Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது - சிறீலங்கா அறிவிப்பு

Featured Replies

தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது - சிறீலங்கா அறிவிப்பு

திகதி: 01.03.2010 // தமிழீழம்

சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10,000 இற்கும் மேற்பட்ட போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, சிறீலங்கா படையினர் உத்தியோகபூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளனர்.

போராளிகளையும், பொதுமக்களையும் சிறீலங்கா அரசு முற்றாக விடுதலை செய்ய வேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் அழுத்தத்திற்கு அடி்பணியாத அரசு, அவ்வப்பொழுது ஒவ்வொரு காரணங்களைக்கூறி, இவர்களின் விடுதலையை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, சிறீலங்கா படைகளின் புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பொறுப்பான படை அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,732 பேரில் 1,072 பேர் 3 மாதங்களுக்கு குறைவாகவே விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்திருப்பதாகவும், 876 பேர் 6 மாதங்கள் அங்கம் வகித்திருப்பதாகவும், மேலும் ஆயிரம் வரையிலானோர் ஒரு வருடங்கள்வரை உறுப்பினர்களாக இருந்திருப்பதாகவும், 10,732 போராளிகளில் 1,990 பேர் பெண் போராளிகள் எனவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜுன் மாத காலப் பகுதிகளில் 14,000 வரையிலான போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, தற்பொழுது 10,732 பேர் மட்டுமே தடுப்புக் காவலில் இருப்பதாகக் கூறி வருகின்றமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அது மட்டுமன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளைப் பராமரிக்க ஒரு மாதத்திற்கு 88 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, தமிழ் வர்த்தகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடம் நிதி சேகரிக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3815&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

இழுத்தடிப்பிற்கு இந்தியாவும் உதவும். பராமரிப்பிற்கு தமிழரிடம் பணம் பறிப்பு, இதெல்லாம் தமிழரை முழுவதுமாக அழுத்தங்களைக் கொடுத்து செயலிழக்கச் செய்வதுதான். விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்லும் தமிழரிடம் பணப்பறிப்பில் ஈடுபடுகிறார்களாம். வெளுpநாடுகள் இவ்வளவு சொல்லியும் மசியாதவர்கள், யார் சொன்னால் இனிக் கேட்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள், மார்ச் 1, 2010 05:32 | கோகுலவதனன். வவுனியா

முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் முடியாது! பராமரிக்க நிதியும் போதாது! என்கிறது சிறீலங்கா அரசு

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பல நாட்டு உதவியுடன் அழித்து, கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பராமரிக்க தம்மிடம் இருக்கும் நிதி போதாது என சிறீலற்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதானத்த றணசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் இவர்களுக்கு உதவியளிக்க மாத்திரம் மாதம் 88 மில்லியன் ரூபாய்களை செலவழிப்பதாக தெரிவித்துள்ள அவர் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்க உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க தமக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் அவர்களிடம் புரையோடிப்போயுள்ள போராட்ட குணத்தை மாற்றி அமைக்க இன்னும் காலம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தாம் தடுத்து வைத்துள்ள 10,000 க்கு மேற்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையானவர்கள் சிறிய கால எல்லையில் தான் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் ஆனால் நீண்ட கால உறுப்பினர்களையும் அவர்களின் மன நிலையையும் மாற்ற இன்னும் கால தாமதம் தேவை என்பதால் அவர்களை விடுவிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

கூட்டமைப்பை கூப்பிட்டு கையில காலில விழுந்து விடுதலை செய்ய சொல்லுவம். அப்பிடி செய்யமுடியாவிட்டால் துரோகிப்பட்டம் கொடுப்பம்.

எதிர்மறையான விளைவுகளுக்கு வித்திடப்படுகிறது. தர்மம் வெல்லவேண்டும் தானே!

