Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு 2010 ஒரு சாபக்கெடுவா??? சாபக்கேடா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு 2010 ஒரு சாபக்கெடுவா??? சாபக்கேடா???

அனைவருக்கும் வணக்கமெங்க!

தலைப்பை பார்த்தவுடன் நீங்கள் என்னை ஏளனமாகப் பார்ப்பது புரிகிறது, இருந்தும் சில விடயங்களை பகிரவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் இருப்பதினாலும், நானும் ஒரு பங்காளி என்ற உரிமையிலும் சில விடயங்களை கிறுக்க விரும்புகின்றேன்.

முக்கியமாக 2009ம் ஆண்டின் அந்த அவல நிலையைப்பற்றி இயன்றளவு இங்கு முன்னிலைப்படுத்தாது, இன்று இடம்பெறும் அரசியல் பித்தலாட்டங்கள் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய தமிழீழத்தின் நிலை என்ன? வடக்கு, கிழக்கு, வன்னி இப்படி ஒவ்வொரு பகுதிகளையும், அங்குள்ள மக்களின் மனநிலைகள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், இப்படி ஒவ்வொரு விடயத்தையும் அணு, அணுவாக ஆராய்ந்தோமானால் எவருமே எந்தவிதமான தூரநோக்கும் இல்லாதவாறு குறுகிய மனப்பான்மையுடன் ஒரு கேள்விக்குறியாகவே தங்களது வாழ்க்கையை நகர்த்துவது எங்களால் அறிய முடிகின்றது அல்லது உணரமுடிகின்றது.

இதற்குரிய காரணங்கள் என்ன? காரணிகள் யார்? இதற்குரிய காரணங்கள் என்ன என்பதை அறியவேண்டுமாயின் எங்களது சிந்தனைகளை சற்று பின் நோக்கினோமானால் இலகுவாகவே புரிந்து கொள்ளலாம். முக்கியமாக விடுதலைப்புலிகள் ஆயுத பலமாக இருந்தபோது எல்லாத்தரப்பினருமே ஒரு நோக்கம் அல்லது பிடிப்பு கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள்.

எல்லாத்தரப்பினர்கள் என்று கூறும்போது, உதாரனமாக உள்ளூர் அரசியல்வாதிகள், ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இனவாதக்கட்சிகள் அல்லது அமைப்புக்கள், தமிழ்கூட்டமைப்பு, ஒட்டுக்குழுக்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் முக்கியமாக நாங்கள் அவதானிக்க வேண்டியவர்கள் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தான். அன்று அதாவது த.ஈ.வி.புலிகள் ஆயுத பலமாக இருந்த காலத்தில் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அசைவுகளையும் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், எதிர்கருத்துக்களும் இல்லாமல் புகழ்ந்து விலாசித்தள்ளின இந்த விசுவாசிகள் இன்று தலைகீழாக நின்று தேசியத்தலைவரையே விமர்சிக்கும் அளவுக்கு பித்தலாடுகின்றார்கள். இதன் காரனம் விடுதலைப்புலிகளின் மேல் அன்று இருந்த பயத்தினாலா? அல்லது வியாபார நோக்கமா?

இன்று தமிழ்த்தேசியத் தலைமையே ஒரு கேள்விக்குறியாக பல கோணங்களில், பல சிதறல்களாக ஒரு தமிழ் மகனால் எந்தவிதமான முடிவுகளுக்கும் வரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதிற்கான முக்கிய பொறுப்பும் ஊடகத்துறையையே சார்ந்ததாகும்.

தேசியத்தலைவர் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு பகுதியினரும் இல்லை என்ற மறுபகுதியினரும், வட்டுக்கோட்டைத் தீர்மானம் , நாடு கடந்த தமிழீழம் போன்ற சம்பந்தப்பட்ட தரவுகள், அப்படி இப்படி எல்லாம் மக்களுக்கு தெளிவற்ற விளக்கங்களை கொடுத்து எந்தவிதமான தூர நோக்கமும் இல்லாத ஒரு தமிழ் சமூகத்தை உருவாக்குவதிற்கு, தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்பாளர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அல்லது பணத்திற்காகவோ இந்த ஊடகங்கள் ஒத்துப்போகின்றன.

