Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் விரோத ஊடகங்களும் பார்ப்பன எதிர்ப்பு கண்ணோட்டமும்

Featured Replies

கானகன்

‘என்ன செய்யலாம் ஊடகங்களை?’ என்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கொதித்துக்கொண்டிருக்கிறா

ம்ம் இப்போதைக்க்கு இதூ தேறாது.

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: சரியாத் தான் இருக்கும் கா.சு சொன்னா! தமிழ் நாட்டில இருக்கிற அரசியல் பன்னாடையளும் இந்தியாவில இருக்கிற மத/சாதிவாத சாக்கடையளும் பிரமிக்கத் தக்க நேர்மையோட நடந்து கொண்டிருக்கேக்க புலி ஆதரவாளர்கள் புலி எதிர்ப்பு ஊடகங்கள எதிர்க்கிறது நேர்மையின்மை தான். நாங்கள் யோசிக்க வேணும் ஒரு ரூபா அரிசிக்கும் கேபிள் டிவிக்கும் எப்பிடி எங்கட தலைய மிளகாய் அரைக்க நிரந்தரக் குத்தகைக்கு விடுறது எண்டு.இதுவல்லோ கா.சு தூக்கிப் பிடிக்கும் அரசியல் நேர்மை! :unsure:

டேய் மொக்கனுகளே இந்த கட்டுரை வெளிவந்தது காலச்சுவடு எனும் நாகர்கோயிலை சேர்ந்த ஒரு பார்பான் பத்திரிகை,இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயம் இதில் தினமலர்,ஹிந்து பற்றி அதிகம் தாக்கி எழுதவில்லை டைம்ஸ் ஒf இண்டியாவுடன் ஒப்பிடும்போது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமற்ற, ஆபத்தான ஊடகப் போக்கு

ஆகஸ்டு 2009 இதழில் வெளிவந்த ‘வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு’ கட்டுரைக்கான எதிர்வினை:

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழத்தமிழினத்தின் உரிமைப் போராட்டமும் அவர்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்குகளை இக்காட்சிப் பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும். உண்மையிலேயே கடந்தகால நிலைப்பாடுகள், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள், அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்துவிடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்த காலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது. இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான, தெளிவான மறுவாசிப்பை எமக்குத் தரும். ஈழத் தமிழ்ச் சூழலுக்கு அப்பால் மேற்படி கருத்தியல் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருக்காதென்பதும் எமக்குத் தெரியும்.

இந்த அடிப்படையிலேயே பொறுப்பான ஊடகங்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் ஈழத் தமிழ்ச் சூழலில் பலர் ஒரு ‘மௌனத்தை’க் கடைபிடிக்கிறார்கள். இந்த ‘மௌனம்’ எமக்குத் தேவையானதாகவிருக்கிறது. இதற்காக எடுக்கப்படும் மாற்று அரசியல் நடவடிக்கைகளை நாம் புறக்கணிக்கவுமில்லை விமர்சிக்கவுமில்லை. இந்த ‘உடனடி’ நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக் கூடாது என்பதே நமது கவலை.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ‘வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு’ கட்டுரையை நாம் பார்க்கிறோம். வரிக்கு வரி அந்தக் கட்டுரைக்கு எதிராக எம்மால் எதிர்வினையாற்ற முடியும். ஏனெனில் அதற்குரிய எல்லா சாத்தியங்களையும் அக்கட்டுரை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிகளுக்கு எல்லோரும் போட்டுப் பார்த்துக் களைத்துப்போன பாசிச முக மூடியை மிகச் கச்சிதமாகப் பொருந்தும்படி மிகக் கவனமாகத் திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை இது. அனுபவம் என்ற போர்வையில் ஆழ்மனக் குரோதமும் தனிமனித வெறுப்பும் ஓர் இனத்திற்காக 30 வருடங்களுக்கு மேலாகப் போராடிய அமைப்பொன்றின் மீதான வசைபாடல்களாகவும் அவதூறுகளாகவும் வெளித் தள்ளப்பட்டிருப்பது மிகச் சுலபமாகவே இனங்காணக் கூடியதாகவிருக்கிறது. இது அவரது கருத்து. அந்தக் கருத்தைச் சொல்லும் உரிமையை நாம் அவருக்கு வழங்கத் தான் வேண்டும். பிரச்சினை அதுவல்ல.

ஆனால் அவரது கருத்துக்குக் ‘காலச்சுவடு’ கொடுத்திருக்கும் நம்பகத்தன்மை ஆபத்தானது. பாதுகாப்பைக் காரணம் காட்டி எழுதியவரின் பெயரை வெளியிடாது ஊடக அறத்தை ‘மீற’ முற்படும் ‘காலச்சுவடு’ தனது ‘மீறல்’ அந்தக் கட்டுரையை ஒரு ஒற்றை வாசிப்பினூடாகவே வாசகன் கடந்து செல்ல வேண்டியிருக்கும் அபத்தத்தை உணராதது அதிர்ச்சியளிக்கிறது. இதையே நாம் ஆபத்து என்கிறோம்.

இங்கு பன்மைத்தன்மை அடிபடுகிறது. திறந்த வாசிப்புக்கும் பலகுரல் தன்மைக்கும் இடம் தராத ‘பிரதி’களைச் சாடும் பின்நவீனத்துவ யுகத்தில் ஓர் இனத்தின் வரலாற்றை ஒற்றையாக அணுகச் சொல்லும் பாரம்பரியத்தை என்னவென்று சொல்வது?

இத்தகைய ஊடகப் போக்குகள் ஆரோக்கியமற்றவை, ஆபத்தானவை. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கட்டுரையாளர் தனது அடையாளத்தை மறைப்பது பாதுகாப்பு என்பதற்கும் அப்பால் தனது கருத்திற்கான ஒரு கவசம் என்பதைக் ‘காலச்சுவடு’ கவனிக்காதது வருந்தத்தக்கது. இது கட்டுரையாளரின் ஒருவகையான கீழறுப்பு நடவடிக்கை. ஒருவகையான ஊடகப் பாசிசமும்கூட.

கட்டுரையாளரின் வன்னிப் போர் அனுபவங்களும் அகதி வாழ்வும் மட்டும் அவரது ‘அனுபவங்களை’ உண்மையாக்காது என்பதைக் ‘காலச்சுவடு’ புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அதே வன்னி நிலப்பரப்பில் போருக்கு முகம் கொடுத்து இன்று முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருக்கும் எமது மக்களிடமிருந்து அவரது ‘அனுபவங்களுக்கு’ நேர் எதிரான அனுபவங்களை நாள்தோறும் நாம் செவிமடுத்துக்கொண்டிருக்கிற

  • தொடங்கியவர்

... "தோடிடைய செவியன், விடை ஏறியோர் .." தொடங்கி ".. இராவணம் மேலது நீறு, .." ஈறாக வந்த திருஞானசம்பந்தர் முதல் சங்கம் வளர்த்த நாயன்மார்களில் பெரும்பாலானோர் பிராமணர்களே!! ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.