Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காக கொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம்

Featured Replies

http://inioru.com/?p=4755

இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.

இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதும் தமிழ் மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமையும் உண்மையே. ஆனால் அத்துடன் யுத்தம் போராட்டம் என்பனவற்றோடு சம்மந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் விரிவு பெற்றுச் செல்வதற்கு அடிப்படையாக அமைந்த இன முரண்பாட்டு விரிசலும் பேரினவாத ஒடுக்கு முறையும் தொடரவே செய்கிறது. அதாவது இரத்தம் சிந்தும் யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறதே தவிர இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் தொடரவே செய்கிறது. அவ்வாறே பொருளாதார நெருக்கடிகளும் அவற்றின் பாரிய சுமைகளும் அனைத்து மக்கள் மீதும் பாரிய சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளன.

இனியொரு : அவ்வாறாயின் “மகிந்த சிந்தனை” அரசாங்கம், நீங்கள் கூறும் அரசியல் யுத்தத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்று கருதுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் அவர்களது பாரம்பரிய பிரதேசங்கள் மீதும் ஆயுத அடக்கு முறையைப் பேணிவருவதானது அரசியல் யுத்தத்தின் ஒரு பிரதான பகுதியாகும். அதே போன்று வடக்கில் மூன்று லட்சம் மக்களை முட்கம்பி முகாம்களில் அடைத்து வைத்து தண்டனைக் கைதிகளை விட மோசமாக நடாத்தி வருவதும் அரசியல் யுத்த அடிப்படையிலேயேயாகும். அத்துடன் இன்றுவரை அதிகாரப் பகிர்விற்கான எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்காமலே காலத்தைக் கடத்திச் செல்வதும் அரசியல் யுத்தமாகவே உள்ளது. “கிழக்கின் உதயம்” “வடக்கின் வசந்தம்” என்பன அரசியல் தீர்வை மறுக்கும் வெறும் கண்துடைப்புக்கள் மட்டுமேயாகும்.

இனியொரு : போருக்குப் பின்பான தென்னிலங்கைச் சூழல் எவ்வாறு காணப்படுகிறது? சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் மனநிலை எத்தகையதாக உள்ளது?

தோழர் செந்திவேல் : போரின் வெற்றியும் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டமையையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பொதுவான வரவேற்பைப் பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாகும். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழர்கள் நாட்டைப் பிரித்து தனித் தமிழ் ஈழத்தை அமைக்க முற்பட்டுள்ளனர் என்ற அச்சம் முன்பிருந்தே இருந்து வந்துள்ளமை. இரண்டாவது, புலிகள் இயக்கம் சிங்களக்குடி மக்கள் மீதும் அவர்களது பிரதேசங்களிலும் தொடுத்து வந்த ஆயுதத் தாக்குதல்கள். இவற்றின் காரணமாக மகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தையும் அவர்கள் கூறி நின்ற பயங்கரவாத ஒழிப்பு என்பதையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ளவே செய்தனர். அதேவேளை தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு நியாயமானதாக வழங்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதியினர் விரும்புகின்றனர் என்பதும் நிராகரிக்கக் கூடியதொன்றல்ல. இருப்பினும் போரின் வெற்றி ஊடாக தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தி தொடர்ந்தும் பதவிகளில் இருந்து வருவதைக் குறிக்கோளாகக் கொண்டே ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் செயல்பட்டு வருகின்ற பிரதான போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. போரின் வெற்றி கொடுத்துள்ள மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதாகவே உள்ளது. இப்போரின் மூலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசு யந்திரத்தின் கோரக்கரங்கள் சிங்கள மக்கள் மீது தமது வலிமையைக்காட்டி அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும் போதே அவற்றின் தாக்கத்தையும் வெற்றிக் கொண்டாட்டங்களின் எதிர் விளைவுகளையும் மக்கள் காண்பர்.

இனியொரு : தென்னிலங்கைச் சூழல் அவ்வாறெனில் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்து வருகின்றது என்பதைக் கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : பொதுவாகவே தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தின் தோல்வியானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்ட பிரிவினர் புலிகள் இயக்கத்தின் மீதான அனுதாபமாகவும் கடுமையான விமர்சனமாகவும் மக்கள் பார்க்கின்றனர். அதே வேளை தங்களை இவ்வாறு ஒரு மோசமான அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டார்களே என்ற வெறுப்பும் ஆத்திரமும் இருக்கவே செய்கிறது. வவுனியா மெனிக் தடை முகாமிலிருந்து அறுபது வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்காக வெளியே வந்த ஒரு முதியவரைச் சந்தித்தபோது மேற்கூறிய போக்கின் அம்சங்களை அவர் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர் ஒரு முது மொழியையும் கூறிவைத்தார். பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து விட்டோம். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கின் தமிழ்த் தேசிய இனம் முழுவதற்கும் பொருந்தக் கூடிய ஒரு எதிர்மறைக் கூற்றாகவே கொள்ளமுடியும்.

இனியொரு : இந்நிலைக்கு யார் யார் காரண கர்த்தாக்கள் என நீங்கள், எவ்வாறு மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் ஊடாகக் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இது தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளாக மட்டும் பார்க்கக் கூடாது. அது நமது நாட்டின் சமூக அமைப்பினதும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆனால் இதில் தனிநபர்களாகவும் ஆளும் தரப்பு தலைமையாளர்களாகவும் இருந்து வந்தவர்களின் பங்கினையும் பாத்திரத்தையும் நிராகரித்து விடமுடியாது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இன்றைய பேரினவாத நச்சு விருட்சத்திற்கான விதைகள் நாட்டப்பட்டு தகுந்த வழிகளில் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வளர்க்கப்பட்டது. அதற்குரிய சூழலையும் நல்ல பசளையும் வழங்கியவர்கள் கொலனித்துவ ஏகாதிபத்திய வாதிகள் அதனை வளர்த்து ஆளும் வர்க்கப் பலாபலன்களைப் பெற்று வந்தவர்கள் நிலவுடைமை வழிவந்த சிங்கள பௌத்த மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர். மறுதரப்பில் தமிழர் மேட்டுக்குடியினர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.