Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம்

திகதி: 11.01.2010 // தமிழீழம்

உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தலாம். சிறீலங்கா அரசின் மீது இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் பிரித்தானியா இந்த நடைமுறைகளை கொண்டுள்ளது. பிரித்தானியா அரசு உலகில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய முடியும்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேலிய அரசு காசா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 1,400 பலஸ்த்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் உட்பட பல படை அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் சட்டங்களை போலல்லாது, தமது நாட்டுக்கு வெளியிலும் விசாரணைகளை மேற்கொண்டு தண்டணைகளை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் நடைமுறைப்படுத்த உள்ளது.

பிரான்ஸ் மனித உரிமைகளின் தாயகம். எனவே இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்பவர்களை நாம் பாதுகாக்கப்போவதில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் மற்றும் நீதி அமைச்சர் மைகேல் அலியட் மரியோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரான்ஸ் இன் இந்த அறிவித்தலை பிரான்ஸில் உள்ள தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் அமைப்புக்களின் உதவியுடன் தகவல்களை திரட்டி எதிர்வரும் வாரம் டப்பிளின் நகரில் நடைபெறவுள்ள போர்க்குற்ற விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு தாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2869&cntnt01origid=52&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் மனித உரிமைகளின் தாயகம். எனவே இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்பவர்களை நாம் பாதுகாக்கப்போவதில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் மற்றும் நீதி அமைச்சர் மைகேல் அலியட் மரியோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பெரிதாக எதிர்பார்க்கவேண்டாம்

எமது தள்ளுதலில்தான் எல்லாமே தங்கியுள்ளது

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ.................... ஈராக்கிலும் இப்போ ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொன்று குவிக்கும் உலக சண்டியரை எந்த நீதிமன்றுக்கு யார் கூட்டிசெல்வது? பாயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு நாட்டுக்கு சொந்தமான ஒரு இனத்திற்கு சொந்தமான சொத்துகளை சூறையாட கற்று கொடுப்பவர்களே. நீதிவான்களாக இருப்பதென்பது தமது இரத்த கறை படிந்த கைகளை மறைக்க உதவுமே அன்றி எந்த போர் குற்றவாளியும் இதில் தண்டிக்கபட போவதில்லை. வேண்டுமானால் இவர்களது விரோதிகள் சிலர் இங்கே மிலோசொவிக் போல மாட்டுபடலாம். இந்த கண்துடைப்பு நாடகங்களை ஈழதமிழர் பாhத்துகொண்டிராது ஆகவேண்யதுகளை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்வதே உத்தமம்.

பாகிஸ்தானில் இவ்வளவு நாளும் ஒரு குண்டையும் மக்கள் மீது வைக்காத தலிபான். இப்போது அமெரிக்கா தலிபானை தாக்கும்போதுதான் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கின்றதாம். அதுவும் இத்தனை சிரமப்பட்டு. யார் யாரை விசாரிப்பது என்பதுதான் பிரச்சனையே தவிர. நீதிமன்றங்களை அமைப்பது உண்மையான குற்றவாழிகளை மறைக்கவே உதவுகின்றன. தற்போதைய ஐநா சட்டங்கள் எப்படி இஸ்ரேலின் மனித வேட்டைக்கு துணைபோகின்றனவோ அதுபோலத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.