Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமா மாமியுடன்......!

Featured Replies

திருமணத்தின் பின்பு மாமியார்-மாமனார்-மருமகள்-மருமகன் இடையில் வரும் பிரச்சனைகள் இல்லாத வீடே குறைவு எனலாம். இப்படியான பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்று உங்கள் அபிப்பிராயங்களை அறியத்தருவதோடு, நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவி உங்கள் அம்மா அப்பாவுடன் எப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும், பெண்ணாக இருந்தால், கணவர் எவ்வாறு உங்கள் அம்மா அப்பாவை நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை எழுதலாம். நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக உங்கள் மாமா மாமியுடன் இருப்பவர்கள் ஆனால் எவ்வாறு அவர்களை அனுசரித்து போகின்றீர்கள் என்று அறியத்தந்தால் மற்றவர்களுக்கு ( அவர்களுக்கு தேவைப்பட்டால் ) உதவியாக இருக்கும்.

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்குடித்தனம் எல்லாத்துக்கும் சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவி உங்கள் அம்மா அப்பாவுடன் எப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும், பெண்ணாக இருந்தால், கணவர் எவ்வாறு உங்கள் அம்மா அப்பாவை நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் உங்கள் கருத்துக்களை எழுதலாம். நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக உங்கள் மாமா மாமியுடன் இருப்பவர்கள் ஆனால் எவ்வாறு அவர்களை அனுசரித்து போகின்றீர்கள் என்று அறியத்தந்தால் மற்றவர்களுக்கு ( அவர்களுக்கு தேவைப்பட்டால் ) உதவியாக இருக்கும்.

நீங்கள் உங்களை பெற்ற தாய் , தந்தைக்கு எவ்வளவு முக்கிய‌த்துவம் கொடுக்கின்றீர்களோ அதேயளவு மரியாதை மாமா , மாமிக்கு கொடுக்க வேண்டும்.

அவர்கள் எம்மோடு இருக்கப் போவது சிலவருடங்கள் தான்.அவர்கள் தங்கள் மகன் / மகளின் எதிர்கால‌ வாழ்க்கைக்காக‌ பெரும் பகுதியை சிரமத்துடன் தங்கள் இளவயது வாழ்க்கையை தியாகம் செய்து இருப்பார்கள்.

அவர்களின் முதிய வயதில் அவர்களை உரிய கௌரவம் கொடுத்து அனுசரித்துப் போவதே .... நல்ல ஒரு மனிதனுக்கு அழகு.

குடும்பம் இல்லற வாழ்க்கை என்று வந்து விட்டால் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்...............

அதன் அடிப்படையில் எங்கள் பெற்றோரும் தான் பெற்றோர்களும் தங்கள் பிளைகள் மருமக்கள்

இவர்களுடன் ஒத்துப் போக வேண்டும் ............எந்த சந்தர்ப்பத்திலும் தங்கள் பிள்ளைகளின் அல்லது மருமக்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது.....(ஏதாவது கடுமையான சந்தர்ப்பங்கள என்றால் தவிர்க்க முடியாதவை) பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளை வளர்க வேண்டும் அத்தோடு கணவன் மனைவி பிரச்சினைக்குள் இரு தரப்பினரும் பெற்றோர்களை இழுத்து கதைக்க கூடாது.........முடிந்த வரை தனி குடித்தனம் நல்லது............

பொதுவாக பார்த்தீர்கள் என்றால் பெற்போருடன் இருக்கும் தம்பதிகளிடையே அடிக்கடி பெரிய அளவிலான பிரச்சினைள் ஏற்படுகின்றன காரணம் பின்னுக்கு இருந்து பெற்றோர் கொடுக்கும் பயனற்ர அறிவுரைகள்

எனவே கணவன் தன் மனைவியை தன் பெற்றோரிடம் விட்டுக் கொடுக்காமலும் மனைவி தன் கணவனை தன் பெற்றோரிடம் விட்டுக் கொடுக்காமலும் வாழ்க்கை நடாத்தும் போது மாமனார் மாமியார் மருமகள் புடுங்குப்பாடு வராது.........

பெற்றோர் எப்போதும் எங்கள் பெற்றோர் மனைவி எப்போதும் மனைவி அதே போல் கணவனும் எப்போதும் கணவன்............எனவே மற்ரவர்கள் உணர்வுகளையும் தேவைகளையும் சரியாக புரிந்து செயல்படும் போது எல்லாம் நன்றாகவே நடக்கும்...............

நாளை நானும் மாமா மாமி ஆகலாம் அல்லவா!!!!!!!

தனிக்குடித்தனம் இருப்பது எல்லாம் சரி இல்லை என்னை பொறுத்தவரையில் பிடிக்காத விஷயம் கூட... மாமா மாமியை அனுசரித்து போனால் பிரச்சனை வராது என்று இருக்கிறேன்...வயது போனவர்கள் இருப்பதே கொஞ்ச காலம் அவர்கள் இருக்கும்வரை சந்தோசமாக வைத்து இருப்பதே நல்லம்...மாமா மாமியை பெற்ற அப்பா அம்மாவாக நினைத்தால் பிரச்சனையே வராது.... எங்க அம்மா ஏதும் சொன்னால் கேட்பது இல்லை அதே போல் வயது போனவர்கள் தவறுதலாக ஏதாவது சொல்லாம் அதை நாம் காதில் போட்டு கணவரிடம் சொல்லி சண்டை வீட்டுக்குள் வருவதை விட என் மாமா மாமிதானே சொன்னார்கள் என்று நினைத்தால் பிரச்சனையே வராது..

அப்புறம் நம் வீட்டு பிரச்சனையை நம்மோட வைத்து இருந்தால் பிரச்சனை வராது...

  • தொடங்கியவர்

சிறி அண்ணா, தமிழ் மாறன் அண்ணா மற்றும் சுஜிக்கு நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு . நீங்கள் அணைவரும் கூறியது முற்றிலும் உண்மை. அவர்களை சந்தோசமாக வைத்து மகிழ்வித்து அனுசரித்து போவது ஒவ்வொரு மருமகளினதும் மருமகனினதும் கடமை. அத்துடன் அவர்களை எம் சொந்த அப்பா அம்மா போல் நடாத்தி - அவர்களை அம்மா அப்பா என்று கூப்பிட்டால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. விட்டுக்கொடுப்பும் சகிப்புத்தன்மையும் இருந்தால் யாரையும் சமாளித்து குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லலாம்.

Edited by Eelamagal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.