Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தீர்மானத்தினால் கிடைத்துவரும் சாதகங்கள் இவை

Featured Replies

கூட்டமைப்பின் தீர்மானத்தினால் கிடைத்துவரும் சாதகங்கள் இவை

கொழும்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு வினர் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சமயம், அங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தர் "யார் சுட் டாலும் பலகாரம் எமக்குக் கிடைத்தால் சரி" என்று குறிப் பிட்டிருந்தார். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மாதிரி, இப்போது விடயங்கள் இவ்வளவு விரைவாக நடந்தேறுவது மிகவும் வியப்புக்குரியதுதான்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததோ, இல்லையோ மறுபுறத்தில் விடயங்கள் மளமளவென்று நடந்தேறு கின்றன. கூட்டமைப்பினர் அரசுப் பக்கம் சாய்ந்திருந்தாலும் கூட இவ்வளவு விடயங்களை இவ்வளவு விரைவாக தமது மக்களுக்கு ஒப்பேற்றிக் கொடுத் திருக்க முடியுமா என்பது பெரும் சந்தேகத்துக்குரியதே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததோ, இல்லையோ மறுபுறத்தில் விடயங்கள் மளமளவென்று நடந்தேறு கின்றன. கூட்டமைப்பினர் அரசுப் பக்கம் சாய்ந்திருந்தாலும் கூட இவ்வளவு விடயங்களை இவ்வளவு விரைவாக தமது மக்களுக்கு ஒப்பேற்றிக் கொடுத் திருக்க முடியுமா என்பது பெரும் சந்தேகத்துக்குரியதே

.

* வடக்கிற்கான பிரதான பாதை மார்க்கமான "ஏ 9"(கண்டி) வீதி 24 மணி நேரமும் திறந்துவிடப்படுகின் றது. அதுவும் உடனடியாகவே நடைமுறைக்கு வரத்தக் கதாக அந்த மாற்றம். அதுமட்டுமல்ல, சோதனைகள், கெடுபிடிகளின்றி மக்கள் அந்தப் பயணத்தை மேற்கொள் ளலாம் என்ற உறுதி அறிவிப்பு வேறு.

* அடுத்து யாழ். குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருக்கும் பிரதேசங்க ளில் எழுபத்தியைந்து வீதமானவற்றில் மக்கள் மீள் குடியமர அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பு. இது பற்றிய உத்தியோகபூர்வ பிரகடனத்தை நாளை மறு தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து விடுப்பார் என்றும் கூறப்படுகின்றது.

* மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில் ஆயிரம் பேர் உடனடியாக நாளையே விடுவிக்கப்படுவர்.

இப்படி அதிரடி அறிவிப்புகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப் பக்கம் சாய்ந்தமையை அடுத்து அரசுத் தரப்பிலிருந்து அடுக்கடுக்காக வந்தவண்ணம் இருப்பது அதன் பின்னணியைப் புரிந்தால் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இத்தகைய சகாயங்கள் சலுகைகள் பற்றிய தொடர் அறிவிப்புகள் எதிர்வரும் 26 ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு வரை தொடரும் என எதிர்பார்க் கலாம்.

இந்த எல்லாவற்றுக்கும் இப்படிப் பல தீராத பிணி களுக்கு உரிய பரிகாரம் விரைந்து கிட்டியமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு துணிச்சலுடன் மேற்கொண்ட அதிர்ச்சி வைத்தியம்தான் காரணம் பின்னணி என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

இருபது வருடங்களாக ஏதிலிகளாக நலன்புரி மையங் களிலும், அகதி முகாம்களிலும் அவலப்படும் வலி காமம் வடக்கு மக்களின் பிரச்சினையை உயர் பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பால் எழுந்த அவலத்தை உயர் நீதிமன்றத்துக்குப் போயும், அதன் பின்னர் பல தடவை கள் அரசுத் தலைமையுடன் பல மட்டங்களில் பேசியும் கூடத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான சூழ் நிலையை ஏற்படுத்த முடியவில்லை என்பது துலாம் பரமானது.

