Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர்

Tuesday 26th of January 2010 12:29:36 PM

போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.

பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஜோசப் கூசி உயிருடன் எழுந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த அவரிடம் நடந்த விஷயங்களை கூறினார்கள்.

பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இதுபற்றி கூறிய ஜோசப் கூசி, நான் உயிர் பிழைத்தது ஒரு பானை தேனை சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பியது போல இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.

-நன்றி மாலைமலர்

Back E-Mail an article

http://www.tamilsguide.com-நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.

செத்தவீட்டு.... ஒப்பாரி சத்தத்துக்குள், யோசப் கூசியின் முனகல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்டது அதிசயம் தான்.

அது சரி..... யோசப் கூசிக்கு மரணச்சான்றிதழ் கொடுத்த, டாக்குத்தர் இன்னும் அந்த ஆஸ்பத்திரியிலை தானா வேலை செய்யுறார்? :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ் ஸ்ரீ

டாக்குத்தருக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை.செய்திகளைத் தேடினால் தகவல் கிடைக்கும் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தவீட்டு.... ஒப்பாரி சத்தத்துக்குள், யோசப் கூசியின் முனகல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்டது அதிசயம் தான்.

அது சரி..... யோசப் கூசிக்கு மரணச்சான்றிதழ் கொடுத்த, டாக்குத்தர் இன்னும் அந்த ஆஸ்பத்திரியிலை தானா வேலை செய்யுறார்? :)

சிறித்தம்பி!

போலந்து

இந்தியாவைவிட கேவலமான நாடு

பஞ்சப்பரதேசியள் உள்ள நாடு

ஐரோப்பிய யூனியனுக்கை உள்ளுட்டபிறகும்

மகிந்தமாதிரி சண்டித்தனமாய் கடன்வாங்கி தின்னுற நாட்டுக்காரங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.