள் தீர்மானம்!

நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தற்பொழுது நோர்வேயில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிவப்புக் கட்சிக்கு மட்டுமே தமது வாக்குகளை வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வருடம் இறுதிப் பகுதியில் இருந்து இந்த ஆண்டு 17-05-2009 வரை தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பட்டினிச்சாவை எதிர்நோக்கினர், மருந்துகள் இன்றி இறந்தனர்.

இச் சூழ்நிலையில் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் படியும் உணவு மருந்துப் பொருட்களை அனுப்பி மக்களை காப்பாற்றும் படியும் நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை நாடாத்தினர்.

நோர்வேயின் ஆளும்கட்சியிடம் மன்றாடி தமது உறவுகளை காப்பாற்றும்படி வேண்டினர். ஆனாலும் நோர்Nவின் ஆளும் அரசாங்கம் அந்த மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்து படுகொலைகளை தடுத்து நிறுத்தவோ உணவு மருந்துப் பொருட்களை அனுப்பவோ எந்த நடவடிக்கையையும் எடுக்காது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட துணை நின்றது.

மாறாக இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தை உற்சாகப்படுத்தும் வகையில் பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையும் நோர்வே தரப்பினர் முன்வைத்தனர்.

ஆனால் இன்று அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மூன்று இலட்சம் மக்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ள இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக நோர்வேயின் ஆளும் கட்சியினர் மௌனமாக இருந்து வருகின்றனர்.

அதே வேளை சிவப்புக்கட்சியினர் தமிழ் மக்களின் போராட்டங்களில் பங்குபற்றி போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கியதுடன் யுத்தம் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்படல் வேண்டும்

என்றும் குரல் கொடுத்தனர். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என நோர்வே அரசுக்கு அழுத்தங்களை கொடுத்தது.

சிவப்புக்கடசியினர் தமது கட்சியின் கொள்கையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்றும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள ஒரே கட்சியாகிய சிவப்புக் கட்சிக்கு எதிர்வரும் 14-09-2009 அன்று நோர்வேயில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிவப்புக்கட்சிக்கு வாக்களிபதென நோர்வே வாழ் தமிழ் மக்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலதிக விபரங்களைப் பார்வையிட இணைப்பை அழுத்துங்கள்:

http://www.sosialisme.no/mimir/valg09/tamil.pdf

http://roedt.no/stem-rødt/materiell/

பதிவு

இன்றைய நோர்வே அரசு தமிழர் அவலத்தை கணக்கெடுக்காமல் தங்கள் நலம் சார்ந்து தான் ஈழதமிழர் பிரச்சனையை கையாண்டன, அதிலும் ஆட்சியில் அங்கம் வகித்துள்ள சாமாதானதூதுவர் ஏரிக் சார்ந்த கட்சி சந்தர்ப்பவாத கட்சியாக மாறி விட்டது.

என்னை பொறுத்தவரை தேர்தலில் பங்கு பெற்றாமல் எங்கள் அதிருப்தியை வெளிக்காட்டுதல் நல்லது.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவு கொடுத்து (ஆதரிக்கப்படும் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பின்) தமிழர்கள் மேற்கு நாட்டு அரசியலில் புக வேண்டும். அதன் மூலம் தான் எமக்கான குரலை கொடுக்க ஒரே ஒரு வழி.

தமிழர்களை ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவு கொடுத்து (ஆதரிக்கப்படும் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பின்) தமிழர்கள் மேற்கு நாட்டு அரசியலில் புக வேண்டும். அதன் மூலம் தான் எமக்கான குரலை கொடுக்க ஒரே ஒரு வழி.

யார்தான் தமிழர்களை ஆதரிக்க வில்லை . எல்லாரும் தங்கள் தேவைக்கே பாவிக்கிறார்கள். நோர்வேயில் இன்று இருக்கும் அரச கட்சியில் தான் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் என்ன செய்தார்கள். முள்ளிவாய்க்காலில் அழுத போது தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் ,கண்டணம் செய்த போது. நாய் கள் ,குதிரைகள் கொண்ட பொலிஸாரை விட்டு விரட்டி வெளியேற்றினார்கள்.

யாராவது வந்து கேட்டார்களா?

சரி இவ்வளவு அழிவும் வந்தது. நீதி விசாரனை தேவை என்று கூட சாமானத்தேவதை நோர்வே வாய் திறக்க இல்லை.

இவர்கள் தங்கள் நாட்டை வளமாக்கவும்,சொல்வழி கேட்கும் வேலைக்காரராக இங்கே இருந்தால் மட்டும் போதும் என்று நினக்கிறர்கள்.

நான் அறிந்த வரையில் இம்முறை கட்சிகள் தேர்தல் பரப்புரை வேலைகளை எம்மக்கள் மத்தியில் செய்யவே முன்வரவில்லை. அவர்களுக்கே தெரியும் இவர்கள் வலியுடன் இருகிறார்கள். முகம் கொடுத்து அவர்களிடம் வாக்கு கேட்க போகமுடியாது.

பல பேர் தேர்தலை பற்றி கதைத்தாலே கோபப்பட்டுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.