  • தொடங்கியவர்

கூட்டமைப்பை கூப்பிட்டு கையில காலில விழுந்து விடுதலை செய்ய சொல்லுவம். அப்பிடி செய்யமுடியாவிட்டால் துரோகிப்பட்டம் கொடுப்பம்.

அப்படி செய்ய முடியாவிட்டால் இல்லை முயலா விட்டால் எண்று மாற்றி கொள்ளுங்கள்... செய்ய முயலாமைக்கு ஏதாவது காரணத்தை உங்களால் காட்ட முடியுமா...?? போராளிகளை மட்டும் இல்லை பொது மக்களையும் இதுக்குள் சேர்த்து கொள்ளுங்கள்...

அப்படி செய்ய முடியாவிட்டால் இல்லை முயலா விட்டால் எண்று மாற்றி கொள்ளுங்கள்... செய்ய முயலாமைக்கு ஏதாவது காரணத்தை உங்களால் காட்ட முடியுமா...?? போராளிகளை மட்டும் இல்லை பொது மக்களையும் இதுக்குள் சேர்த்து கொள்ளுங்கள்...

நான் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை விட முடியாது காரணமும் காட்ட முடியாது... ஆனால் ஒன்ருமாத்திரம் சொல்லமுடியும்.. அதாவது இவ்வளவு மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்த கூட்டமைப்பு நாசமாப்போக.

**குறிப்பு** ஏன் முடியவில்லை முயவில்லை என்பதற்கான கேள்வி நீங்கள் இணைத்த செய்தியில் இருந்தே எழுந்தது.

  • தொடங்கியவர்

நான் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை விட முடியாது காரணமும் காட்ட முடியாது... ஆனால் ஒன்ருமாத்திரம் சொல்லமுடியும்.. அதாவது இவ்வளவு மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்த கூட்டமைப்பு நாசமாப்போக.

**குறிப்பு** ஏன் முடியவில்லை முயவில்லை என்பதற்கான கேள்வி நீங்கள் இணைத்த செய்தியில் இருந்தே எழுந்தது.

ஏன் முடியவில்லை என்பதுக்கான பதிலை உங்களுக்கு வரலாறு கூட தரவில்லை எண்றால் என்னால் முடியாது... இப்போது கூட்டமைப்பில் இருப்பவர்களின் கடந்த கால தனிப்பட்ட செயற்பாடுகள் கூட உங்களின் மறதி வியாதியால் நலன் அடைந்து இருக்கிறார்கள் எண்று அர்த்தம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் முடியவில்லை என்பதுக்கான பதிலை உங்களுக்கு வரலாறு கூட தரவில்லை எண்றால் என்னால் முடியாது... இப்போது கூட்டமைப்பில் இருப்பவர்களின் கடந்த கால தனிப்பட்ட செயற்பாடுகள் கூட உங்களின் மறதி வியாதியால் நலன் அடைந்து இருக்கிறார்கள் எண்று அர்த்தம்...

குமார் பொன்னம்பலம் வட்டுக்கோட்டைதீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவர் என்பதை நீங்களும் வசதிக்காக மறந்துவிடுகிறீகள். :lol::lol:

  • தொடங்கியவர்

குமார் பொன்னம்பலம் வட்டுக்கோட்டைதீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவர் என்பதை நீங்களும் வசதிக்காக மறந்துவிடுகிறீகள். :D:D

தரவு சரியானதா...?? முதலில் நீங்கள் சரி பாருங்கள்... :lol::lol::D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

தமிழர் விடுதலை கூட்டணியின் கூட்டணியில் தமிழ் காங்கிரஸ் வட்டுகோட்டை தீர்மானத்தின் போது கூடவே இருந்தது... 1977 ம் ஆண்டு கூட்டணியில் குமார் பொன்னம்பலம் அவர்கள் போட்டி இடாததுக்கு காரணம் இப்போது உள்ள காரணம் போண்றது... அவர் யாழ்ப்பாண தொகுதியில் போட்டி இட கேட்ட போது அது மறுக்க பட்டு அவருக்கு வட்டுகோட்டை தொகுதியை ஒதுக்கினர்... அதோடு ஏற்பட்ட சில அவமரியாதைகள் காரணமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி இட்டார்..

