Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அகதிகள் மீது அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து

வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் 15 பேரை பிணையில் விடுவிக்க சென்னை

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள்,

தங்களை விசாரணை செய்து, விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம்

2ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் இந்த அகதிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல்

மிகவும் பரபரப்பானது. இச் சம்பவம் தொடர்பில், ஈழத் தமிழ் அகதிகள் 15

பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைக்கு

கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ஈழத் தமிழ் அகதிகள்

15 பேரும், தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை உயர்

நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில், "எங்கள் மீதான விசாரணையைத்

துரிதப்படுத்தி, எங்கள் விடுதலைக்கு ஆவண செய்யுமாறு, நீண்டகாலமாகக் கோரிய

வண்ணம் உள்ளோம். இதனை வலியுறுத்தியே உண்ணாவிரதப் போராட்டம்

மேற்கொண்டோம். போலீஸ் எஸ்.பி. பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவலர்கள்

எங்களுடைய போராட்டத்தை அடக்கும் விதமாக எங்கள் மீது தாக்குதல்

நடத்திவிட்டு எங்களுக்கு எதிராகவே வழக்கு போட்டனர். இது பொய் வழக்கு.

எங்களுக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

ஈழத் தமிழ் அகதிகள் சமர்ப்பித்திருந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி

எஸ்.நாகமுத்து, "ஏற்கனவே மனுதாரர்கள் (ஈழத் தமிழ் அகதிகள்) துன்பத்தில்

இருந்து வருகின்றனர். இதற்கு மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு எதிர்ப்பு

தெரிவிப்பது ஏன் என்று" என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்படி மனுதாரர்கள்

15 பேருக்கும், சொந்த பிணையில் விடுதலை அளித்து உத்தரவிட்டார். விடுதலை

செய்யப்பட்ட இவர்களை பூவிருந்தவல்லியில் உள்ள சிறப்பு முகாமில்

வைக்கும்படி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் சார்பில்

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் ஆஜராகினர் என மேலும் அச்

செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/5616-2010-03-02-05-22-42

Muthamizh

Chennai

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கொலைஞரையாவுடைய ஆட்சியின் கோரத் தாண்டவம். ஒருமாதிரி முள்ளிவாய்க்கால் அழிவுக்கு ஒத்தூதிய ரணம் மாறுமுன் நரபலிக்கலைகிறதோ தமிழ்காக்கும் தெய்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

உது பஞ்சமி கட்டை தனிய வேகாது. யாரையும் கொண்டுதான் போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.