Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயின் முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தமிழர் தெரிவு

Featured Replies

நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

16 வயதுக்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராகக் கடமைபுரியும் வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது.

பேராசிரியர் தயாளன் 1984 ம் ஆண்டிலிருந்து நோர்வேயில் வசித்து வருபவர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவரான இவர், பேர்கனில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு செயற்பட்டு வருவதோடு, பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அதிபராகவும் சேவையாற்றி வருகிறார்.

இளைய சமூகம் பல்வேறு ஆளுமைகள் கொண்ட வளம்மிக்க சமூகமாக வளரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படும் பேராசிரியர் தயாளன், நோர்வே TECH அமைப்பின் தலைவராகவும் இருந்து, தனது மண் வளம்பெற தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.

பேராசிரியர் தயாளன், பேர்கன் பல்கலைக்கழகத்தின் முதன்மைப் பேராசிரியராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் நோர்வே அரசுக்கு, அங்கு குடியேறியவர்களுக்கான விடயங்களில் ஆலோசனை வழங்கும் KIM அமைப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் நோர்வே கல்வித் திணைக்களத்துக்கான ஆலோசனைக்குழுவிலும், நோர்வேஜிய ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவிலும், மற்றும் வேறு அரச, அரச சார்பற்ற ஆலோசனைக் குழுக்களிலும் பேராசிரியர் தயாளன் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தமிழ்மக்கள், குறிப்பாக மாணவர் சமூகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=163:2010-01-15-05-54-12&catid=34:ceylonnews&Itemid=71

  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுதபிள்ளை தயாளன் அவர்களுக்கு வாழ்த்து(க்)கள்.

தமிழா நீ போகும் இடம் எல்லம் உனக்கு .. இருக்க இடமும்... புகலும் உண்டு.. அனால் உன் தாய் மண்ணில்... உனக்கு என்று ஒரு இடம் கூட இல்லை..

வாழ்த்துக்கள்... வேலாயுதபிள்ளை தயாளன் அவர்களுக்கு .

தமிழருக்கு வெளியே பெருமையும்.

தமிழருக்கு உள்ளே ??????

  • தொடங்கியவர்

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை தலைநிமிர வைத்த தங்களுக்கு என் சிரம் தாழ்த்தி

வணக்கங்கள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.

பேர்கனில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு செயற்பட்டு வருவதோடுஇ பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அதிபராகவும் சேவையாற்றி வருகிறார்.

தமிழ்ப் பணி தொடர, தமிழத்தாய் வாழ்த்துக்கள்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

?/

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.