அவர் வட்டுகோட்டை தீர்மானம் ஏற்படுத்திய போது தமிழர் விடுதலை கூட்டணியில் உறுப்பு கட்ச்சியாக இருந்தார்... 1977ம் ஆண்டு தேர்தலின் பின்பு தமிழ் காங்கிரஸ் கூட்டணியின் உறுப்பு கட்ச்சியாகவே தொடர்ந்தது..

Edited by தயா

ஏன் முடியவில்லை என்பதுக்கான பதிலை உங்களுக்கு வரலாறு கூட தரவில்லை எண்றால் என்னால் முடியாது... இப்போது கூட்டமைப்பில் இருப்பவர்களின் கடந்த கால தனிப்பட்ட செயற்பாடுகள் கூட உங்களின் மறதி வியாதியால் நலன் அடைந்து இருக்கிறார்கள் எண்று அர்த்தம்...

எனக்கு மறதிவியாதி இருப்பது என்னவோ உண்மைதான்... ஆனாலும் இறுதியாக கொல்லப்பட்ட மக்களின் அவலம்தான் அடிக்கடி நினைவுக்கு வருது.

நேற்று நடந்தாலும் வரலாறுதான்...

  • தொடங்கியவர்

எனக்கு மறதிவியாதி இருப்பது என்னவோ உண்மைதான்... ஆனாலும் இறுதியாக கொல்லப்பட்ட மக்களின் அவலம்தான் அடிக்கடி நினைவுக்கு வருது.

நேற்று நடந்தாலும் வரலாறுதான்...

ஆனால் இண்றும் சனம் அவலத்தில் இருக்கிறது அதை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கைக்குள் வர வளைக்க எதுவும் செய்யாதவர்களுக்கு பின்னாலை நிற்பது அதுகூட உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா எனும் சந்தேகத்தை வரவளைக்கிறது...

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் இண்றும் சனம் அவலத்தில் இருக்கிறது அதை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கைக்குள் வர வளைக்க எதுவும் செய்யாதவர்களுக்கு பின்னாலை நிற்பது அதுகூட உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா எனும் சந்தேகத்தை வரவளைக்கிறது...

நன்றி தயா

உங்களுக்குச் சரியென்று பட்டத்தை நீங்கள் செய்யுங்கள்... நான் எனக்குச் சரியென்று பட்டத்தை செய்கின்றேன்.

நான் என்றும் அரசியல் வாதிகளை நம்பியதில்லை... அந்த மக்களுக்கு என்னால் செய்யக்கூடியதை என்னால் முடிந்த அளவுக்குச் செய்வேன். அதுக்கு நான் ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவு தரவேண்டுமென்றில்லை.

நான் இதுவரை வாதித்ததெல்லாம் கூட்டமைப்புக்காகவும் இல்லை சம்பந்தருக்காவவும் இல்லை... ஒவ்வொரு காரணத்துக்காகவும் ஒவ்வொரு சூழலில் எங்களின் ஒற்றுமை குலைக்கப்படுவதை தான் நான் சுட்டிக்காட்ட முயன்றேன். கூட்டமைப்போ சம்பந்தரோ சரியென்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒற்றுமையை உடைப்பதைத்தான் முதன்மையாக எதிர்த்தேன்.

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை உடைத்தது தவறு...

இரண்டாவது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் வரலாம்.. இருந்தாலும் தலைமையை மாற்றியாவது கூட்டமைப்பை கூட்டமைப்பாகவே வைத்திருந்திருக்கலாம் தானே?

