Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

:இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம்

Featured Replies

:இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம்

:wub::wub:

இந்தியாவின் முழுமையான தலையீட்டு டன் இலங்கையில் அதிகாரத்தைப் பரவலாக் கும் புதிய அரசியல் சாசனத்தை அறிமுகப் படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.பிராந்திய ரீதியாக இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தந்திர தேவைகளுக்கு பொருந்தும் வகையில் இலங்கை அரசாங் கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் உயர் மட்ட இராஜதந்திரி களின் விஜயங்களின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு இதனை முழுமைப்படுத்த இந்திய அதிகாரிகளினால் முடிந்துள்ளது. இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூப மா ராவின் இலங்கை விஜயத்தின் போது இதற்கான அடிப்படை இணக்கத்தை ஏற்படுத் தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அரசாங்கம் போர் நடைபெற்ற காலப் பகுதியில் பகிரங்கமாக ஏற்றுக் கொண்ட 13-வது அரசியல் சாசனத் திருத்தத் திற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக் கத்துடனான யோசனைகள் அடங்கிய அரசியல் சாசனத் திருத்தத்தின் ஆவணத்தை இந் திய வெளிவிவகாரச் செயலாளர், இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார் என இராஜதந்திரத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய உடன்படிக்கை அமுலில் உள்ளதால் இந்தியாவினால் இவ்வாறான தலையீடுகளை மேற்கொள்ள முடி யும். இந்தியாவின் இந்த அரசியல் சாசனத் திருத்தத் தை அமுல்படுத்த வழி ஏற்படுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான் மைப்பலத்தைப் பெற்றவுடன் அரசியல் சாசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற் றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி லக்பிம பத்திரிகைக் குச் செவ்வி ஒன்றை வழங்கியிருந்த அமைச் சர் நிமால் சிறிபால டி சில்வா,அமைச்சர்கள் ஜி. எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோ ருடன் இணைந்து புதிய அரசியல் சாசனம் ஒன் றைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் இணக்கத்துடன் கொண்டு வரப்படவுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத் தும் சூழலை ஏற்படுத்துவதே அவரது கருத் தின் உண்மையான நோக்கம் என அரசியல் தரப்பில் பேசப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்றும் அதன் பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட தினம் ஆகிய அரசியல் ரீதியான தீர்க்கமான சந்தர்ப்பங்களில் ஜனா திபதி இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளி விவகாரச் செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஜனாதிபதி சென்றமையானது இலங்கையில் பெரும் அரசியல் ரீதியான சர்ச் சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நெருக்கம் இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவதில் அதிகாரம் மிக்க இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவுக்குப் பெரும் சாதகமாக அமைந் திருக்கலாம் என இராஜதந்திரத் தரப்புக்க ளில் பேசப்படுகின்றது என அதில் கூறப்பட் டுள்ளது

http://www.alaikal.com/

  • கருத்துக்கள உறவுகள்

வானத்திற் காக்கைகள் மல்லாக்காகப் பறக்கும் அதேவேளையில் சூரியனும் மேற்கில் உதிப்பானானால் நிச்சயமாக இந்தியா ராஜதந்திரோபாயங்களின்மூலம் இலங்கைத் தமிழரின் பிரச்சனையை அரசியல் அமைப்பு ரீதியில் தீர்த்து வைக்கும்.

அப்படி நடைபெறவில்லையாயின் இராணுவத் தீர்வைவிட வேறு வழியேயில்லை. மறைந்து விட்ட தேசியத்தலைவனின் தீர்க்கதரிசனமிக்க அணுகுமுறைக்குப் புறம்பாக இந்தியாவின் எந்தக் கொம்பன்களிடமும் இந்தவிடயத்தில் புத்தி சாதுரியம்மிக்க அணுகுமுறை வரப்போவதுமில்லை பிரச்சனை தீரப்போவதுமில்லை.

//பிராந்திய ரீதியாக இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தந்திர தேவைகளுக்கு பொருந்தும் வகையில் இலங்கை அரசாங் கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தெரிவித்துள்ளது.//

//இந்தியாவின் இணக்கத்துடன் கொண்டு வரப்படவுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத் தும்

இதன் அடிப்படையில் தானா சம்பந்தர் குழு தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டது?

இது தேர்தல் காலம் என்பதால், மக்களை குழப்பி ஆதரவைப்பெற ஒன்றுக்கு ஒன்று முரணான அறிக்கைகள் வருவது இலங்கையில் வழமை. தேர்தலின் பின் அரசின் சுயரூபங்கள் வெளிப்படும்.

இதன் அடிப்படையில் தானா சம்பந்தர் குழு தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டது?

100% இதுதான் உண்மை...

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒரு தீர்வை தமிழர்களுக்கு கொடுத்து உடனடியாக மேற்குலகை இலங்கயில் இருந்து தள்ளிவைப்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு....

பின்னர் உங்கட நாடுகடந்த அரசு , வட்டுக்கோட்டை தீர்மானம் எண்ட கோதாரிகள் எல்லாம் தேவை இல்லாதவை... மேற்குலகாலும் யுத்த விதிமீறல், மனித உரிமை பிரச்சினை எண்று எதையும் கையில் தூக்கவும் வளி கிடையாது... இலங்கைக்கு உரிய மரியாதையை உலக அரங்கில் பெற்று கொடுக்க இது போதாதா...??

பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வு கொடுத்த சிங்களவரை எந்த விதி மூலம் தண்டிப்பது...??

இதன் அடிப்படையில் தான் இலங்கை மீதான போர் குற்றம் எனும் பெயரில் மேற்கு தலையிடாது தடுக்க சந்திரிக்காவின்( இந்தியாவின் நெருங்கிய நட்பான) ஆசியில் களம் இறங்கிய பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.