அண்மையில் இந்த உயர்பாதுகாப்பு வலயப் பிரச் சினையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தாம் நேரில் பேசியபோது தாம் கிளப்பினார் எனவும், ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அதுபற்றிப் பார்க் கலாம் என்ற சாரப்பட ஜனாதிபதி தமக்கு விட்டேத்தியா கப் பதில் தந்தார் எனவும் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட் டார்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று சாவகாசமாகக் கூறப்பட்ட விடயத்தை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆட்சி மாற்றத்துக்காக வாக்க ளிக்கும்படி பகிரங்கமாகக் கோரியதும் மூன்று நாள் களுக்குள் தீர்த்து வைப்பது பற்றிய அறிவிப்பு வந்திருப்பது அதிசயப்பட வேண்டிய அம்சம் அல்ல.

எந்தப் பக்கம் நாமிருந்தாலும் பலகாரம் பரிமாறப் பட்டால் சரி என்ற சாரப்படக் கூறப்பட்டிருக்கும் விடயத் தின் ஆழமான அர்த்தம் இதுதான்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தன்பக்கம் வளைத்துப் போட பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட ஆளும் தரப்பு, அதில் தான் தோற்றுப்போன நிலையில், இப்போது நேரடியாகத் தமிழ்மக்களை இந்தத் தேர்தலில் தனக்குச் சார்பாக வளைத்துப் போடும் எத்தனமாக இத்தகைய அதிரடி அறிவிப்புகளை விடுக்கின்றது என்பதை, அரசி யலில் அரிச்சுவடிப் பாடம் படியாதவனும் இலகுவாக உய்த்துணர்ந்து விட முடியும்.

தேர்தல் கால சகாயங்களாக சிலவற்றை அறிவித்து அதி லிருந்து அரசியல் லாபம் வாக்குவேட்டை ஈட்ட முயற்சிப்பது வெறும் அபத்தமானது.

இவ்வளவு காலமும் செய்யக்கூடியதான தமிழ் மக்களுக்குச் செய்திருக்கவேண்டியதான விடயங்க ளைச் செய்யாமல் தமிழர்களை வதைப்பதில் இன்பம் கண்டபடி இருந்துவிட்டு, இப்போது வாக்கு வேட் டைக்காக இந்தத் "திருகுதாள அறிவிப்புகளை" வெளியிடுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப் பதற்குத் தமிழ்மக்கள் வெறும் முட்டாள்கள் அல்லர்.

என்றாலும், தமிழர்களைப் பொறுத்தவரை இவ் விடயத்தில் யார் சுட்டாலும் பலகாரம் கிடைத்தால் சரிதான்!

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=308:2010-01-08-06-40-49&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

  • கருத்துக்கள உறவுகள்

* வடக்கிற்கான பிரதான பாதை மார்க்கமான "ஏ 9"(கண்டி) வீதி 24 மணி நேரமும் திறந்துவிடப்படுகின்றது. அதுவும் உடனடியாகவே நடைமுறைக்கு வரத்தக்கதாக அந்த மாற்றம். அதுமட்டுமல்ல சோதனைகள் கெடுபிடிகளின்றி மக்கள் அந்தப் பயணத்தை மேற்கொள் ளலாம் என்ற உறுதி அறிவிப்பு வேறு.

* அடுத்து யாழ். குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருக்கும் பிரதேசங்களில் எழுபத்தியைந்து வீதமானவற்றில் மக்கள் மீள் குடியமர அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பு. இது பற்றிய உத்தியோகபூர்வ பிரகடனத்தை நாளை மறு தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து விடுப்பார் என்றும் கூறப்படுகின்றது.

* மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில் ஆயிரம் பேர் உடனடியாக நாளையே விடுவிக்கப்படுவர்.

