Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிடைத்ததும் | கிடைப்பதுவும் | கிடைக்காததும் | கிடைக்கக்கூடியதுவும்

Featured Replies

வணக்கம், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஓர் நேர்காணல் நேரஞ்சலாக போவது வழமை. நானும் இடையிடையே சிறிதளவு பார்ப்பது உண்டு. கடந்த கிழமை ஓர் மனோதத்துவ வைத்தியருடன் உரையாடல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அவர் சொன்ன சில விசயங்கள் சற்று சிந்தனையை தூண்டிவிட்டது.

+++

குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக நாங்கள் வளர்ந்துவரும்போது... குழந்தைப்பருவத்தில் இருந்த சந்தோசத்தை எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும்போது நாங்கள் பெறமுடியாது. காரணம் பெரியவர்களாக வளர்ந்து செல்லும்போது பொறுப்புக்கள், கடமைகள் இப்படி பல விசயங்கள் எம்முடன் சேர்ந்துகொள்ளும். ஆனால்.. இதை உணராது முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்திக்கொண்டு இருப்போம். அதாவது பொதுவில் கிடைக்கமுடியாத ஒன்றை தற்போது தேடுவதால்.. அது கிடைக்காததன் ஏமாற்றத்தினால் நாங்கள் துன்பம் அடையவேண்டி இருக்கின்றது.

உதாரணமாக.. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களுக்கு அம்மம்மா, அம்மப்பா, பாட்டா.. பாட்டி.. சுற்றிவர உறவுகள் என்று இப்படி பல விசயங்கள் இருந்து இருக்கலாம். ஆனால்... காலம் செல்லச் செல்ல.. வாழ்க்கையில் உறவுகள் எல்லாம் விலகிச் செல்கின்றன அல்லது இல்லாமல் செல்கின்றன. எனவே, முன்பு பெற்ற சந்தோசத்தை மீண்டும் பெறுவது சாத்தியப்படாமல் போகலாம்.

இயற்கையின் இந்த நியதியை உணராமல்.. நாங்கள் முன்புபோல சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்று கவலைப்படுவதில் பயனில்லை. இது.. மேற்கண்ட மனவியல் வைத்தியரின் கருத்தின் சாரம்சம்.

இதுபோல் இன்னோர் விசயம் பற்றியும் சொல்லி இருந்தார். நாங்கள் ஒருவிடயத்தில் மாத்திரம் எங்கள் பார்வையை குவியப்படுத்தாது பரந்த பார்வையை கொண்டு இருக்க வேண்டும் என்று. அதாவது இப்போது நாங்கள் தெருவில் வாகனம் ஓடிக்கொண்டு இருக்கும்போது.. முன்னால் போகும் வாகனத்தை மாத்திரம் பார்த்து ஓடினால் விபத்தில் நாங்கள் மாட்டுப்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆனால்.. பரந்த பார்வையை கொண்டு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் மேலாக நீண்ட பார்வையை கொண்டு வாகனத்தை நாங்கள் ஓட்டும்போது விபத்தில் இருந்து தப்பிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். [Zoom inசெய்யாது Zoom out செய்தல்]

+++

இந்தக் கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன் என்று இல்லை. ஆனால்.. மனவியல் வைத்தியரின் இந்த இரண்டு கருத்துக்களும் எனது சிந்தனையை கொஞ்சம் தூண்டி இருக்கின்றது. இது சம்மந்தமாக உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கோ. எனது பார்வையை பின்னர் சொல்கின்றேன். நன்றி!

கலைஞன்,

இறந்த காலம் ஏன் எப்போதும் நெருடல் மிக்கதாய் இன்பகரமாய் எமது மனங்களில் படுகின்றது என்பதற்கு இன்னுமொரு வியாக்கியானமும் உண்டு.

அதாவது, வாழ்வு என்பது வாழ்வதற்கான முயல்தல் (will to live) என்பதாகவே இருக்கின்றது. ஏணியின் கடைசிப் படி என்று ஏதும் வாழ்வில் இல்லாது, ஒவ்வொரு படியும் அடையப்படுகையில் அடுத்த படிக்கான முயற்சி உடனே ஆரம்பமாகி இறுதி மூச்சுவரை மனிதர்கள் முயன்று கொண்டே இருக்கின்றார்கள். வாழ்வு என்பது முயல்தல் என்றே ஆகிப் போகிறது. இம்முயற்சி அல்லது முயல்தல் கழைப்பேற்படுத்துகின்றது. ஆனால், நாங்கள் அறிந்தோ அறியாதோ வாழும் வரை எங்களது will to live என்பதன் ஆதிக்கத்தில் நாங்கள் முயன்று கொண்டே இருப்போம்.

