Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் காவல்துறையின் நடவடிக்கையினால் நீரினுள் மூழ்கி மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன், கொழும்பு 30/10/2009, 16:59

பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் காவல்துறையின் நடவடிக்கையினால் நீரினுள் மூழ்கி மரணம்!

policeattackcolombo.jpg

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் சிறீலங்காக் காவல்துறையினரின் நடவடிக்கையினால் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை ஒருவர் சிறீலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் பம்பலப்பிட்டிய காவல் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஏனைய காவல்துறையினரையும் அடையாளம் காணும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று வியாழக்கிழமை மதியம் பம்பலப்பிட்டி கடற்கரையில் நின்ற இளைஞன் வீதியில் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளார். இதனால் இரு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் கடற்கரையால் செல்லும் தொடருந்துக்கும் இவர் கற்களை வீசியுள்ளார்.

bodybampalapittya.jpg

இதனால் அங்கிருந்து மக்கள் கூக்குரலை எழுப்ப, குறித்த இளைஞர் அச்சம் காரணமாக கடற்கரையிலிருந்து கடலுக்குள் சென்றுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் கரை திரும்ப எந்தனித்த போதும் அங்கு நின்ற சிறீலங்காக் காவல்துறையினர் குறித்த இளைஞர் மீது கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இதனால் நீண்ட நேரம் தண்ணீருக்கள் நின்ற இளைஞன் அலைகளுக்குள் சுருண்டு உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி மரணமடைந்த குறித்த இளைஞனின் உடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

பதிவு

காவற்துறையினரால் தண்டிக்கப்பட்டடு கொலை செய்யப்பட்டவர் பாலவண்ணன் சிவக்குமார்‐

பம்பலப்பிட்டி கடலுக்குள் பலவந்தத்தினால் தாக்கப்பட்டு நேற்று குதித்தபோது உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் காவற்துறை உத்தியோகத்தரையும் விசேட காவற்துறைக் குழு கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டியுள்ளார். இவர் ரத்மலானையை சேர்ந்த 26 வயதான பாலவண்ணன் சிவக்குமார் என்ற ஒரு மனநோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: globaltamilnews.net

இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணொளி பார்க்கும்போது மிகவும் கவலையாயிருக்கு. தமிழனை எப்படியெல்லாம் சாகடிக்கிறானுகள்.

http://video.yahoo.com/watch/6312211/16378193

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி பார்க்கும்போது மிகவும் கவலையாயிருக்கு. தமிழனை எப்படியெல்லாம் சாகடிக்கிறானுகள்.

http://video.yahoo.com/watch/6312211/16378193

நானும் அதை பாத்து ரொம்ப கவலை பட்டேன் :lol:

மன நோயாளிகள் ஒரு சமுதாயத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய தரப்பினராவர். அவர்கள் மீது வன்முறையினைப் பிரயோகிப்பதோ தற்கொலைக்குத் தூண்டுவதோ, நிர்ப்பந்திப்பதோ, மரண அச்சுறுத்தல் விடுப்பதோ அல்லது சாகும் நிலையில் கொண்டு சென்று விடுப்பதோ கொடுமையான மனித உரிமை மீறலாகும். அதுவும் பல பொதுமக்கள் முன்னிலையில் தலைநகர் ஒன்றின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகாமையில் வைத்து காவல்துறையினர் ஒருவரின் உதவியுடன் இது நிகழ்த்தப்பட்டுள்ளமை குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகின்றது.

இவ்விடயத்தில் கொலையுண்டவர் கல்லெறிந்து தாக்கியுள்ளமை தவறெனினும் அவரது மனோநிலை பலவீனம் காரணமாகவே இது நடந்ததால் அவர் பாதுகாப்பளிக்கப்பட்டு மனநோயாளருக்கான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் அன்றேல் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். அதனை விடுத்து இம்மாதிரியான கொடூரச் செயல் புரிவது பயங்கரவாதமாகும்.

மேலும் கடுமையான போர்குற்றச் சாட்டுக்களையும், மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களையும் எதிர்நோக்கி நிற்கும் சிறிலங்காவினை இத்தகைய கொடுரச்சம்பவம் மிகவுமே பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஜீ.எஸ்.பி. பிளஸ் பிரச்சனை அய்ரோப்பாவில் பெரும் பிரச்சனையாகியுள்ள வேளையில் அவர்கள் எவ்வித மனித உரிமைக் குற்றச் சாட்டுக்களைச் சொல்லி அவ்வரிச் சலுகைகளை மறுக்கிறார்களோ அவ்விதமான அசம்பாவிதங்களுக்கு மணிமுடி வைத்தாற் போன்று மேற்குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகவே இச் செயல் சிறிலங்கா அரசின் அதமடித் தனமான செயற்பாடுகளுக்கு மற்றுமொரு பெரும் சாட்சியாகவே அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

நானும் அதை பாத்து ரொம்ப கவலை பட்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.