Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனும் அனுபவித்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் அனுபவித்தான்

நான் சொல்லும் இந்த கதை உன்மை முல்லை தீவு மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா அகதிமுகாமில் உள்ள ஒரு சகோதரியின் இந்த கதை அண்மையில் சுடர் ஒளி பத்திரிகையில் வெளி வந்தது அது அவர்தான் எழுதியது அது உங்களுக்காக‌

என்ன சண்முகம் பிள்ளைக்கு கல்யாணம் போல .ஓம் சுந்தரன் ஞானவிக்கு கல்யாணம் கட்டி கொடுக்க போறம் மப்பிள்ளை நம்ம சிவனின் மகன் தான். யாரு சிவாவா . ஓம் அவனும் நல்ல பையன் தான் நல்ல படுபாட்டுக்காரன் எல்லா வேலையும் செய்வான் நல்லா படித்திருக்கிறான் ஆனால் வேலைதான் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு சுந்தரத்தார் வீட்டுக்கு வந்தார் எங்க ஞானவி என்று மனைவியை கேட்ட அவள் இப்பதான் குளிக்க போகிறாள் .சரி போன விசயம என்ன ஆச்சு என கேட்க சண்முகத்தாரும் எந்த பிரச்சினையும் இல்லை மாப்பிள்ளை சீதனம் வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார் இருந்தாலும் நாம் கொடுக்க வேண்டிய‌தை கொடுத்து அவளை நல்லபடியாக கைபிடிச்சு கொடுக்க வேணும் என்றார் .ஓம் நீங்க சொல்வதும் ச‌ரிதான் .ஞானவியும் வீட்டு வர அம்மா கல்யாண விசயத்தை சொல்ல நீங்கள் எடுக்கும் முடிவில் எனக்கு சந்தோசம் தான் என்று சொன்னாள் ஞானவி அம்மாவோ சிவாவும் நல்ல பையன் சீதனம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் அப்பாகிட்ட. அவன் நல்ல பையன் உன்னை நன்றாக வைத்து காப்பாற்றுவான் என்று சொன்னாள் அம்மா .இரு வீட்டாராலும் கல்யாணம் நிட்சயிக்கப்பட்டு நிறைவேறியது குடும்ப வாழ்க்கையில் இணைந்த இருவரும் சந்தோசமாக வாழ்ந்தோம் சிவாவும் கடலுக்கு போய் சம்பாத்தித்து நல்லபடியாக வாழ்க்கை தொடர்ந்தான் . முல்லைத்தீவில் கடல் தொழில்தான் பிரபல்யம் அதைதான் எல்லோரும் செய்து பிழைத்து வந்தனர் அந்த காலம் சமாதான காலம் என்ற படியால் எந்த தொந்தரவும் இலங்கை கடற்படையால் இருக்க வில்லை

போர் கிழக்கில் ஆரம்பிக்க தொடங்கியதும் வவுனியா ஓமந்தை பாதை மூட அரம்பித்தனர் அந்த காலம்தான் எங்களுக்கு சோதனைகாலமாக மாறியது இரண்டு குழந்தைக்கு தாய் ஆகிய நான் இருக்கும் பொருட்களை வைத்து சமாளித்து கொண்டேன் ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து கொண்டு சிவாவும் கடலுக்கு சென்று வீடு திரும்புபவார் அவரை போக வேண்டாம் என்று சொன்னாலும் அவர் இருப்பதில்லை எங்க போவது சாப்பாட்டுக்கு கையில் இருந்த பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டது .கடலுக்கு போனால்தான் ஏதாவது குடிக்கலாம் என்றார் .

கிழக்கில் போர் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு விடுவிக்கப்பட்டது வன்னிமீது குறிப்பாக முல்லைதீவில் வண்டுகள் பறந்தன வன்னியை கைப்பற்ற எதிரி ஆரம்பித்தான் வான் தாக்குதல் தொடங்கின அழகாய் இருந்த எங்கள் நிலம் அழத்தொடங்கியது பார்க்கும் இடம்மெல்லாம் மரண ஓலங்கள் என் கணவனும் கீபீர் தாக்குதலில் உயிர் இழந்தார் இதை நான் ஏன் சாதாரணமாக சொல்கிறேன் என்றால் மரணத்தை பார்த்து பார்த்து மரத்து போனது என் நெஞ்சு.

