Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் ராஜபக்சே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ராஜபக்சே!

வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 10:56 [iST]

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் வசிக்கும் வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ராணுவத்தின் 65வது பிரிவின் தலைமையகம் அமைந்துல்ள வன்னி துணுக்காய் பகுதிக்குச் சென்ற அவர் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார்.

மேலும் அப் பகுதியில் பள்ளிக்கூடம், கோவில்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டு்ள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார். முகாமில் உள்ள சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதன் பிறகு கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.

ராஜபக்சேவுடன் அவரது தம்பியும், பாதுகாப்பு துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே, தரைபடை தளபதி ஜெகத் ஜெயசூரியா, விமானபடை தளபதி குணதிலகா ஆகியோரும் சென்றிருந்தனர்.

'சகோதரரை காக்க இந்திய உதவி நாடும் ராஜபக்சே!'

இந் நிலையில் இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவி செய்தால் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், அதில் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்பு த் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சேவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையை தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக டெல்லிக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல, மனித நேயமற்ற செயலும் ஆகும்.

ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது.

இப்போதும் அதேபோல செயல்படுமானால், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்புக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

thatstamil

இந்தியா எதை எதிர்பார்த்ததோ அது நடக்கிறது ..1லட்சம் மக்களைவிட சிறிலங்காவுக்குள் சிங்களவனின் ஆசியுடன் எப்ப நுழையலாம் என்று எதிர் பார்த்துக்கொன்டு இருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

நான் உங்கள் தோழன்

நான் உங்களுடைய சொந்தக்காரன்

இப்படி மகிந்தா மாமா சொல்லுறார்,இப்ப எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது தொப்புள் கொடி உறவுடன் ,உறவை வைக்கிறதோ?அல்லது புது சொந்தக்காரனுடன் உறவு வைக்கிறதோ என்று? :wub::wub:

நான் உங்கள் தோழன்

நான் உங்களுடைய சொந்தக்காரன்

wub: :wub:

http://www.engaltheaasam.com/president_visit_kln_2.jpg

http://www.engaltheaasam.com/president_visit_kln_1.jpg

http://www.engaltheaasam.com/president_visit_kln_4.jpg

http://www.engaltheaasam.com/president_visit_kln_10.jpg

:wub: :wub: :blink: :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெற்றோரை இழந்த பிள்ளைகளை கொழும்பிற்கு அழைத்து வர நடவடிக்கை

05 November 09 02:39 am (BST)

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெற்றோரை இழந்த பிள்ளைகளை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெற்றோரைஇழந்த 225 சிறுவர்கள் இவ்வாறு கொழும்பிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்ஏ.புத்திரசிகாமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெற்றோரை இழந்த 225 சிறுவர்களை நாளை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்படும் சிறுவர்களை நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்ஏ.புத்திரசிகாமணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

globaltamilnews.com

படங்கள் இனைத்தமைக்கு நன்றிகள்..இனி என்ன மகிந்தா கோஷ்டியுடன் சம்பந்தம் வைக்க வேண்டியதுதான் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.