ஆனால், இறந்த காலத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ‘வில் ரு லிவ்’ என்பதன் அவசியம் அறவே இல்லை. இறந்த காலத்திற்காக எமது முயல்தல் எதுவும் நிகழ்காலத்தில் இல்லை. இதனால் தான், “வில் ரு லிவ்” என்ற தழையின் பிடி இல்லாததாக நாம் காணும் இறந்த காலம் எமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது.

இது போன்றது தான் ஓவியங்கள் மீதான எமது இனிமை உணர்வும் என்கிறது தத்துவவியல். அதாவது, நீங்கள் நடந்து செல்கையில் நீங்கள் ஒரு கட்டிடத்தைக் காண்கிறீர்கள் என்று வையுங்கள். அந்தக் கட்டிடம் முதற்கண் உங்களின் “வில் ரு லிவ்” என்ற முயல்தல் கட்டமைப்புக்குள் தான் உங்களால் நோக்கப்படக்கூடியது. அதாவது, உங்களது இருத்தலிற்கான முயல்தல்களில், மேற்படி கட்டடம் தொடர்பாகவும் உங்களது செயற்பாடுகள் அவசியப்படும்: உதாரணமாக, உங்களது பாதையில் மேற்படி கட்டடம் இருப்பதால் அதை விலத்தி நீங்கள் பயணிக்க வேண்டியது, அதனால் உங்களிற்கு ஆகும் அதிக பயண நேரம், பேருந்து வருகிறதா என நீங்கள் பார்க்க முடியாத படி மறைக்கும் கட்டிடத்தின் உயரம் முதலியவற்சை சிறிய உதாரணங்களாகக் கூறலாம். ஆனால் அதே கட்டிடத்தை ஒரு ஓவியமாக நீங்கள் பார்க்கையில், இப்போது அக்கட்டிடம் உங்களின் “வில் ரு லிவ்” கட்டமைப்பிற்குள் இருந்து அப்புறப்பட்டு நிற்கின்றது. இக்கட்டிடத்தால் உங்களின் பயண நேரம் அதிகரிக்காது, இவ்வோவியக் கட்டிடம் தொடர்பில் நீங்கள் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. எனவே றிலாக்சாக ஆற அமர நீங்கள் கட்டிடத்தின் ஓவியத்தை இரசிப்பீர்கள். நேரில் பார்த்த கட்டிடத்தைக் காட்டிலும் ஓவியம் அழகாய்த் தெரியும். கட்டிடம் மட்டுமன்றி அனைத்து ஓவியங்களிற்கும் இது பொருந்தும். சில உதாரணங்களை நீங்களாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எனவே வாழ்வதற்கான முயல்தல் அல்லது ‘வில் ரு லிவ்” என்ற கழைப்பேற்றும் காரணி நீக்கப்படுகையில் அனைத்தும் அழகாய் இனிமையாய்த் தெரியும் என்கிறது தத்துவவியல். இறந்த காலம் என்பது நிகழ்காலத்தில் நாம் முயலத்தேவையில்லாத ஒன்று என்பதால் தான் இனிக்கிறது என்றும், நிகழ்காலத்தில் முயல்தல் தேவைப்படுவதால் தான் இறந்தகாலம் இல்லையே என்ற நெருடல் பிறப்பதாயும் தத்துவவியல் ஊகிக்கின்றது. “வில் ரு லிவ்” என்ற முயல்தல் நீங்கிய நிகழ்கால வாழ்வாய் “ascetic;” (சுருக்கமாய் சொல்லின் துறவறம்) மற்றும் aesthetic; (அழகியல்) இரண்டையும் தத்துவவியல் காண்கிறது.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

