Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு தாராள உலக மயமாக்கல் அளித்த பரிசு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திற்கு தாராள உலக மயமாக்கல் அளித்த பரிசு..

deepika-padukone-awaits-her-forthcoming-karthik-ca-19740013014ad7f004de5092.45825110.jpg

போராடும் குணம் இப்போது இங்கு மிக மிக மக்களிடம் குறைந்து வருகிறது.. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1983களில் ஈழதமிழருக்கான போராட்டம் என பற்றி எரிந்த தமிழகம் இப்போது ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட போராட்ட குணத்தில் பின் தங்கே காணபடுகிறது..நம்மவர்களை நம்பி ஈழத்தோழர்கள் பலர் அழிந்தது தான் மிச்சம்.. காரணம் என்ன?

தாராள உலகமயமாக்கல்

1991 இல் இப்பெரும் பூதம் தமிழகத்தில் நுழைந்ததில் இருந்து .. அடிப்படை தமிழருக்கு உண்டான விருந்தோம்பல் .. மனித தன்மை ஆகியவை சுத்தமாக மாறி போய்விட்டது.. முன்பெல்லாம் சாலையில் அடிபட்டு யாராவது விழுந்துவிட்டால் அங்கு கூடி இருப்போர் உடனடியாக எந்த உயிர் போகும் வேலையாக இருந்தாலும் அதை உடனடியாக நிறுத்திவிட்டு அவருக்கு தேவையான அடிப்படை முதலுதவிகளை செய்வார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் சாலையில் யார் அடிப்பட்டு விழுந்து கிடந்தாலும் எனகென்ன எனக்கென்ன? எவன் செத்தா எனக்கென்ன ? என்றே போகின்றனர்.. அந்த பகுதியில் இருக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு கூட தங்களது செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுப்பதில்லை.. கேட்டால் நமக்கு எதுக்கு சார் வம்பு? எனக்கு ஆபிஸுக்கு லேட்டு ஆயிடும் சார்.. இதுதான் அவர்கள் திருவாயில் இருந்து வருபவையாகும்.

நுகர்வு வெறி கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே துடிக்கிறான் .. இதில் அடிப்படை மனித உரிமையாவது இனமாவது மண்ணாங்கட்டியாவது தனது வாய், தனது மனைவி தனது குழந்தைகள், இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை உலகமயமாக்கம் இவனுக்கு கற்று கொடுத்துள்ளது..

"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் அடைகிறோம்." -அருந்ததிராய்

தமிழகத்தின் நடுத்தர வர்க்கம்

பெரும்பாலும்...

அய்யா தமிழகம் பல சிக்கல்களை சந்திக்கிறது..தமிழினத்தை பல தொல்லைகள் சூழ்ந்துள்ளன .. ஈழதமிழர்கள் கொல்லபடுகிறார்கள் ..நாம் களத்தில் இறங்க வேண்டும்.. என்று கூறி பாருங்கள்..

"சார் எனக்கு வேலையிருக்கு சார்.. அதுக்கெல்லாம் என் தலைவர் இருக்கிறார் சார்.. அவர் பாத்துப்பார்..

உண்மையில் இவர்கள்தான் படு கேவலமான மொள்ளமாறிகள். ஒட்டுண்ணியிலேயே வீரிய வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள்...

வேலை குறித்த பயம், வேலையில் உத்திரவாதமின்மை மற்றும் எப்போது தூக்குவார்கள் குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு செலவு செய்தல், எதிர்வீட்டுகாரன் எதாவது புதிதாக வாங்கினால் மனத்திற்குள் புழுக்கம்..வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் வினோத உறவு முறை.. தனிகுடித்தனம், ஊட்டி வளர்த்த பெற்றோரை உதாசீனம் செய்வது.. முதியோர் இல்லத்தில் சேர்ப்பது..ஓசியில் பினாயில் கொடுத்தாலும் முன்வரிசையில் நிற்பது..