தமது அமைப்புக்குள்ளேயே ஒற்றுமையைப் பேணாதவர்கள் தனித்து நின்று போட்டிபோட்டு வென்றால் யாருடன் யார் சேர்ந்து வேலைசெய்வார்கள்? ஆப்படி வேலைசெய்யாவிடால் அதனால் பாதிக்கப்படப் போவது யாரு?

இவ்வாறு தமிழ் மக்களின் ஒற்றுமை உடைவதால் யாருக்கு நன்மை? அல்லது உடைவதால் தேசியம் பாதுக்காக்கபடுமாக இருந்தால் இனிமேல் அது பாதுக்காக்கப்படும்.

செய்தி சொல்லப்பட்டவிடயம் என்னவென்றால் போராளிகளை விடுதலை செய்ய அரசாங்கம் மறுத்துவிட்டது என்பதுதான்.

கூட்டமைப்பு முயற்சி செய்யவில்லை என்பது உங்களின் வாதம். சரி கூட்டமைப்பு முயன்றிருந்தால் இதெல்லாம் நடக்குமென்று நீங்கள் நினைக்கும்போது கூட்டமைப்பு செய்யாமல் விட்டது பிழைதான்.

உங்களின் கருத்துக்களில் இருந்து பல விடயங்களை ஊகிக்க முடிந்தது... நன்றிகள்.

இதை இத்துடன் முடிக்கவே நான் விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரவு சரியானதா...?? முதலில் நீங்கள் சரி பாருங்கள்... :lol::lol::lol:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

தமிழர் விடுதலை கூட்டணியின் கூட்டணியில் தமிழ் காங்கிரஸ் வட்டுகோட்டை தீர்மானத்தின் போது கூடவே இருந்தது... 1977 ம் ஆண்டு கூட்டணியில் குமார் பொன்னம்பலம் அவர்கள் போட்டி இடாததுக்கு காரணம் இப்போது உள்ள காரணம் போண்றது... அவர் யாழ்ப்பாண தொகுதியில் போட்டி இட கேட்ட போது அது மறுக்க பட்டு அவருக்கு வட்டுகோட்டை தொகுதியை ஒதுக்கினர்... அதோடு ஏற்பட்ட சில அவமரியாதைகள் காரணமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி இட்டார்..

அவர் வட்டுகோட்டை தீர்மானம் ஏற்படுத்திய போது தமிழர் விடுதலை கூட்டணியில் உறுப்பு கட்ச்சியாக இருந்தார்... 1977ம் ஆண்டு தேர்தலின் பின்பு தமிழ் காங்கிரஸ் கூட்டணியின் உறுப்பு கட்ச்சியாகவே தொடர்ந்தது..

உண்மையில் அவர் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்று கொண்டிருந்தால் தனித்து நின்ற போது அதற்க்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்க மாட்டார், தனது வெற்றிக்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர். எப்படி அதனை ஏற்று கொண்டவராக கருதபடுவார். :D

எப்போது எல்லாம் தமிழர்கள் ஒற்றுமைபடுகிரார்களோ அப்போது எல்லாம் கட்சியை உடைப்பதே தமிழ் காங்கிரசின் வேலை, அப்போது தமிழர்கள் இவர்களை தோற்கடித்து போல், இந்த முறையும் தோற்படிப்பர், தலைமை சரியில்லாது விட்டால் தலைமையை மாற்ற போராட வேண்டுமே ஒளிய கட்சியை உடைக்க கூடாது, இதை இணைக்க சிவராம் தன்னையே கொடுத்து இருகிறார்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா

நான் என்றும் அரசியல் வாதிகளை நம்பியதில்லை... அந்த மக்களுக்கு என்னால் செய்யக்கூடியதை என்னால் முடிந்த அளவுக்குச் செய்வேன். அதுக்கு நான் ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவு தரவேண்டுமென்றில்லை.