இதுவொன்றும் இப்போதைக்கு நாம் சந்தோசப்படக்கூடிய செய்திகளில்லை. தேர்தல் முடிந்ததும் ஏ-9 வீதியை மீண்டும் மூடிவிடமுடியாதா? உயர் பாதுகாப்பு வலையத்தை குடியமரலாம் என அறிவித்து பின் அதை தடைசெய்யத்தான் முடியாதா?. இப்போது தேர்தலுக்காக விடுவித்த போராளிகளையும் மீண்டும் சிறைப்பிடிக்கவும் முடியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் செய்யக்கூடியதான தமிழ் மக்களுக்குச் செய்திருக்கவேண்டியதான விடயங்க ளைச் செய்யாமல் தமிழர்களை வதைப்பதில் இன்பம் கண்டபடி இருந்துவிட்டு, இப்போது வாக்கு வேட் டைக்காக இந்தத் "திருகுதாள அறிவிப்புகளை" வெளியிடுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப் பதற்குத் தமிழ்மக்கள் வெறும் முட்டாள்கள் அல்லர்.

என்றாலும், தமிழர்களைப் பொறுத்தவரை இவ் விடயத்தில் யார் சுட்டாலும் பலகாரம் கிடைத்தால் சரிதான்!

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=308:2010-01-08-06-40-49&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

:lol: தேர்தலுக்காக வாக்குறுதிகள் அள்ளி வீசும் பொன்சேகா ஒரு சில வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவான் என்று நம்பும் த.தே.கூ வும் அவர்களைப் பின் தொடரும் தமிழர்களும் மிகவும் "புத்திசாலிகளாகத்" தான் இருப்பீனம் போல! தமிழர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய அடிப்படையான சாப்பாடே இப்ப "ஸ்பெஷல்" பலகாரமாகப் போச்சுது. அப்ப உண்மையான "பலகாரம்' கிடைச்சா இனி ஈழமே கிடைச்ச மாதிரித் தான்! இந்த சிம்பிள் பலகாரத்துக்குப் போய்த் தலைவர் தன்ர குடும்பத்தையும் பலி குடுத்து தானும் செத்து.. எங்க இருந்தாங்கள் இந்த பலகார வியாபாரியள் ஏஜென்டுகள் எல்லாம் அப்ப? :D

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தேர்தலுக்காக வாக்குறுதிகள் அள்ளி வீசும் பொன்சேகா ஒரு சில வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவான் என்று நம்பும் த.தே.கூ வும் அவர்களைப் பின் தொடரும் தமிழர்களும் மிகவும் "புத்திசாலிகளாகத்" தான் இருப்பீனம் போல! தமிழர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய அடிப்படையான சாப்பாடே இப்ப "ஸ்பெஷல்" பலகாரமாகப் போச்சுது. அப்ப உண்மையான "பலகாரம்' கிடைச்சா இனி ஈழமே கிடைச்ச மாதிரித் தான்!

ஜஸ்ரின்,

என்றுமில்லாதவாறு ஜே.வி.பி.யும் யூ.என்.பி.யும் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதால் பொன்சேகா வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். கடந்த காலத்தில் ஆயுதப்போராட்டம் நடந்ததனால் இராணுவக்கெடுபிடி அதிகமாக இருந்தது. மக்கள் வாழ்வு நரகமாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவருகிறது.

இந்த நிலைமையில்:

  • நிறைவேற்றத்தக்க வாக்குறுதிகளை பொன்சேகாவிடம் இருந்து பெற என்ன செய்யலாம்?
  • 'பலகார வியாபாரிகள்" என்று நீங்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகள் தான் இந்த 'சிம்பிள் பலகாரங்கள்" என்று நீங்கள் குறிப்பிடும் அடிப்படை தேவைகளையாவது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கிறார்கள். இதையாவது செய்ய வேறு யார் இருக்கிறார்கள்?
  • இந்த அடிப்படை தேவைகள் கூட அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்க கூடாது என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்த சிம்பிள் பலகாரத்துக்குப் போய்த் தலைவர் தன்ர குடும்பத்தையும் பலி குடுத்து தானும் செத்து.. எங்க இருந்தாங்கள் இந்த பலகார வியாபாரியள் ஏஜென்டுகள் எல்லாம் அப்ப? :D

தலைவரும் குடும்பமும் இறந்து போயிருந்தால், அதனை காரணம் காட்டி அடிப்படை தேவைகள் அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்காமல் தடுப்பது நியாயமற்றது ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.