குழந்தைகளும் அப்பா அப்பா என்று அழ ஆரம்பித்தனனர். அப்போது வவுனியாவை சேர்ந்த குணாளன் அறிமுகமானார் எங்களுடன். தான் இங்கு வந்தது ஒரு வேலை விடயமாகவும் போர் வன்னியில் தொடங்க போகிறது போல் இருக்கிறது நீங்களும் என்னுடன் அகதியாக வாருங்கள் எனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி உங்களை அங்கு எடுத்து செல்கிறேன் என்றான் ஞானவியின் பெற்றோரும் அவளும் நம்பினார்கள் அவனை . அவன் பேச்சில் இரக்க குணம் தெரிந்தது ஞானவி தனிமையில் இருக்கும் போது உன்னை நான் திருமணம் முடிக்கிறேன் உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பேன் என்று சொல்ல என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை அப்பா அம்மாவிடம் சொல்ல அவர்களும் மறுக்கவில்லை ஒரு வாரம் என்னுடம் அவன் வாழ்ந்தான் என்னை முழுமையாக அனுவித்தான் .தான் வவுனியா போக போறதாகவும் அங்கு போய் உங்களை போர் தொடங்குவதற்குள் உங்களை எடுக்கிறேன் என்றான் அவனும் சென்று விட்டான் ஆனால் போர்தொடங்கியது வன்னி நிலம் பல லட்சம் மக்களை இழந்து இருந்தது அம்மா அப்பாவோ எங்கு இருகிறார்கள் உயிரோடுதான் இருக்கிரார்களா என்று தெரியாமல் தவித்தேன் இரண்டு குழந்தைகளுடனும் நான் வன்னியில் இருந்து வவுனியா முகாமுக்குள் அழைத்து வரப்பட்டேன் பின்பு அந்த‌ குணாளனுக்கு கடிதம் அனுப்பினேன் எங்களை வந்து அழைத்து செல்லுங்கள் என்று ஆனால் அவன் வரவில்லை ஒரு கடிதம் மட்டும் வந்தது நான் உன்னுடன் ஏழு நாட்கள்தான் வாழ்ந்தேன் என்னால் உன்னுடன் வாழமுடியாது என்று அந்த கடிதத்தில் இருந்தது .மீண்டும் நான் கடிதன் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் மண்ணில் வராவிட்டால் ???

தன் உயிரை மாய்த்து கொள்வது போல் எழுதியிருந்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவித்தான் என்ற சொல் ஒரு மாதிரியான கதைகளில்தான் பயன்படுத்துவார்கள். இப்படியயான தமிழரது அவலம் தொடர்பாான ஒரு உண்மைச்சம்பபவத்தில் அச்சொல் பயன்படுத்துவது அநாகரிகமானதாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடலை

Posted Today, 01:21 AM

அனுபவித்தான் என்ற சொல் ஒரு மாதிரியான கதைகளில்தான் பயன்படுத்துவார்கள். இப்படியயான தமிழரது அவலம் தொடர்பாான ஒரு உண்மைச்சம்பபவத்தில் அச்சொல் பயன்படுத்துவது அநாகரிகமானதாக உள்ளது

கதைக்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது பலரை ஈர்ப்பதற்க்காக என்னவோவைத்திருக்கலாம்[ தன் வாழ்வில் நடந்த அனுபவத்தை பலருக்கு சொல்ல இப்படி வைத்திருக்கலாம்] :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது பலரை ஈர்ப்பதற்க்காக என்னவோவைத்திருக்கலாம்[ தன் வாழ்வில் நடந்த அனுபவத்தை பலருக்கு சொல்ல இப்படி வைத்திருக்கலாம்] :lol:

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::unsure::lol::) விடலை சொன்னதிலும் நியாயம் இருக்கு

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் போகும் தொடர்பு இருப்பதால் பெரியவர்களை கொண்டு நியாயம் கேட்கலாம்......அந்த பெண் ....பிள்ளை களுகாக வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த ஒரு சூடு போதும் மறுமணம் எனும் வலையில் விழாதிருக்க. ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::unsure::lol: விடலை சொன்னதிலும் நியாயம் இருக்கு

தலைப்பு அந்த பெண் இட்டதுதான் என நினைக்கிறேன் ஆனால் பெயர்கள் யாவும் உன்மையல்ல

நிலாமதி

Posted Today, 08:16 PM

கடிதம் போகும் தொடர்பு இருப்பதால் பெரியவர்களை கொண்டு நியாயம் கேட்கலாம்......அந்த பெண் ....பிள்ளை களுகாக வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த ஒரு சூடு போதும் மறுமணம் எனும் வலையில் விழாதிருக்க. ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்

நிலாமதியக்க நீங்க சொல்வதும் சரிதான் இதை போல் இன்னும் பல பெண்கள் ஏமாற கூடாது என்பதை தான் நானும் கூற முற்படுகிறேன் [ இப்ப ஏமாற்றுபவனுக்கு தானே காலம்]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.