Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடாவும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடாவும் எதிர்ப்பு 28 November 09 02:32 am (BST)

எதிர்வரும் 2011ம் ஆண்டு 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்த யோசனைத் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடா ஆதரவளிக்காது என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென கனடா கோரிக்கை விடுத்துள்ளது.

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கனடா பூரண ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17836&cat=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவது பொருத்தமற்றது - பிரித்தானியப் பிரதமர்

எதிர்வரும் 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை மீறி செயல்படும் ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என பிரித்தானிய பிரதமர் கோர்டன பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மேற்கிந்தியாவில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் அவர் இது தொடர்பில் விசேட அறிக்கையினை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் இந்த நிலைப்பாட்டிற்கு அவுஸ்ரேலியாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாஙங்ம் வன்னியில் மேற்கொண்ட மனிதப்பேரழிவுகள் குறித்தும் அதனை தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

http://www.pathivu.com/news/4332/54/.aspx

உப்பிடியெல்லாம் அறிக்கை விடமுன்னம் இந்தியாவிட்ட கேட்கவேண்டும்.

பிறகு இந்தியா அடம்பிடிக்குதெண்டு பல்லைக்காட்டி மழுப்பககூடாது.

அகிலும் அடம்பிடிச்சா சிறிலங்கா சீனாவுடன் சேர்ந்து வீறேதாவது ஒரு கூட்டம் வைக்கும் தேவையா இது.

உப்பிடியெல்லாம் அறிக்கை விடமுன்னம் இந்தியாவிட்ட கேட்கவேண்டும்.

பிரித்தானியப் பிரதமருக்கு இராசதந்திரம், புதிய உலக ஒழுங்கு தெரியாது மோட்டுத்தனமாக நிலைப்பாடு எடுக்கின்றார். எங்கடை புதிய இராசதந்திரிகளிடம் ஆலோசனை, பெற்றுக்கொள்ளவில்லைப் போல இருக்கு. சிங்களவரின் இராசதந்திர பலம் தெரியாது இறங்கிவிட்டார்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி யார் கூறினாலும் வெல்வது இத்தாலி இந்திய முசோலினி யின் கூட்டு முயற்சிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.