நான் இதுவரை வாதித்ததெல்லாம் கூட்டமைப்புக்காகவும் இல்லை சம்பந்தருக்காவவும் இல்லை... ஒவ்வொரு காரணத்துக்காகவும் ஒவ்வொரு சூழலில் எங்களின் ஒற்றுமை குலைக்கப்படுவதை தான் நான் சுட்டிக்காட்ட முயன்றேன். கூட்டமைப்போ சம்பந்தரோ சரியென்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒற்றுமையை உடைப்பதைத்தான் முதன்மையாக எதிர்த்தேன்.

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை உடைத்தது தவறு...

இரண்டாவது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் வரலாம்.. இருந்தாலும் தலைமையை மாற்றியாவது கூட்டமைப்பை கூட்டமைப்பாகவே வைத்திருந்திருக்கலாம் தானே? தமது அமைப்புக்குள்ளேயே ஒற்றுமையைப் பேணாதவர்கள் தனித்து நின்று போட்டிபோட்டு வென்றால் யாருடன் யார் சேர்ந்து வேலைசெய்வார்கள்? ஆப்படி வேலைசெய்யாவிடால் அதனால் பாதிக்கப்படப் போவது யாரு? இவ்வாறு தமிழ் மக்களின் ஒற்றுமை உடைவதால் யாருக்கு நன்மை? அல்லது உடைவதால் தேசியம் பாதுக்காக்கபடுமாக இருந்தால் இனிமேல் அது பாதுக்காக்கப்படும்.

கூட்டமைப்பு முயற்சி செய்யவில்லை என்பது உங்களின் வாதம். சரி கூட்டமைப்பு முயன்றிருந்தால் இதெல்லாம் நடக்குமென்று நீங்கள் நினைக்கும்போது கூட்டமைப்பு செய்யாமல் விட்டது பிழைதான்.

இதை இத்துடன் முடிக்கவே நான் விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சூறாவளி தங்கள் நேரத்திற்கு...

என் கருத்தும் 100 வீதம் இதுதான்

நானும் எங்கும் எப்போதுமே சம்பந்தர் பற்றியோ வேறு எவர் பற்றியோ எழுதவில்லை

தமிழர் தேசியக்கூட்டமைப்பு பற்றியே எழுதுகின்றேன்

கரிசனை கொள்கின்றேன்

அதேநேரம் அதன் உறுப்பினர் எவர்மீதும் எந்த நேரத்திலும் தாக்கி எழுதியதில்லை.

எழுதவும் மாட்டேன்

ஏனெனில் ஒற்றுமையை நான் முதலில் தொடக்கவேண்டும்.

ஆனால் தயாவுக்கு இந்த உடைப்பில் பெரும்பங்குண்டு.

மீண்டும் ஆளுக்கொரு கட்சி, குழு, ஆயுதம்... என்று வெளிக்கிட்டால்...

இனி நடக்கப்போகும் அநியாயங்கள் எமது தலையிலேயே லாவகரமாக சுமத்தப்படும் என்ற கனதிகூட புரியாமல் எழுதுகின்றார்.

இது தனிப்பட்ட தாக்குதலாயின் எடுத்துவிடவும்.

ஆனால் மிகவும் பொறுமை இழந்தே எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தயா

உங்களுக்குச் சரியென்று பட்டத்தை நீங்கள் செய்யுங்கள்... நான் எனக்குச் சரியென்று பட்டத்தை செய்கின்றேன்.

நான் என்றும் அரசியல் வாதிகளை நம்பியதில்லை... அந்த மக்களுக்கு என்னால் செய்யக்கூடியதை என்னால் முடிந்த அளவுக்குச் செய்வேன். அதுக்கு நான் ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவு தரவேண்டுமென்றில்லை.

நான் இதுவரை வாதித்ததெல்லாம் கூட்டமைப்புக்காகவும் இல்லை சம்பந்தருக்காவவும் இல்லை... ஒவ்வொரு காரணத்துக்காகவும் ஒவ்வொரு சூழலில் எங்களின் ஒற்றுமை குலைக்கப்படுவதை தான் நான் சுட்டிக்காட்ட முயன்றேன். கூட்டமைப்போ சம்பந்தரோ சரியென்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒற்றுமையை உடைப்பதைத்தான் முதன்மையாக எதிர்த்தேன்.

