Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் நாளை வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள்:தொல் திருமாவளவன் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன.

அன்னாருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.

காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும், பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படவிருந்த போதிலும், தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அதனைப் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

“அன்னாரின் மனைவி பார்வதி வேலுப்பிள்ளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். டென்மார்க், கனடா மற்றும் இந்தியாவிலுள்ள பிள்ளைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வரவில்லை.அரசாங்கம் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்” என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் உட்பட 3 பிரமுகர்கள இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக் நேற்று நள்ளிரவு கொழும்பு வந்தடைந்து, இன்று தங்களுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

http://www.nerudal.com

இப்ப தெரியுதா யார் இந்த திருமாளவன் என்று???? ...... ..... தலைவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவில் இருந்து வந்திருக்கிறாராம்!!!!!!!!!!!!! அதுவும் சிங்களம், அவருக்கு இறுதிக்கிரிகையில் பங்குபற்ற சந்தர்ப்பம்/விசா வழங்கியிருக்கிறதாம்!!!!!!!!!!!!????????? .... அரோகரா!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தில் சோ காட்டுறாங்களப்பா! இன்னும் யார் யாரையெல்லாம் முடிக்கப்போறாங்களோ???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் பூதஉடல் தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ‐ நாளை ஊறனியில் தகனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் பூதஉடல் இன்று இலங்கை நேரம் மாலை 5 மணிக்கு வல்வெட்டித்துறையை அடைந்துள்ளது. அங்கு தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களின் அஞ்சில்காக வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல் நாளை ஆலடியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நன்பகல் ஊறனி இந்து பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். நாளை தமிழகத்தில் இருந்தும் சில முக்கியஸ்த்தர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையில் நிபந்தனையின்றி பனாங்கொடை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட வேலுப்பிள்ளையின் மனைவி அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source

இந்தச் செய்திகளுடன் வந்த வீடியோவையும் படங்களையும் இணைக்க முடியவில்லை. மேலே தரப்பட்ட இணைய முகவரியில் சென்று பார்க்கலாம்

இப்ப தெரியுதா யார் இந்த திருமாளவன் என்று???? ...... ..... தலைவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவில் இருந்து வந்திருக்கிறாராம்!!!!!!!!!!!!! அதுவும் சிங்களம், அவருக்கு இறுதிக்கிரிகையில் பங்குபற்ற சந்தர்ப்பம்/விசா வழங்கியிருக்கிறதாம்!!!!!!!!!!!!????????? .... அரோகரா!!!!!!!!!!!!

ஏனண்ணே அவசரப்படுறிங்கள்?

கருணா லண்டன் போக விசா கிடைக்குமா இருந்தால்... டக்கிளஸ் அமேரிக்கா போக விசா கிடைக்குமா இருந்தால்... திருமாவளவன் இலங்கைக்கு போக விசா கிடையாதோ?

பெரியவர் செத்தாப்பிறகு அவற்ற உடலை கொடுத்ததோடு பெரியவரின் துணைவியாரையும் விடுறாங்கள்..

தமிழர்களுக்கு குரான் கொடுப்பதாக காட்டிக்கொண்ட திருமா விசா எடுத்து வரமுடியாதா?

அப்பிடியே விசா எடுக்கக்கூட முடியாத நிலையில் அவரில்லை...

இராசபக்சவே போகலாம் என்றபிறகு திருமா மாத்திரம் போகேலாதோ?

போகாமல் விட்டால் இதுக்கேன்டாலும் வரேலாதோ எண்டு கேட்பிங்கள்... வந்தால் எப்பிடி விசா எண்டு கேட்பியள்? ஆக மொத்தத்தில அவதூறு செயுரதேண்டு முடிவெடுத்தா எறென்ன செய்யலாம்?

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.