Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி விடுதலை:சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்;

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nalini_301.jpg

நளினி விடுதலை:சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி!

February 15th, 2010Save & Share

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.

நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்லர் என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திரா காந்தியை, சீக்கியர்களின் புனிதத்தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாகப் போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள் இன்றும் போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள் என சீக்கியர்களின் அதி உயர் பீடமான ‘அகால் தக்கட்’ அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆந் திகதி பட்டம் சூட்டிக் கௌரவித்தது. பியாந்த் சிங் உள்ளிட்டோரின் நினைவாக, சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31, 2008 அன்று ‘தியாகிகள் தினம்’ கடைபிடித்தது.தற்போது, நியூசிலாந்தில் அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில், இவர்களுக்குப் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே போன்று, இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு, இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலில் அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட ஆதாரத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த சனியன்று(13.02.2010) சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.

தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற சீக்கியர்களை அவ்வின மக்கள், இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தமிழகக் காங்கிரஸார் இன்றும் ‘அன்னை’ என்று போற்றுகின்ற இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும் அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி.

ஆனால், இன்னொருபுறத்தில், ராஜீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக நளினியை அவரது குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட எண்ணாமல், சாகும் வரை சிறைவைக்கக் கூறும் காங்கிரஸாரின் நிலை, பாரபட்சமானது.

இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, தமிழக மக்கள் ராஜீவ் காந்தி கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர்.

இருந்தபோதும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக சீறாமல், தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்? சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர் இயக்கம் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இவர்போன்றவர்களைத் தெருவில் காணும்போது கலைத்துக் கலைத்துக் கல்லால் தமிழக மக்கள் துரத்தியடிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அருவருப்பான சாக்கடை அரசியல்வாதிகள் திருந்துவார்கள்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வற்ற தனக்குத்தானே 'தமிழினத்தலைவன்' என்று பெயர் சூட்டிய தமிழகமுதல்வர் ஆமா போடும் போது தமிழர்களுக்கு எங்கே நியாயம் கிடைக்கப் போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரா கொலையாளிகள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு நியூசி. குருத்வாராவில்

கெளரவம்

வெலிங்டன்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற பியாந்த்

சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோரை தியாகிகளாக அறிவித்து

நியூசிலாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கெளரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது மெய்காவலர்களால் சுட்டுக்

கொல்லப்பட்டார். அவர்களை பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங்

ஆகியோர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் அவரது உடலில் சுமார் 30 குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தார்

இந்திரா. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், ரத்தத்தை

பெருமளவில் (ஓ நெகட்டிவ்) இழந்ததால், அந்த ரத்தம் கிடைக்காததால்

உயிரிழந்தார் இந்திரா காந்தி.

இந்திராவைக் கொன்ற சத்வந்த் சிங், பியாந்த் சிங் ஆகியோரை பாதுகாப்புப்

படையினர் சுட்டுக் கொன்றனர். கேகர் சிங் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்குப் பின்னர்

தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து

நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில், தியாகிகளாக அறிவிக்கப்பட்டு

கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் குருத்வாராவில் வைக்கப்பட்டு மாலை அணிவித்து

மரியாதையும் செய்யப்பட்டது.

இதுகுறித்து குருத்வாரா நிர்வாகிகள் கூறுகையில், இந்திராவை கொன்றவர்கள்

மதத்துக்காக தங்கள் உயிரை விட்டுள்ளனர். எனவே அவர்களை தியாகிகளாக நினைவு

கூர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2010/02/13/indira-gandhi-s-assassins-honored.html

முத்தமிழ் வேந்தன்

சென்னை

சிறுபான்மை இனத்தினரின் அபிலாசைகள் எல்லாம் புலத்தில தான் நிறைவேற்றப்படுகின்றன.

எங்களைப்போல அவர்களும் புலத்தில தங்களது மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தமிழ் வேந்தன்: முதலில் தமிழர்களை அழிக்கத் துணைபோகும் கருணாநிதி மற்றும் ஊடகங்களை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தாது எந்த மாற்றமும் வராது. மானாட மசிராட என்ற தமிழகம் மாற்றத்தைக்கான வாய்ப்பே இல்லை. திரைத்துறை கூடத் தமிழரிடம் இல்லை. தமிழிச்சியில்லாத குஸ்பு தமிழ்க்காணொளி அறிவிப்பாளர். இப்படியான நாற்றங்களை மக்கள் மத்தியில் வெளிக்கொணருங்கள். தமிங்கிலம் பேசுவதை தவறென்ற பரப்புரையை முன்னெடுங்கள். கருத்தியல் மாற்றமானது முதலில் இந்தத் தளங்களை உடைப்பதாக அமைய வேண்டும். தமிழிலே பற்றில்லாத இனம் எப்படித் தமிழைப் பாதுகாக்க முடியும். உங்களால் முடியுமா? தமிழகத்தில் தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த "மாவீரன்" முத்துக்குமாருக்கு ஒரு சிலையை, ஏன் சிலை அவர் இறந்த இடத்தில் ஒரு நடுகல்லை நடுங்கள் பார்க்கலாம். நாமும் எமது ஆதரவைத் தருகின்றோம். முடியுமா? 7 கோடித்தமிழரால் முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.