Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்க் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு ஆதரவு

Featured Replies

லண்டனின் வடமேற்கு பகுதியிலுள்ள ஹரோவில் இருக்கும் இலங்கையரின் பலசரக்குக் கடையொன்றில் தமிழ் பத்திரிகையொன்றை அங்குள்ள விற்பனை உதவியாளர்கள் ஆவலுடன்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம், அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்த ஒருவர் தான் வீட்டிற்குச் சென்று இன்டர் நெற்øறைப் பார்க்கப் போவதாகவும் இலங்கையில் இடம்பெறும் விடயங்களை அறிந்து கொள்ளப்போவதாகவும் கூறினார். புலிகள் அழிக்கப்பட்ட இறுதிக் கட்ட யுத்த நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த பிரிட்டனிலுள்ள தமிழர்கள் மீண்டும் தற்போது இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.

ஜனவரி 26 இல் இடம்பெறும் தேர்தலில் இராணுவ வெற்றியை மூலதனமாக்கிக் கொள்ள தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் முனைந்து நிற்கின்றனர். புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது என்று த எக்கனொமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அநேகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமான நாட்டிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் ஆதரவளித்திருந்தனர். அதற்கான மோதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், புலிகளும் இளப்புகளை சந்தித்தனர் இப்போது தமிழர்களின்தெரிவானது இரு வேட்பாளர்களான ராஜபக்ஷவிற்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையிலானதாகக் காணப்படுகிறது. ராஜபக்ஷ இறுதி யுத்தத்தை ஆரம்பித்தவர். பொன்சேகா இராணுவத்தை வழிநடத்தி யுத்தத்தைச் நடத்திமுடித்தவர்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத நிலையில் உள்ளனர். இரு பிரதான வேட்பாளர்களும் சிங்களத் தேசியவாதிகள் அவர்கள் உறுதிமொழி அளித்திருக்கின்ற போதும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக இருவரும் துரிதமாகச் செயற்படுவார்களென தோன்றாத தன்மையே காணப்படுகிறது. ஆனால், சிங்களவர்களின் வாக்குகள் ராஜபக்ஷவிற்கும் பொன்சேகாவிற்கும் இடையில் பிரிந்து செல்லும் தன்மை காணப்படுகிறது. நாட்டின் சனத்தொகையில் 12 வீதமாகத் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. முன்னர் புலிகளின் சார்பு அமைப்பு என்று கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராஜபக்ஷவைத் தோற்கடிக்க இதுவே ஒரு வழியென தமிழ்க் கூட்டமைப்பு கருதுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் கூறுகின்றனர். அவர்களுக்கு வாக்குகள் இல்லாவிடினும் கூட்டமைப்பின் தீர்மானத்தை அவர்கள் ஆதரித்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எப்போதுமே சக்தியில்லாதவர்களாக இருந்திருக்கவில்லை. கடந்த மே மாதம் வரை தமது சொந்த நாட்டிற்கு அவர்கள் பாரியளவில் ஆதரவை வழங்கி வந்தனர். கனடா, பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அதிகளவில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்கள் அதிகளவிற்கு ஆதரவை வழங்கி வந்தனர். வருடாந்தம் 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் கெரில்லா படையானது ஆயுதங்களைத் திறம்படப் பெற்றுக்கொள்வதற்கு உதவியிருந்தனர்.

1980 களில் தமிழர்கள் பலர் தமது தாயகத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் புலிகளின் கட்டமைப்பு நன்கு விரிவடைந்திருந்தது. இது புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை பல விடயங்களில் கட்டுப்படுத்தியதாகக் காணப்பட்டது. பாடசாலைகள், ஆலயங்கள் உட்பட பல விடயங்களில் புலிகளின் கட்டமைப்பு புலம்பெயர்ந்தவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஹரோ போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட தருணம் அதிகளவிற்கு இதனை உணர முடிந்தது. புலிகளுக்கு ஒவ்வொருவரும் பணம் கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டோம் என்று ஹரோவிலுள்ள இலங்கை சிற்றுண்டிச்சாலையைச் சேர்ந்த 30 வயதான பரிசாரகர் ஒருவர் கூறினார்.

தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு புலிகளின் சில ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். உலக தமிழ் மன்றம் என்ற அமைப்பு ஒன்று நாடு கடந்த அரசாங்கம் ஒன்றிற்கான தேர்தலை நடத்தத் திட்டமிடுவதாகக் கூறுகிறது. உலககளாவிய ரீதியில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற ராகவன் என்பவர் இப்போது லண்டனில் வசித்து வருகிறார்.தற்போது மிதவாதக் கருத்துகளைத் தெரிவிக்கக்கூடியதாக இருப்பதாகவும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அதனை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மிதவாத தமிழர்களின் கருத்துகளை இப்போது இலங்கையிலும் கேட்க முடியுமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறுகிறார். போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அழைப்பு விடுத்து வருவதுடன் அரசியல் தீர்வுக்கான அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமெனவும் அதன் மூலம் இறுதியான சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோருகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் புலிகள் அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக அரசாங்கம் கூறிவந்தது. ஆனால், அது அவ்வாறல்ல, தாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரவை வழங்கி வந்தனர். இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருடன் அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக முன்னேற்றம் காணாமல் நிராகரித்து வருவதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறுகின்றனர். ஆயினும், தேர்தலானது இதனை மாற்றுவதற்கான அறிகுறியை ஏற்படுத்தவில்லை

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=223:2010-01-23-02-51-35&catid=38:2009-12-21-04-39-08&Itemid=72

  • தொடங்கியவர்

பார்க்கலாம்...

இந்த செய்தி சிங்களவர்களுக்கா எழுதப்பட்டது... கிட்டத்தட்ட எக்கணமிக்சினால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிராக சிந்திக்கும் சிங்களவர்களை நோக்கி மகிந்தவுக்கு ஆதரவான இன்னும் ஒரு பொய் பிரச்சாரம்...

மற்றது இராகவன் முன்னாள் புலி...?? எத்தினை வருடத்துக்கு முன்..??

Edited by தயா

  • தொடங்கியவர்

இந்த செய்தி சிங்களவர்களுக்கா எழுதப்பட்டது... கிட்டத்தட்ட எக்கணமிக்சினால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எதிராக சிந்திக்கும் சிங்களவர்களை நோக்கி மகிந்தவுக்கு ஆதரவான இன்னும் ஒரு பொய் பிரச்சாரம்...

மற்றது இராகவன் முன்னாள் புலி...?? எத்தினை வருடத்துக்கு முன்..??

எக்கொனமிஸ்ட் டைமிடம்தான் கேக்கணும்...

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது சொல்லுங்கள் மிதவாதக் கருத்து என்றால் என்ன ?

யாராவது சொல்லுங்கள் மிதவாதக் கருத்து என்றால் என்ன ?

தண்ணி அடிச்சால் மிதக்கிற மாதிரி இருக்குமே... அப்ப என்ன கருத்து எல்லாம் வருகுதோ அதுதான் மிதவாதம்... இன்னும் ஒருவளியிலை சொன்னால் புளிச்சல் ஏவறை , முட்டையிலை புடுங்கிறது எண்டு எல்லாம் இதிலை அடக்கம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.