Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை

திரைப்படம்: பூவா? தலையா?

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: வாலி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்





மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை

மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ

சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?

தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?

புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?

கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?

குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?

இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

  • Replies 131
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமை! தமிழ் சிறி! நன்றிகள் இணைப்புக்கு!

பாட்டு மட்டுமல்ல! அதன் கருத்தும் அழகு!!

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அழகிய மிதிலை நகரினிலே

திரைப் படம்: அன்னை (1962)

பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா

இசை: ஆர்.சுதர்சனம்

வரிகள்: கண்ணதாசன்

என் தாத்தா பாட்டிக்கும் இந்தப் பாட்டு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்..! :D

ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதயை அவள் பார்த்திருந்தாள்

பாதயை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

சுசீலா: காவியக் கண்ணகி இதயத்திலே

காவியக் கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஸ்ரீனிவாஸ்: கோவலன் என்பதை ஊர் அறியும்

சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

இருவரும்: அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: பருவத்து பெண்கள் தனித்திருந்தால்

பருவத்து பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்

சுசீலா: இளையவர் என்றால் ஆசை வரும்

இளையவர் என்றால் ஆசை வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

சுசீலா: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

ஸ்ரீனிவாஸ்: உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

சுசீலா: இருவர் என்பது மாறி விடும்

இருவர் என்பது மாறி விடும்

இருவரும்: இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

படம்: தேன் நிலவு

பாடல்: சின்ன சின்ன கண்ணிலே

பாடியவர்கள்: A.M.ராஜா, P.சுசீலா

http://www.youtube.com/watch?v=OS6MLNolf-w&feature=related

படம்: தேன் நிலவு

பாடல்: நிலவும் மலரும் பாடுது

பாடியவர்கள்: A.M.ராஜா, P.சுசீலா

இது எனது பெற்றோரின் காலத்தில் வந்த பாடல், ஒரு தடவை எனது பெற்றோர் இந்தப் பாடலை சேர்ந்து பாடியிருந்தார்கள்... :wub::):(

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நான் மலரோடு

படம்:இரு வல்லவர்கள்

பாடியவர்கள்:டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: வேதா

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், குட்டி, இசைக்கலைஞன், நுணாவிலான்.....

நல்ல பாடல்களை இணைத்தீர்கள். :)

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.