Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் தமிழ்ச் சிறுமிகள் பலரைக் கற்பழித்துள்ள ராணுவம்

Featured Replies

கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து வைத்துள்ள சிறைக்கு அனுப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர். பின்னர் அச்சிறுமி தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டார். அந்த தடுப்பு முகாம்களில் உள்ள 17 மற்றும் 19 வயதான சிறுமிகளும் ராணுவ அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில் காயப்பட்ட பெண்கள் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த பெண்களை சிங்கள ராணுவத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக சிங்க தாதியர் அப்பெண்களை நிர்வாணமாக்கி ஹோஸ் பைப்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டியதாக நேரில் கண்ட சாட்சியின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக தமிழ்நெட் கூறியுள்ளது.

தமது கணவன்மாரை ராணுவம் எங்கே தடுத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் இன்னல் பட்டுக்கொண்டிருந்த பல பெண்களை மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த உயர் பணியாளர் ஒருவர் தகாத முறையில் பயன்படுத்தியதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நெட்டுக்கு சான்றுகள் அளித்த ஒருவர் கூறும்போது "சிங்கள ராணுவத்தின் ஆதரவுடன் சில தமிழர்கள் பாலியல் வல்லுறவுச் செயல்களில் ஈடுபட்டதை அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன்" எனக் கூறியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர்கள் கற்பழித்ததாக தமக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அச்செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.

மே மாதத்தில் தடுப்பு முகாமுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட மூன்று தமிழ்ப்பெண்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன. அந்த உடல்களில் கடித்ததற்கான காயங்களும், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளும் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

அண்மையில் பாலியல் வல்லுறவுகளை ராணுவம் ஒரு போர்த்தந்திரமாக பயன்படுத்துவதாக ஹிலாரி கிளின்ரன் கூறியபோது, இலங்கை பிரதமர் அவர்மீது தனிப்பட்ட முறையில் எதிர்க்கருத்துக்கள் சில கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.

இது கொழும்பின் கடந்த கால செயற்பாடு அல்ல. லட்சக்கணக்கான தமிழர்களை ராணுவத்தில் பிடியில் வைக்க அனுமதித்துள்ளதால் சர்வதேச சமூகத்தாலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஒரு தொடர் குற்றச்செயல் எனக் கூறினார் பாலியல் வல்லுறவுகள் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் தமிழர் ஒருவர்.

இந்த பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சிறிய ராணுவ முகாம்களை அமைப்பதன்மூலம் இதை மேலும் விஸ்தரித்து வருகிறது அரசாங்கம். முறைப்பாடுகள் கொடுத்த தமிழர்களுக்குக் கூட நீதிகிடைக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சர்வதேச சமூகமும் சரி, ஐ.நா உம் சரி பேசாமல் இருப்பதாலேயே ஈழத் தமிழர்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

எனவே தான், சான்றுகள் நிரூபிக்கப்பட்டால் சரியான நடவடிக்கை எடுத்து சர்வதேச சமூகமானது தமது நற்பெயரை நிலைநாட்டுமா என மனிதாபிமானப் பணியாளர்கள் சர்வதேச சமூகத்திடமே சவால் விடுகிறார்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30672

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சிதறு தெய்திகள் உண்மைகள் வெளிவரும்போது......????

நான் கேள்விப்பட்டவை நடந்திருக்ககூடாது என்று முடிவெடுத்ததாலேயே ......???

நான் இன்று தங்களுக்கு எழுதக்கூடிய அளவிலாவது இருக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கே மனிதாபிமானம்பற்றி பேசும் மனிதக்குரங்குகள் இதற்கு என்ன சொல்லப்போகின்றனரோ????

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மனிதாபிமானம்பற்றி பேசும் மனிதக்குரங்குகள் இதற்கு என்ன சொல்லப்போகின்றனரோ????

the3monkeys.jpg

அவர்கள் இதனைப்பற்றி கேட்கவோ , பார்க்கவோ , பேசவோ ..... மாட்டார்கள்.

கற்பு...! இது அடக்கு முறையாளனின் இன்னும் ஒரு வடிவம்... இதைப்பற்றி நிறைய எழுதலாம்... கற்பு என்பதை தூக்கி பிடிப்பவர்கள் அடக்கு முறையாளனின் நோக்கத்துக்கு துணை போகிறீர்கள் என்பது மட்டும் உண்மையானது... இந்த கற்பு எனும் செய்தி பாதிக்கப்பட்ட என் சகோதரியை ஒடுக்கி வைக்க மட்டுமே செய்யும்...

இனிமேலாவது கற்பை தூக்கி எறிந்து போட்டு வன்புணர்வை சாட பழகிக்கொள்ளுங்கள்... வன்புணர்வு என்பது வீதியால் போகும் ஒருவரை வெறிநாய் கடிப்பது மட்டும் தான்... பாதிக்க பட்டவரை மருத்துவம் மட்டும் செய்து சரி செய்து கொள்ள முடியும்..

பாதிக்க பட்டவள் எதையும் இழக்க இல்லை... அவளிடம் இருந்து எதையும் அழிக்கவும் இல்லை... அவள் நாய்களால் குதறப்பட்டு மட்டுமே உள்ளாள்..

Edited by தயா

அந்த தமிழ் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் எண்டு சிங்களவர்கள் சொல்கிறார்கள்.

90% ஈழதமிழர்கள் இதை வழிமொழிவார்கள்.

யார் எக்கேடு கெட்டால் எமக்கென்ன....

எங்கட சனம் விடயத்தில் எதிரி மீது கை நீட்டினால்....

எமது சனம் சொல்லும் கமக்கட்டு மணக்குது எண்டு.

