Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தென்னிலங்ககைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன – சுரேஸ் பிறேமசந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களின் பொருட்கள் சூறையாடப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மீளக்குடியேற்ற மக்கள் குடியிருக்க இடம் இன்றி விடப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களை தமது பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்காவின் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு மக்கள் குடியமர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்ட போதிலும் பல்வேறு காரணங்களைக் காட்டி அம் மக்கள் குடியமர அனுமதிக்கப்படவில்லை.

போர் முடிந்துவிட்டதாக சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது. அவ்வாறாயின் இன்னமும் மக்கள் சுதந்திரமான நடமாட்டம் ஏன் தடுக்கப்படுகின்றது. முட்கம்பி வேலிகளும், மக்களுக்கான தடைகளும் தொடர்வதற்கு எந்தவித அடிப்படைத் தேவைகளும் இல்லை.

கடந்த ஆண்டு வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் படிப்படியாக மீள் குடியமர்வு என்ற பெயரில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் அங்கு அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குந்தியிருக்க இடம் இல்லை. விவசாயம், மீன்பிடி போன்ற தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த மக்களுக்குச் சொந்தமான பொருட்கள் சொத்துக்கள் எல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. பொருட்கள் தொடர்பில் கேட்ட பொழுது அனைத்தும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. உண்மையில் அனைத்துப் பொருட்களும் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

உழவியந்திரங்கள் முதல் மிதிவண்டிகள் மற்றும் தங்க நகைகள் என மக்களுக்குச் சொந்தமான நூற்றாண்டு காலமாக மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்த கோடிக்கணக்காண சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அந்த மக்கள் சொந்தக் காலில் நின்று தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு எந்தவித உதவியினையும் சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை.

ஆனால் தற்போதைய தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விகிதாசார்தைக் குறைப்பதற்கென நூற்றுக்கணக்கான சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் இறக்கியுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் கோடிக்கணக்கான பணத்தினை அரசாங்கம் செலவிடுகின்றது.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. அந்த உயிர்கள் ஒவ்வொன்றினதும் கனவுகள் வீண்போகாது.

சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனநாயக ரீதியாக உழைப்போம்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி எமது மக்களுக்கான தீர்வினை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும், என்று தெரிவித்தார்.

http://www.nerudal.com

தமிழர் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்து, அவர்களை பாதுகாக்கும் வட இந்திய பயங்கரவாதிகளின் பிரதிநிதியிடம் மூவரும் சென்று வாலாட்டிவிட்டு, கொள்ளையடிப்பது மக்களுக்கு தெரியாது என்ற கோதாவில் பேசித்திரியும் உங்கள் சுயரூபங்களை அப்பாவி யாழ் மக்கள் அறிவார்கள்.

இப்பவாவது கண்டு பிடிச்சாரே.... அதுக்கு நண்றி... அடிக்கடி தேர்தல் நடத்துங்கப்பா... ! மக்களின் அவலங்கள் அரசியல் வியாதிகளுக்கு தெரிய வரட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நிருபாமாவிற்கு தெரியாமல்தான் கட்டாயம் இருக்கும். தயவு செய்து அவருடன் பேசும் அவரிடம் இதைபற்றி ஏதும் கூறிவிடாதீர்கள். அந்தம்மா அதை அப்படியே சோனியாவிடம் சென்று கூறினால் பாவம் அந்த பெண்மணி கண்கலங்கியே இளைத்துவிடுவார். துன்பங்களை வன்னிமக்களே சுமக்கட்டும். நீங்கள் இந்திய கொள்கைளை சுமவுங்கள் அதுவே இராஜதந்திரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தென்னிலங்ககைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன – சுரேஸ் பிறேமசந்திரன்

உதுக்குத்தான் சொல்லுறது உங்கட உங்கட சாமானெல்லாத்தயும் நீங்களே கொண்டு போகோணுமெண்டு.....விட்டிட்டு போனபடியாத்தானே உந்தாள் உப்புடிச்சொல்லியெல்லாம் அரசியல் செய்யிது. உந்தாள் வேற கனக்கவும் சொல்லியிருக்கு....வாயபூட்ட வழிபாருங்கப்பா. :)

உதுக்குத்தான் சொல்லுறது உங்கட உங்கட சாமானெல்லாத்தயும் நீங்களே கொண்டு போகோணுமெண்டு.....விட்டிட்டு போனபடியாத்தானே உந்தாள் உப்புடிச்சொல்லியெல்லாம் அரசியல் செய்யிது. உந்தாள் வேற கனக்கவும் சொல்லியிருக்கு....வாயபூட்ட வழிபாருங்கப்பா. :)

எல்லாத்தையும் விட்டு போட்டு வெளியாலை ஓடிவாங்கோ நாங்கள் சொர்க்கத்தை காட்டுறம் எண்டு கூவி கூவி கூப்பிட்ட தாடி மாமா ஒன்டும் சொல்ல இல்லையோ...???

இல்லை உள்ளை இருக்கிறது 50 000 பேர்தான் அதில் எல்லாம் புலிதான் புலியின் உறவினர் மட்டும் தான் எண்டு கணக்கு எல்லாம் சொன்ன கரிநாய்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட்டு போட்டு வெளியாலை ஓடிவாங்கோ நாங்கள் சொர்க்கத்தை காட்டுறம் எண்டு கூவி கூவி கூப்பிட்ட தாடி மாமா ஒன்டும் சொல்ல இல்லையோ...???

இல்லை உள்ளை இருக்கிறது 50 000 பேர்தான் அதில் எல்லாம் புலிதான் புலியின் உறவினர் மட்டும் தான் எண்டு கணக்கு எல்லாம் சொன்ன கரிநாய்...??

தாடிமாமா கரிநாய்...யின்ட செய்தியள் இங்க தணிக்க செய்யப்பட்டிருக்குதாம் வாறேல்ல....வந்தா அதுக்கும் கொமனெழுதலாம்... :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாகம் தமிழீழம்காரர் ஒப்புதல் வாக்குமூலம் குடுத்திட்டினம் , அமெரிக்காவும் கறாரா நிக்குது , தலைவர் இருக்கிறாரோ எண்டதுகூட இண்டைக்கு மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்காம். ஒப்பேத்தினாத்தானே நின்மதியா நித்தா போகலாம். :)

சிங்களவனின் ஆசன வாயிலை நக்கும்....... மதிவதனங்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனின் ஆசன வாயிலை நக்கும்....... மதிவதனங்.

ம்.....அண்ணை ஆசான்...... :)

காவல் தெய்வங்கள் போனபின் தெய்வத்திற்கெங்கே காவல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.