"வாழ்வு என்பது வாழ்வதற்கான முயல்தல்" என்பதும் சிந்தனையை தூண்டி இருக்கின்றது இன்னுமொருவன். ஆனாலும்.. அதிலும் சில குழப்பங்கள் இருக்கின்றன. உங்கள் கருத்தை வாசித்ததில் மனவியல் வைத்தியர் கூறிய கருத்துக்கள் சம்மந்தமாக நான் சொல்லவந்த கருத்துக்களை தவிர்த்துவிட்டேன். பொதுவாக.. இறுதிவரை - எங்கள் இறுதிமூச்சுவரை.. நாங்கள் சந்தோசமாக இருப்பதில் முக்கியமாக எங்கள் பங்கு கணிசமான அளவு இருக்கின்றது என்பதே எனது கருத்தின் சாரம்சமாக கூறக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்த இன்னுமொருவனின் விள‌க்கம் அருமை...எனக்கு தெரிந்த சில பெண்கள் புலம் பெயர் நாட்டில் அறிமுகம் ஆனவர்கள் அவர்கள் ஏதோ ஒரு வகையில் கட‌ந்த காலத்தை மறக்க முடியாதவர்களாக,ஊரை,பெற்றோரை மற‌க்க முடியாதவர்களாக எப்போது பார்த்தாலும் தாங்கள் ஊரில் செல்லமாக,சுதந்திர‌மாக இருந்ததாகவும் இங்கே கஸ்ட‌ப்படுவதாகவும் சொல்வார்கள் அத்தோடு மனத்தாலும் அவர்கள் ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர‌ குடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.எதற்கெடுத்தாலும் ஊரையும் புலத்தையும் ஒப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.அவர்கள் புலம் பெயர் நாட்டுக்கேற்ப தங்களை மாற்ற[நான் நடை,உடை,பாவனையை சொல்லவில்லை] பலத்த சிர‌மப்படுகிறார்கள்.

  • தொடங்கியவர்

மற்றவர்களின் அனுபவங்கள் பற்றி தெரிய இல்லை. எனது தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம் என்று பார்த்தால் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் எனது வாழ்வில் ஏற்றத்தையும், ஒப்பீட்டளவில் அதிக மகிழ்ச்சியையும் உணரமுடிகின்றது.

வயசு போகப்போக இயற்கையின் நியதியின் நிமித்தம் பிரிவுகள், இழப்புக்கள் ஏற்படும் என்பதற்கு அப்பால்.. எங்கள் அறிவு, அனுபவ முதிர்ச்சி, பொருளாதார பலம், சுதந்திரம் - எமது வாழ்க்கையை நாங்கள் சுதந்திரமாக தீர்மானித்து - எமது கட்டுப்பாட்டினுள் வைத்து இருத்தல், புதிய உறவுகளின் உருவாக்கங்கள் - சந்திப்புக்கள் - கட்டமைப்புக்கள், அதிக வசதிகள், புதிய வாய்ப்புக்கள், சுகபோகங்கள் கிடைத்தல்... இவற்றையும் நோக்கும்போது.. மனவியல் நிபுணரின் கருத்துடன் முரண்பாட்டை காணமுடிகின்றது.

மனவியல் நிபுணரின் கருத்துடன் முரண்பாட்டை காணமுடிகின்றது.

அவரின் வாழ்க்கை ஆரம்பத்தை வைத்து அவர் பேட்டியளித்திருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னுமொருவனின் விளக்கம் எனது சொந்த அனுபவத்திலும்,

அவதானிப்பிலும் மிகவும் ஏற்புடையதாக உள்ளது.வாழ்வு என்பது

வாழதலுக்கான முயல்தல் என்பதும் மனிதன்(முக்கியமாக தமிழன்)கடைசி

வரை வாழ்வதற்கு தயார் படுத்ததிகிறானை தவிர வாழ்வதில்லை

என்ற பதமும் ஒரே அர்த்மாகும் என்று நினைக்கிறேன்.எனக்கு நீன்ட

காலமாக ஒரு குழப்பம்.என்னவென்றால்,சிலர் சொல்வார்கள் ஒரு இலக்கை

அடைந்து விட்டால் அத்துடன் திருப்தி படக்கூடாது என்று.அப்படி திருத்தி

ப்பட்டால் முண்றே முடியாது என்று.இது போதும் என்ற மனமே பொன்

செய்யும் என்றதுக்கு முரணானது.இதுல எது சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.