Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதாக பொன்சேகா தேர்தல் ஓப்பந்தம்: இனியபாரதி தகவல் .

Featured Replies

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதாக பொன்சேகா தேர்தல் ஓப்பந்தம்: இனியபாரதி தகவல் .

.அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக முழுக் கிழக்கு மாகாணத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாரென ஜெனரல் சரத் பொன்சேகா இரகசிய தேர்தல் ஒப்பந்தமொன்றை செய்திருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழனத்தையும், தமிழினத்தின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகின்ற சதிவேலைக்கு ஒப்பானதாகும் என்று அரசதலைவர் மகிந்தவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் அமைச்சர் முரளிதரனின் கிழக்குமாகாண பொறுப்பாளருமான கு. இனியபாரதி காரைதீவு பிரதேச சபையின் பொதுச்சந்தைத் திறப்பு விழா மற்றும் 5 ஆவது வித்ய சாகித்திய விழா ஆகியவற்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.

எதிர்வரும் அரசதலைவர் தேர்தல் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான தேர்தல் அல்ல, மாறாக இத் தேர்தல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழர்களுக்குமிடையிலான தேர்தலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இனியபாரதி அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:-

"தமிழினத்தைத் திட்டமிட்டுப் புறக்கணித்து, அழித்து அதில் வெற்றி கண்டதாக நினைக்கும் சரத் பொன்சேகாவுக்கு எந்தத் தமிழனும் வாக்களிக்கமாட்டான். தமிழினத்தை அழிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சரத் பொன்சேகா அவரது வாழ்க்கைக் காலத்தில் மொத்த தமிழனத்தை அழிக்கும் வேலையில்தான் செயற்பட்டிருந்தார்.

"அவருக்கு வாக்களிக்க தன்மானமுள்ள தமிழன் எவரும் முன்வரமாட்டான். தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பேரிழப்புகளை இந்த யுத்தமும், இன வன்முறைகளும் ஏற்படுத்தியுள்ளன. இனியாவது நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இன்றைய அமைதியான, சுதந்திரமான சூழலில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திகள், முன்னெடுக்கப்படவேண்டுமானால் மஹிந்த ராஜபக்ஷதான் அரசதலைவராக வரவேண்டும்.

"இலங்கையில் மூவின மக்களாய்ப் பிரித்து முஸ்லிம்களிடம் கிழக்கை ஒப்படைக்கவிருக்கும் சரத்பொன் சேகாவினால் எவ்வாறு இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்? எனவே, தமிழில் பேசி பெரும்பான்மை, சிறுபான்மை என எந்தப் பிரிவுமில்லை, அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எனக் கூறி பல அபிவிருத்தித் திட்டங்களை இன, மத, பிரதேச பேதம் பார்க்காமல் முன்னெடுத்து வரும் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே தமிழினம் அணிசேர வேண்டும் என்றார்.

நன்றி

ஈழநேசன்

  • தொடங்கியவர்

அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எனக் கூறி பல அபிவிருத்தித் திட்டங்களை இனஇ மதஇ பிரதேச பேதம் பார்க்காமல் முன்னெடுத்து வரும் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே தமிழினம் அணிசேர வேண்டும் என்றார்.

அரசியல் எப்படியெல்லாம் கதைக்க வைக்குதப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதாக பொன்சேகா தேர்தல் ஓப்பந்தம்: இனியபாரதி தகவல்.

யாழ்ப்பாணம் வன்னி தமிழருக்காம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

டி.சிவராமின் கொலையில் நேரடித்தொடர்பிருக்கும், நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை கடத்திக் கொன்ற (தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்கள் படுகொலைகள் உட்பட ) இனியபாரதியை கூட பிரதம அதிதியாக அழைத்து கெளரவிக்கும் போக்கை என்னவென்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது

ஒரு குற்றவாளியின் புலம்பல் என்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.