பேசாமல் எமது இனத்தை கருணை கொலை செய்வது உலகத்திற்க்கு மட்டுமல்ல எமக்கும் நல்லம்

எங்கட சனம் விடயத்தில் எதிரி மீது கை நீட்டினால்....

எமது சனம் சொல்லும் கமக்கட்டு மணக்குது எண்டு.

பேசாமல் எமது இனத்தை கருணை கொலை செய்வது உலகத்திற்க்கு மட்டுமல்ல எமக்கும் நல்லம்

அவ்வளவு நாற்றத்தை சுமந்தவர்கள் நாங்கள் என்பதும் உண்மைதானே....??

கற்பு...! இது அடக்கு முறையாளனின் இன்னும் ஒரு வடிவம்... இதைப்பற்றி நிறைய எழுதலாம்... கற்பு என்பதை தூக்கி பிடிப்பவர்கள் அடக்கு முறையாளனின் நோக்கத்துக்கு துணை போகிறீர்கள் என்பது மட்டும் உண்மையானது... இந்த கற்பு எனும் செய்தி பாதிக்கப்பட்ட என் சகோதரியை ஒடுக்கி வைக்க மட்டுமே செய்யும்...

இனிமேலாவது கற்பை தூக்கி எறிந்து போட்டு வன்புணர்வை சாட பழகிக்கொள்ளுங்கள்... வன்புணர்வு என்பது வீதியால் போகும் ஒருவரை வெறிநாய் கடிப்பது மட்டும் தான்... பாதிக்க பட்டவரை மருத்துவம் மட்டும் செய்து சரி செய்து கொள்ள முடியும்..

பாதிக்க பட்டவள் எதையும் இழக்க இல்லை... அவளிடம் இருந்து எதையும் அழிக்கவும் இல்லை... அவள் நாய்களால் குதறப்பட்டு மட்டுமே உள்ளாள்..

தயா சொல்வதுடன் 100% ஒத்துப் போகின்றேன். எதிரியின் வன்முறைக்குள்ளான எம் உயிர்ச் சகோதரிகளின் பெரும்துயரம் பற்றிச் சொல்லும் போதும் கூட அவர்கள் மீது வன்முறையை மொழி வடிவில் நாம் பிரயோகிக்காமல் இருக்க முடிந்தளவு முயல்வோம். புலிகள் எக்காலத்திலும் 'பாலியல் வல்லுறவு' எனும் வார்த்தையை பயன்படுத்தியதில்லை, மாறாக 'பாலியல் வல்லுறவு' எனும் முழு அர்த்தம் தருகின்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றனர்.

வல்லுறவுக்குள்ளான இந்த சகோதரிகளுக்கு நாம் எம் சமூகத்தில் பெருமதிப்புக் கொடுப்போம். எந்த சிங்கள பேரினவாதம் அவர்களை சுக்கு நூறாக உடைத்து சிதைக்கின்றதோ, அதற்கான விலையை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வடிவில் மீண்டும் திருப்பிக் கொடுக்க சன்னதம் கொள்வோம்.

Edited by நிழலி

  • தொடங்கியவர்

தயா சொல்வதுடன் 100% ஒத்துப் போகின்றேன். எதிரியின் வன்முறைக்குள்ளான எம் உயிர்ச் சகோதரிகளின் பெரும்துயரம் பற்றிச் சொல்லும் போதும் கூட அவர்கள் மீது வன்முறையை மொழி வடிவில் நாம் பிரயோகிக்காமல் இருக்க முடிந்தளவு முயல்வோம். புலிகள் எக்காலத்திலும் 'பாலியல் வல்லுறவு' எனும் வார்த்தையை பயன்படுத்தியதில்லை, மாறாக 'பாலியல் வல்லுறவு' எனும் முழு அர்த்தம் தருகின்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றனர்.

வல்லுறவுக்குள்ளான இந்த சகோதரிகளுக்கு நாம் எம் சமூகத்தில் பெருமதிப்புக் கொடுப்போம். எந்த சிங்கள பேரினவாதம் அவர்களை சுக்கு நூறாக உடைத்து சிதைக்கின்றதோ, அதற்கான விலையை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வடிவில் மீண்டும் திருப்பிக் கொடுக்க சன்னதம் கொள்வோம்.

நிச்சயமாக

இந்த திரியில் மதிவந்தனங் வந்து படு கேவலமாக எழுதும் போது யாழ் நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது. வார்த்தை பிரயோகங்கள் பற்றி இளைஞனும் சரி யாழ் நிர்வாகமும் சரி எந்த கவலையையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் மதிக்கு பதில் அவரின் மொழியிலேயே நான் எழுதியவுடன் உடனே ஓடி வந்து என்னுடையதையும் மதி யினதும் பதில்களை நீக்கிவிட்டனர்

ஆக, மதியின் கேவலத்தை நீக்கவேண்டுமாயின், நாமும் உடனே கேவலமாக எழுதினால் தான் யாழ் கள நிர்வாகிகளுக்கும் மட்டுறுத்தினருக்கும் உறைக்கும் போல. இனி மதியின் பதில்களுக்கு ஊரிலும் கனடாவிலும் புழக்கத்திலுள்ள அனைத்து விதமான தூசனங்களையும் பாவித்துத் தான் எழுதப் போகின்றேன். வேண்டுமாயின் என்னை தடை செய்யவும்

ஈழத்தில் எதிரியுடன் தாம் நாம் தோற்றுப் போனோம்

யாழில் துரோகிகளுடன் தோற்க போகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் எதிரியுடன் தாம் நாம் தோற்றுப் போனோம்

யாழில் துரோகிகளுடன் தோற்க போகின்றோமா.............?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.