எவளாவது தொலைகாட்சியில் விளம்பரம் என்ற பெயரில் அவிழ்த்து போட்டு அடினால் அதை வாங்கியே தீர்வது என்ற நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக கடன்களை.. இழுத்துப் போட்டுக் கொள்வது,அதற்கு வட்டிக்கு வட்டி கட்டுவது தன்னையே சந்தேகப்படுவது, தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவது - இவையெல்லாம் உலகமயம் தமிழகத்திற்கு தந்த பரிசுகள்..

இவை சில மட்டுமே.. தற்போதைக்கு எழுத முடிந்தது.. தோழர்கள் உலகமயமாக்கல் குறித்து ஆழ்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுகொள்ள முடியும்.. அத்தோடு இப்பெரும்பூதம் ஆடை முதற்கொண்டு உணவு வரை தமிழர்களின் அடிப்படை கலாச்சாரத்தையே மாற்றிவிடும் தன்மை கொண்டதாகும் .. இதை நாம் எதிர் கொண்டே ஆக வேண்டியுள்ளது... அதற்கான தங்களின் கருத்துகளை பதித்து.. விவாதங்களை தொடராலாமே....

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆழ்ந்து நோக்கியுள்ளீர்கள். ஈழத்தமிழர் பிரச்சினை அளவுக்குப் போக வேண்டியதில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது தமிழகத்தில் ஏற்படும் "கொந்தளிப்பை" அவதானித்தாலே போதும், நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் என அறிந்துகொள்ள.

அதுபோல மீனவர்களிலும் ஒரு பகுதியினர் அதீத மீன் ஆசையில் ஈழக்கடலுக்குள் சென்று சிங்களவனிடம் அடிவாங்கித் திரும்புவதும் நுகர்வு வெறியையே காட்டுகின்றது. இழவு வீடென்று தெரிந்தும் அங்கே சென்று இவர்கள் மீன்பிடிப்பது என்னவோபோல் இருக்கிறது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் ஆழ்ந்து நோக்கியுள்ளீர்கள். ஈழத்தமிழர் பிரச்சினை அளவுக்குப் போக வேண்டியதில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது தமிழகத்தில் ஏற்படும் "கொந்தளிப்பை" அவதானித்தாலே போதும், நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் என அறிந்துகொள்ள.

அதுபோல மீனவர்களிலும் ஒரு பகுதியினர் அதீத மீன் ஆசையில் ஈழக்கடலுக்குள் சென்று சிங்களவனிடம் அடிவாங்கித் திரும்புவதும் நுகர்வு வெறியையே காட்டுகின்றது. இழவு வீடென்று தெரிந்தும் அங்கே சென்று இவர்கள் மீன்பிடிப்பது என்னவோபோல் இருக்கிறது. :rolleyes:

அவுஸ்திரேலியாவில ஆரோ வடக்கு பார்சி காரன் செத்தால் உடனே மூக்கால் அழுவார்கள் ஆனால் அவர்களின் சொந்தங்கள் 450 சிங்களவன் போட்டு தள்ளினால் "வாழ்க்கைல எல்லாம் சகஜமப்பா" என்று அட்வைஸ் கொடுப்பார்கள்.

அவர்களை விடுங்கள், ஏழு கோடி ஆட்டு மந்தைகளுக்கு தம்மை மேய்க்கும் திராவிட நாய்க்கும், தம்மை அழிக்கும் பார்சி ஓநாய்க்கும் இடையில் வித்தியாசம் தெரியாது!

அதே நேரம், புரட்சிகர தமிழ்தேசியன், உலகமயமாக்கல் என்பது ஒரு புது விடயமல்ல. அது பல ஆயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் விடயம். அது சரி, மேற்கத்தைய நாட்டவர் வருமட்டும் நமது பெண்கள் மேல் ஆடையே அணியவில்லை என்பது தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்கள் இசைகலைஞன் மற்றும் குளவி தங்கள் கருத்துகளுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.