Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது

Featured Replies

காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது

20 October 09 02:31 am (BST)

இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனாவோடு இந்தியாவின் முரண்கள் அதிகரித்துச் செல்கிறது. சென்ற மாதம் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்கியது சீனத் தூதரகம். இந்நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சீன அரச் தயாரித்திருக்கும் பயணக் கையேட்டில் காஷ்மீரை இறையாண்மையில்லாத தனி நாடு என்று சித்தரித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள வரைபடத்திலும் காஷ்மீர் இந்தியாவோடு இல்லையாம். சீனாவின் இச்செயல் புது டில்லியில் அரசியல் சூட்டைக் கிளப்பி விட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர் இருதரப்பிலும் வெளியிடப்பட்ட கருத்துகள் சிறிது வெப்பத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

இருப்பினும் இரு நாடுகளிடையிலான உறவு மிகவும் வலுவாகவும் உள்ளது என்றார்.அருணாசலப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங் சென்றதற்குஇ சீனா ஆட்சேபம் தெரிவித்து கருத்து வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இருதரப்பிலும் பரஸ்பரம் உருவாகியுள்ள சூழலைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாடுகளிடையே மோதல் உருவாக வலுவான காரணமில்லை. ஆசிய பிராந்தியத்தில் வலுவாக உள்ள இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னை எரிச்சலூட்டும் விவகாரமாக ஆகிவிடக்கூடாது. இதை இரு நாடுகளும் பரந்துபட்ட மனதுடன் அணுகவேண்டும்.இரு நாடுகளிடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் வலுவாக உள்ளன. மேலும் உற்பத்திப் பொருள் தயாரிப்பில் சீனா முதலிடத்திலுள்ளது. இந்திய மாணவர்கள் 7,000 பேர் சீனாவில் பயில்கின்றனர். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸில் பல சீனர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் இந்தியா, சீனாவுக்கு இடமுண்டு. இரு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. அத்துடன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.உற்பத்திப் பொருள்கள் விஷயத்தில் பார்த்தால்இ தினசரி வர்த்தகம் மிக அதிகமாக உள்ளது. இந்திய நிறுவனங்கள் பல ஷாங்காயில் கிளைகளைத் தொடங்கியுள்ளன என்று சசி தரூர் குறிப்பிட்டார்.

திபெத் மதத் தலைவர் தலாய் லாமா நவம்பர் மாதம் அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையும் சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.இந்திய‐சீன எல்லைப் பகுதியில் சமீபத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாக இந்திய ஊடகங்கள்தான் காரணம் என சீன நாளேடுகள் குற்றம் சாட்டின. இதுகுறித்து கருத்து கூறிய சசி தரூர் இத்தகைய செய்தி வெளியான அன்றுதான்இ ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லியு ஜென்மினை சந்தித்துப் பேசியதாக தரூர் குறிப்பிட்டார்.இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாசலப் பிரதேசம்இ இங்கு செல்வதற்கு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுகுறித்து வேறெந்த நாடும் கருத்து கூறக் கூடாது என்றார் தரூர்.

நிரந்தர இடம்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் மாறுதல் கொண்டு வரவேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துகிறது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் அலி திரெய்கியிடமும் இது வலியுறுத்தப்பட்டதாக தரூர் கூறினார்.ஈரான்‐பாகிஸ்தான்‐இந்தியா எரிவாயு குழாய்ப்பாதை: பாதுகாப்புக் காரணங்களால் இப்பணி தடைபட்டுள்ளது. இருப்பினும் இத்திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடைப்பிடிக்கும். பல்லாயிரம் கோடி முதலீட்டிலான இத்திட்டப் பணியை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழல் தற்போது நிலவவில்லை என்று தரூர் குறிப்பிட்டார்.

ஈரானிலிருந்து 2,775 கி.மீ. தூரத்துக்கு பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய்ப்பாதை அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு செயல்பாடுகளால் தடைப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16161&cat=2

இந்தியா இந்துசமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டைநாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். அயல்நாடுகளின் கைப்பற்றிய பரதேசங்கள் (அருணாச்சலபிரதேசம்) அந்தந்த நாடுகளுடன் ஒப்படைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் காஷ்மீருக்கு சுதந்திரம் குடுத்திட்டு அப்பிடியே அருனாச்சலப் பிரதேசத்தை சீனாவிட்டையும் குடுத்திட்டால் வழக்கம்போல ஈழத்தில வல்லரசா நடிக்கலாம் அல்லோ?

சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது

சீனாவுக்கு பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது

மேலும் பல நாடுகள் அங்கீகரிக்கும் தமது சுயநலத்துக்காக :lol::wub:

அப்படியே எங்கன்ட நாட்டையும் அங்கிகரிக்க சொல்லி தந்தி அடியுங்கோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.