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை உடைத்தது தவறு...

இரண்டாவது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் வரலாம்.. இருந்தாலும் தலைமையை மாற்றியாவது கூட்டமைப்பை கூட்டமைப்பாகவே வைத்திருந்திருக்கலாம் தானே?

தமது அமைப்புக்குள்ளேயே ஒற்றுமையைப் பேணாதவர்கள் தனித்து நின்று போட்டிபோட்டு வென்றால் யாருடன் யார் சேர்ந்து வேலைசெய்வார்கள்? ஆப்படி வேலைசெய்யாவிடால் அதனால் பாதிக்கப்படப் போவது யாரு?

இவ்வாறு தமிழ் மக்களின் ஒற்றுமை உடைவதால் யாருக்கு நன்மை? அல்லது உடைவதால் தேசியம் பாதுக்காக்கபடுமாக இருந்தால் இனிமேல் அது பாதுக்காக்கப்படும்.

செய்தி சொல்லப்பட்டவிடயம் என்னவென்றால் போராளிகளை விடுதலை செய்ய அரசாங்கம் மறுத்துவிட்டது என்பதுதான்.

கூட்டமைப்பு முயற்சி செய்யவில்லை என்பது உங்களின் வாதம். சரி கூட்டமைப்பு முயன்றிருந்தால் இதெல்லாம் நடக்குமென்று நீங்கள் நினைக்கும்போது கூட்டமைப்பு செய்யாமல் விட்டது பிழைதான்.

உங்களின் கருத்துக்களில் இருந்து பல விடயங்களை ஊகிக்க முடிந்தது... நன்றிகள்.

இதை இத்துடன் முடிக்கவே நான் விரும்புகிறேன்.

கூட்டமைப்பை உருவாக்கியது புலிகள் இல்லை எண்று டேவிட் நிராஜ் என்பவரின் கட்டுரை இங்கு இருந்ததே.?

தமிழ் மக்களின் இண்றைய முழுமையான இன்னல்களுக்கும் காரணம் இந்தியா. அந்த இந்தியாவின் அடிவருடித்தனம் இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் ஆதரவு அவ்வளவுதான். ஒற்றுமை எனும் பெயரால் அடிமைத்தனத்தை மீள விதைக்காதீர்கள்.

Edited by ஆறுமுகம்

  • தொடங்கியவர்

ஏனெனில் ஒற்றுமையை நான் முதலில் தொடக்கவேண்டும்.

ஆனால் தயாவுக்கு இந்த உடைப்பில் பெரும்பங்குண்டு.

மீண்டும் ஆளுக்கொரு கட்சி, குழு, ஆயுதம்... என்று வெளிக்கிட்டால்...

இனி நடக்கப்போகும் அநியாயங்கள் எமது தலையிலேயே லாவகரமாக சுமத்தப்படும் என்ற கனதிகூட புரியாமல் எழுதுகின்றார்.

இது தனிப்பட்ட தாக்குதலாயின் எடுத்துவிடவும்.

ஆனால் மிகவும் பொறுமை இழந்தே எழுதுகின்றேன்.

:D:lol: :lol:

உண்மையை ஆரம்பந்தில் இருந்து சொன்னால் காரணம் நானாம்....

இந்தியாவின் சொல்லுக்கு இணங்க கூட்டமைப்பில் இருந்து உறுப்பினர்களை தூக்கி எறிஞ்சு பந்தாடி அவமானப்படுத்திய சம்பந்தருக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை பாருங்கோ...

ஒரு நல்ல தலைவனுக்கு உரிய சிறப்பு பண்பு என்ன தெரியுமா...??