இதில் முக்கியமாக இன்னும் சில மணித்தியாலங்களில் இடம்பெறப்போகும் ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமாக தமிழ் மக்களின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையை அடைவதிற்கும் ஊடகங்களே பொறுப்பாளிகள் ஆகின்றன.

தேர்தல் முடிந்த பின்பு நிலைமைகள் மோசமடைய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளதாக தோன்றுகின்றது.

யுத்தகாலத்தில் இருந்ததை விட இனிவரும் காலங்கள் தமிழ் மக்களிற்கு சோதனை நிறைந்த, ஒரு வேதனையான காலமாக இருக்கவே சந்தர்ப்பங்கள் உள்ளன.

நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கும் விடயங்களை அவதானிக்கும் போதும், நடக்கப்போகும் விடயங்களை ஊகிக்கும்போதும் ஒரு அச்சம் மட்டும் தோன்றுகின்றது, அதாவது ஈழத்தமிழர்களுக்கு இதுவொரு சாபக்கேடா? அல்லது சாபக்கெடுவா??

நன்றி,

வல்வை லிங்கம்.

valvaimainthan@gmail.com

25.01.2010.

Edited by வல்வை லிங்கம்

கேள்விகளுடன் நிறுத்திவிட்டீர்கள் வல்வைமைந்தன். பாராளுமன்ற பதவிகளால் தீர்வினை எட்டமுடியாது என்பது தமிழர் அனைவருக்கும் தெரிந்த வரலாற்று உண்மை. அதன் முடிவாகத்தான் ஆயுதப் போராட்டமும் தோன்றியது. அந்த ஆயுதப் போராட்டத்திற்கே விடுதலைப்புலிகள் உத்தியோக பூர்வமாக மௌனிப்பைக் கொடுத்துவிட்டார்கள். அப்படியானால் இனிவரும் காலங்களில் அரசியல் சார்ந்த விடயமாகத்தானே தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கூட்டமைப்பினருக்குத் தடுமாற்றம் மட்டுமல்ல அழுத்தங்கள் காரணமாகப் பிழவுகளும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் இன்றைய நிலையில் தளத்திலுள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடியவர்கள் கூட்டமைப்பினர்தான். கருத்துக்களில் வேறுபாடுகள் இருப்பினும் தமிழர் என்ற ரீதியில் தற்காலிகமாகவேனும் கூட்டமைப்பினரை ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.

புலத்திலிருந்து எவரும் தமிழர்பற்றிய முடிவுகளை எடுக்க முடியாத நிலையுள்ளது. களத்தில் நடைபெறும் நகர்வுகளைத்தான் புலத்தில் ஆதரிக்க வேண்டியுமுள்ளது. என்னைப் பொறுத்து போராட்டம் மீண்டும் தளம் நோக்கி நகர்துவிட்டதையே காணக் கூடியதாயுள்ளது.

2009 இல் முற்றுப்பெற்ற ஆயுதப் போராட்டம், மீண்டும் அங்கு வேறு உருவில் தேற்றியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போன்றே 2010 நன்மை தரும் ஆண்டாக இருக்க மாட்டாது என்பதுதான் என்முடிவும். இன்னொரு கறுப்பு ஜூலைகளுக்கு இடங்கொடாமல் நகர்ந்து கொண்டிருக்க வேண்டியது இன்றைய தமிழர் நிலை.

கேள்விகள் நல்லவை.இதனால் பல கண்ணோட்டங்கள் வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈழத்தமிழரின் நிலை இனிமேல் மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

காரணம் பேரம் பேசும் அரசில் தலைமை இல்லாமல் இருப்பது,

தமிழனுக்கு ஒன்று நடந்தால், உலகத்தில் ஒரு நாடு கூட ஆதரவாக குரல் கொடுக்க தயாரில்லாமல் இருப்பது போன்றவைகளை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை.

இதே நிலைமையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தத் தவறுவோமானால் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நாம் இலங்கையில் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாமல் போய் விடும் என்பது கசப்பான உண்மை. ஆனால் இதனை பல தமிழர் புரிந்த மாதிரி தெரியவில்லை என்பது வேதனையான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலமை மிகவும் மோசமாகும் என்பதையே கடந்த காலம் எமக்கு காட்டி நிற்கின்றது.அதுவும் தமிழருக்கென்று பலமான அரசியல் தலைமை இல்லாதபோது????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.