Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபட....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுப்பு

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அமைந்திருக்கும் முருகண்டி ஆலயத்தினை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் இந்துக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த ஆலயத்தில் வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏ9 வீதியூடான போக்குவரத்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள போதிலும் வாகனத் தொடரணியாகவே படையினர் வாகனங்களை வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள முருகண்டி ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும் தென்னிலங்கையில் இருந்து செல்கின்ற பெரும்பான்மைச் சிங்கள யாத்திரிகர்கள் தற்பொழுது ஆயிரக் கணக்கில் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நாக விகாரை , ஆரிய குளத்தில் உள்ள விகாரை மற்றும் நயினாதீவு விகாரை என்பவற்றுக்கு விஜயம் செயயும் அவர்கள் தற்போது மாதகல்லில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு செல்கின்ற தென்னிலங்கை பக்தர்களுக்கு கிளிநொச்சியிலுமே தற்பொழுது வழிபாட்டுக்கென பௌத்த விகாரை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. எனினும் முருகண்டியிலும் பௌத்தர்களுக்கு வழபாட்டுக்கு அனுமதி வழங்கப்படுகின்ற போதிலும் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் ஏ9 வீதியூடாக பயணிக்க அனுமமதிக்கப்படுகின்ற போதிலும் முருகண்டிப் பகுதியில் நடமாட அனுமதி மறுக்கப்படுகி;றது.

முருகண்டிப் பகுதியிலுள்ள அனைத்துக் கட்டிடங்களும் தற்பொழுது இடித்து நிர்மூலமாக்கப்பட்டிருப்பதுடன் அங்கு படையினர் மட்டுமே நிலை கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளன. தற்பொழுது இலங்கை அரசாங்கம் முருகண்டி ஆலயத்தை முழுமையாக புனர்த்தாரணம் செய்யப் போவதாக அறிவித்த போதிலும் தமிழ் மக்களுக்கும் இந்துக்களுக்கும் வழிபட உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட இந்து மத குருமார்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.

மூலம்: http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=19059&cat=1

Edited by yarlpriya
செய்திகளின் நேரடி மூலத்தினை குறிப்பிடவும்

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகண்டியிலும் பௌத்த ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறதா?

வழுக்கியாறு அவர்களே உங்களது கேள்வியில் உண்மையிருக்கலாம். அதனால் இந்தத் தடையாகக் கூட இருக்கலாம். வழிபாட்டுக்குத் திறக்கும்போதே புரிந்துகொள்ள முடியும்.

Edited by nochchi

பிள்ளையாரே இது குறித்து அலட்டிக் கொள்ளாவமல் 'சிவனே' என்று இருக்கும் போது நாங்கள் என்னதான் செய்வது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கு, புத்தரும் சைவர் எண்டு சொல்லுறதால அவற்ற விக்கிரகத்தையும் ஒரிடத்தில வச்சிட்டா போச்சு. வருமானமும் ஆச்சு பிரச்சனையும் தீந்துபோச்சு. :)

  • கருத்துக்கள உறவுகள்

முருகண்டி ஆலயத்தினுடைய ஒரு தோற்றம். இப்ப அது வேறு தோற்றமாக மாறியிருக்கலாம்.

murikandy.jpgw600.png

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

{

இதுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கு, புத்தரும் சைவர் எண்டு சொல்லுறதால அவற்ற விக்கிரகத்தையும் ஒரிடத்தில வச்சிட்டா போச்சு. வருமானமும் ஆச்சு பிரச்சனையும் தீந்துபோச்சு. :wub:

}

ஏன்டா மதிவதனங் உன்ர மனிசிய இன்னொருத்தனுட்ட கொடுப்பியா வைச்சிருக்க....... உன்னையெல்லாம் யாழ் இணையத்தில கருத்துதெழுத விட்டிருக்கிறாங்கள்.....!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

{}

ஏன்டா மதிவதனங் உன்ர மனிசிய இன்னொருத்தனுட்ட கொடுப்பியா வைச்சிருக்க....... உன்னையெல்லாம் யாழ் இணையத்தில கருத்துதெழுத விட்டிருக்கிறாங்கள்.....!!!!

அண்ணே கூல்.....கூல், உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள். இண்டைக்கு நாள் கூடாதாம், ராத்திரி கோயில்கூட துறக்கேல்லயாம், 3 நாள் கழிச்சு வாறன். :wub:

Edited by Mathivathanang

கடந்த வருடம் முறுகண்டி படையினரால் கைப்பற்றபட்டபின்னர் படையினர் ஆலயத்தை துப்பரவுபணி செய்யுப் படத்தை வெளியிட்டு

மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் இணையத்தளம் ஒன்றில்இப்படி எழுதியிருந்தார்கள்ஆகா பாருங்கள் அரச படையினரின்கண்ணியத்தை ஆலயத்தை துப்பரவு செய்கின்றார்கள் புலிகளிடம் இருந்தபொழுது அவர்கள் என்ன செய்தார்கள்

என புலிகளை மட்டம்தட்டியும் அரசையும் அரச படைகளைபுகழ்ந்தும் எழுதியிருந்தார்கள் நடப்பது எல்லாம் நாடகம் என்று தெரிந்தும் அப்பொழுது கருத்து எழுதிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இச்செய்தியின் பின்னர் என்ன சொல்வார்கள்?

இச் செய்தியை பொய் என்பார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.