Edited by தயா

  • தொடங்கியவர்

நன்றி தயா

உங்களுக்குச் சரியென்று பட்டத்தை நீங்கள் செய்யுங்கள்... நான் எனக்குச் சரியென்று பட்டத்தை செய்கின்றேன்.

நான் என்றும் அரசியல் வாதிகளை நம்பியதில்லை... அந்த மக்களுக்கு என்னால் செய்யக்கூடியதை என்னால் முடிந்த அளவுக்குச் செய்வேன். அதுக்கு நான் ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவு தரவேண்டுமென்றில்லை.

நான் இதுவரை வாதித்ததெல்லாம் கூட்டமைப்புக்காகவும் இல்லை சம்பந்தருக்காவவும் இல்லை... ஒவ்வொரு காரணத்துக்காகவும் ஒவ்வொரு சூழலில் எங்களின் ஒற்றுமை குலைக்கப்படுவதை தான் நான் சுட்டிக்காட்ட முயன்றேன். கூட்டமைப்போ சம்பந்தரோ சரியென்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒற்றுமையை உடைப்பதைத்தான் முதன்மையாக எதிர்த்தேன்.

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை உடைத்தது தவறு...

இரண்டாவது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் வரலாம்.. இருந்தாலும் தலைமையை மாற்றியாவது கூட்டமைப்பை கூட்டமைப்பாகவே வைத்திருந்திருக்கலாம் தானே?

தமது அமைப்புக்குள்ளேயே ஒற்றுமையைப் பேணாதவர்கள் தனித்து நின்று போட்டிபோட்டு வென்றால் யாருடன் யார் சேர்ந்து வேலைசெய்வார்கள்? ஆப்படி வேலைசெய்யாவிடால் அதனால் பாதிக்கப்படப் போவது யாரு?

இவ்வாறு தமிழ் மக்களின் ஒற்றுமை உடைவதால் யாருக்கு நன்மை? அல்லது உடைவதால் தேசியம் பாதுக்காக்கபடுமாக இருந்தால் இனிமேல் அது பாதுக்காக்கப்படும்.

செய்தி சொல்லப்பட்டவிடயம் என்னவென்றால் போராளிகளை விடுதலை செய்ய அரசாங்கம் மறுத்துவிட்டது என்பதுதான்.

கூட்டமைப்பு முயற்சி செய்யவில்லை என்பது உங்களின் வாதம். சரி கூட்டமைப்பு முயன்றிருந்தால் இதெல்லாம் நடக்குமென்று நீங்கள் நினைக்கும்போது கூட்டமைப்பு செய்யாமல் விட்டது பிழைதான்.

உங்களின் கருத்துக்களில் இருந்து பல விடயங்களை ஊகிக்க முடிந்தது... நன்றிகள்.

இதை இத்துடன் முடிக்கவே நான் விரும்புகிறேன்.

புலிகள் தான் உருவாக்கினர் என்பது தவறு... சரி புலிகள் தான் கூட்டமைப்பை உருவாக்கி தங்களின் வேலைகளை செய்தார்கள் எண்றால், கடைசிகாலங்களில் புலிகள் ஏன் கிசோருடன் தொடர்பில் இருந்தனர்...?? சம்பந்தனுடன் இருந்து இருக்கலாமே...??? கிசோர்தான் கூட்டமைப்பின் தலைமையா...??

ஒற்றுமை எனும் கோசத்துக்குள் நீங்கள் சொல்பவர்கள் எதை சாதிக்க போகிறார்கள்....???

குறைந்தது புலம்பெயர்ந்தவர்களையாவது ஒருங்கிணைக தயாராக இருக்கிறார்களா...?? அல்லது புலம்பெயர் உதவியோடு தமிழ் மக்களுக்குள் இறங்கி உதவி செய்ய குறைந்தது ஒரு தொண்டு நிறுவன கட்டமைப்பையாவது நிறுவ நடவடிக்கை எடுப்பார்களா...??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.